என் மலர்
நீங்கள் தேடியது "Delhi"
- அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
- கெஜ்ரிவால் மகளின் திருமணம் ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று திருமணம் செய்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார்
இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.
- பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
- பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
டெல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒரு இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் டெல்லியைச் சேர்ந்த 24 வயது பிரியங்கா. தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வாட்டர் பார்க் -க்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை, பிரியங்காவும் நிகிலும் மதியம் 1 மணியளவில் கேளிக்கை பூங்காவிற்கு வந்தனர். மாலை ஆறு மணிக்கு இருவரும் ரோலர் கோஸ்டரில் ஏறினார்கள்.
ஊஞ்சல் அதன் உச்சத்தை அடைந்தபோது, பிரியங்காவைத் தாங்கி நின்ற ஸ்டாண்ட் சரிந்து, அவர் தரையில் விழுந்தார். பிரியங்கா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரியங்காவுக்கும் நிகிலுக்கும் ஜனவரி 2023 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் பிப்ரவரி 2026 இல் திட்டமிடப்பட்டது. பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
- பள்ளி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை.
- பாஜக அரசு மவுனப் பார்வையாளராக உள்ளது.
டெல்லியில் பாஜக அரசு, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், டெல்லி கல்வி முறை "கல்வி மாஃபியா"க்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறியதாவது:-
டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை. நீண்ட நேரம் மின்சார தடை எற்பட்டு வருகிறது. தற்போது, கல்விக் கட்டணத்தை உயர்த்தி தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து கொள்கை அடிக்கின்றன.
பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். அதிகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்தவில்லை என்றால், மாணவ-மாணவிகள் வக்குப்பறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை. பாஜக அரசு மவுனப் பார்வையாளராக உள்ளது.
இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி "ஆம் ஆத்மி 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதை நிறுத்தியது, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் கொள்ளைடியக்க தனியார் பள்ளிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது" என்றார்.
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியது.
- உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து
212 கி.மீ நீளமுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைப் பணியை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடு தடையாக உள்ளது.
1998 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியம் தனது நிலத்தை கையகப்படுத்த முயற்சித்ததை எதிர்த்து வீர்சென் சரோஹா என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம் வீர்சென் சரோஹாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
இப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக அவரது நிலத்தை கையகப்படுத்தியதால், வீர்சென் சரோஹாவின் பேரன் லக்ஷயவீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து. ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட்டவுடன், டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
26 வருடத்திற்குப் பிறகு டெல்லி சட்டமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா பெண்களுக்கு அதிகாரமளித்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார்.
நிதித்துறையை வைத்திருக்கும் ரேகா குப்தா இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-
* டெல்லியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூலதன செலவு 28 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* யமுனை நதியை சுத்தம் செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 40 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பரவலாக்குவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே ஆற்றில் நுழைவதை உறுதி செய்யப்படும்.
* பழைய கழிவு நீர் குழாய்களை மாற்றுவதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு 6874 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் ஊழலை தடுப்பதற்கு பிங்க் கலர் டிக்கெட் வழங்குவதற்குப் பதிலாக கார்டு வழங்கப்படும்.
* மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் பாதுகாப்பிற்காக டெல்லியில் கூடுதலாக 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
* 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் 1,200 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். இதற்கான 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நரேலா பகுதியில் புதிய கல்வி முனையம் அமைக்கப்படும்.
* 40 கோடி ரூபாயில் பும்மன்ஹெரா பகுதியில் நவீன கோசாலைகள் அமைக்கப்படும்.
பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:-
இந்த பட்ஜெட் நாட்டின் தலைநகரான டெல்லியின் வளர்ச்சிக்கான முதல்படி. கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் டெல்லி பின்தங்கியுள்ளது. முந்தைய அரசாங்கம் தேசிய தலைநகரின் பொருளாதார ஆரோக்கியத்தை கரையான்களைப் போல அழித்துவிட்டது.
