என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi HC"

    • வீடியோவில் கெஜ்ரிவால் கோர்ட்டில் உரையாடியது இடம்பெற்றுள்ளது.
    • வழக்கு விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வழக்கு விசாரணையின் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக வக்கீல் வைபவ் என்பவர் குற்றம்சாட்டி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல செய்துள்ளார். அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கோர்ட்டில் உரையாடியது இடம்பெற்றுள்ளது என்றும், இது கோர்ட்டு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

    9 முதல் 9.30 நிமிடங்கள் வரை அந்த வீடியோ இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் நினா பன்சால், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை இன்று விசாரித்தது. இது தொடர்பாக கெஜ்ரிவால் மனைவி சுனிதா உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையின் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு சுனிதாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    வழக்கு விசாரணையை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல்.
    • இடைக்கால ஜாமின் கேட்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.

    சிபிஐ கைது செய்ததுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. தன்னை சிபிஐ கைது செய்தது, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதையும் எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது. அதேபோல் இடைக்கால ஜாமின் கேட்க மனு மீதான உத்தரவையும் ஒத்திவைத்துள்ளது.

    இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி சிங் "மக்களவை தேர்தலுக்காக மட்டும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 21 நாள் இடைக்கால ஜாமினை அவருடைய வசதிக்காக பயன்படுத்த முடியாது. அது தேர்தலுக்காக மட்டுமே வழங்கப்பட்டது.

    பணமோசடி வழக்கில் ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், டெல்லி உயர்நீதிமன்றம் அந்த ஜாமினுக்கு தடை வழங்கியதுடன், அதற்கான 30 பக்க அளவிலான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    வெறுமென சந்தேகம் இருந்தால் கூட தனி நபரை கைது செய்ய சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது. முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அந்த நேரத்தில் சிபிஐ-யிடம் போதுமான காரணம் இருந்தது. சிஆர்பிசி (CrPC) விசாரணைக்கான கைது செய்ய அனுமதி வழங்குகிறது.

    கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானதால் அவரைக் கைது செய்வது அவசியமானது. சிபிஐ விசாரணையை முடிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் மீது முதல்வர் செல்வாக்கு செலுத்துவார் என்ற நியாயமான அச்சம் உள்ளது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்" என வாதிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி "டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏன் கேட்கக் கூடாது என்பதற்கான காரணத்தை சிபிஐ கொடுக்கவில்லை. சிபிஐ-யின் நிலை தாமதப்படுத்தும் தந்திரம்.

    கெஜ்ரிவால் மீதான சமீபத்திய புதிய ஆதாரம் ஜனவரி 2024 ஆகும். ஜனவரி 2024-க்குப் பிறகு சிபிஐ புதிய ஆதாரத்தை பெறவில்லை. தற்போது சிபிஐ ஜூன் 13-ந்தேதி புதிய ஆவணங்களுடன் வந்துள்ளது. இது எங்கும் பயன்படாது. கைதுக்கு பிந்தைய ஆவணங்கள் கொடுக்க முடியுமா?.

    நீங்கள் 41A நோட்டீஸ் கொடுத்தபோது அதை நீங்கள் சமர்பிக்கவில்லை. அது எங்கே இருக்கிறது?  வாய்மொழியாக மட்டும் சொல்ல முடியாது. முழு விசயத்தின் அடிப்படையில், கெஜ்ரிவாலின் கைதுக்கு நியாயப்படுத்த புதிதாக எதுவும் இல்லை" என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

    • வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
    • புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் புகழேந்தி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த ஐகோர்ட் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக புகழேந்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ்குார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புகழேந்தி அளித்துள்ள மனு மீது விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    மேலும் புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • அகத்தியா பட டீசரில் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் வெளியானது.
    • இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரிகம நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது.

    புதுடெல்லி:

    பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'அகத்தியா' படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடலான 'என் இனிய பொன் நிலாவே' பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன்.

    இதையடுத்து, அகத்தியா பட டீசரில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை வெளியிட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரிகம நிறுவனம் வழக்கு பதிவு செய்தது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது. அந்தப் பாடலுக்கான காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
    • சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதே போல ஆனந்த் சுப்பிர மணியனுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.

    • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
    • ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    மேலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாகவும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று ராபர்ட் வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. முன்ஜாமீன் காலத்தில் 2 பேரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டன.

    இந்நிலையில் அவருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    அந்த மனுவில், ராபர்ட் வதேரா தடயங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    கருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம், 2015-ம் ஆண்டு ஜூலை 1 முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் கவுதம் கெய்தான் மீது கருப்பு பண ஒழிப்பு சட்ட வழக்கு பாய்ந்தது.

    இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கவுதம் கெய்தான் மனு தாக்கல் செய்தார். கருப்பு பண ஒழிப்பு சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தியதை அனுமதிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கெய்தான் மீதான நடவடிக்கைக்கும் இடைக்கால தடை விதித்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அம்மனு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவு, இதுபோன்ற மற்ற வழக்குகளையும் பாதிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். கவுதம் கெய்தானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
    டிடிவி தினகரனின் குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    அதன்பின்னர் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைத்தனர். இதற்காக டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார்.

    இந்த ஆடியோக்கள்  ஜோடிக்கப்பட்டவை என்று கூறிய டிடிவி தினகரன், தன் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் பரிசோதனை தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குரல் பரிசோதனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #TTVDhinakaran
    ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. #DelhiHC #ADMK
    புதுடெல்லி:

    அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.



    ஆனால், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #DelhiHC #ADMK
    இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

    இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

    பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.



    இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran 
    இரட்டை இலை சின்னத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கியது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. #DoubleLeafSymbol
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

    இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில்,  நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.



    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். #DoubleLeafSymbol

    ×