இது வெறும் பட்ஜெட் மட்டுமல்ல. டெல்லியின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை. இந்த பட்ஜெட்டில் சில இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இப்போது டெல்லி வெற்றி வாக்குறுதிகள் கொண்டதாக இல்லாமல் நம்பிக்கையின் நகரமாக இருக்கும் ரேகா குப்தா தெரிவித்தார்.
இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.
கடந்த முறை ஆம் ஆத்மி தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பை விட இந்த முறை மொத்த பட்ஜெட் மதிப்பு 31.5 சதவீதம் அதிகமாகும்.
- ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
- மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.
தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.
தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- பெரிய பெரிய பெட்டிகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
- ரூ.37 கோடி வரை பணம் இருந்திருக்கலாம்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினறர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் ரூபாய் நோட்டு கட்டுகள் சிதறி கிடந்தன. தீப்பிடிக்காத பெரிய பெரிய பெட்டிகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த அறைக்குள் பெட்டிகளில் கட்டு கட்டாக ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுபற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது என்னுடைய பணம் அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார். மேலும் பணம் கண்டெடுக்கப்பட்ட அறை தன்னுடைய வீட்டின் ஒரு பகுதி இல்லை என்றும் அவர் எழுத்து மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிபதிகள் குழு என்றாலும் இந்த விவகாரத்தில் உண்மை கண்டறிய 4 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை முடிவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா பயன்படுத்தும் செல்போனை ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் வீட்டில் தீப்பிடித்த தினத்தன்று அவர் யார்-யாருடன் பேசி இருக்கிறார் என்பதை கண்டறிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுவரை செல்போன் தகவல்கள் எதையும் நீதிபதி யஷ்வந்த் வர்மா அழிக்கவோ அல்லது யாருக்கும் அனுப்பவோ கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும்வரை பணியாற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம் - நீதிபதிக்கு கிடுக்குப்பிடி
- பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
- ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.
"அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
- தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.
டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான ஜகதீப் தன்கர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டுள்ளதால் இன்று (மார்ச் 12) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு துணைத் தலைவரின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடிவாங்கிய நபரின் மகன் தனது மகளுடன் ஓடிப்போய்விட்டதாக கூட்டத்தில் தனது குறையை கூறினார்.
- மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை கீழே இறக்கி அனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி:
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண் அவரது காதலன் அப்தாப் பூனாவாலா படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு டெல்லியின் சத்தர்பூரில் உள்ள இந்து ஏக்தா மஞ்ச் என்ற இந்து அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண், மைக்கில் பேசினார். அப்போது அவர் திடீரென அருகில் நின்றிருந்த நபர் ஒருவைரை செருப்பால் தாக்குகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
#WATCH | Chattarpur, Delhi: Woman climbs up the stage of Hindu Ekta Manch's program 'Beti Bachao Mahapanchayat' to express her issues; hits a man with her slippers when he tries to push her away from the mic pic.twitter.com/dGrB5IsRHT
— ANI (@ANI) November 29, 2022
அதில் ஒரு பெண், நீல நிற துப்பட்டவால் முகத்தை பாதி மூடிய நிலையில் பேசுகிறார். அருகில் ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபரின் மகன் தனது மகளை அழைத்துக் கொண்டு ஓடிப்போய்விட்டதாக கூட்டத்தில் தனது குறையை கூறினார். மேலும் தனது மகள் காணாமல் போனது குறித்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தாகவும், தன்னை அலைக்கழித்ததுடன், தனது குறையை கேட்கவில்லை என்றும் கூறினார். பின்னர் திடீரென தனது செருப்பை கழற்றி அந்த நபரை தாக்குகிறார். மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை மேடையில் இருந்து இறக்கினர்.
தாக்கப்பட்ட நபர் மேடையில் அந்த பெண்ணுக்கு அருகில் நின்று தனது மகனுக்கு எதிரான புகாரை பகிர்ந்து கொள்வதைத் தடுக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.
- பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
- டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,
டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.