என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delusion"

    • பண்ருட்டியில் தனியார் கம்பெனி ஊழியர் மாயமானார்.
    • இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரதுமகன் வினோத்குமார் ( வயது30 ). இவர்புதுவைதிருவண்டார்கோவில் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. அவரதுசெல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ரங்கநாதன்புதுப்பேட்டைபோலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன வாலிபரை தீவிரமாக தேடி வருகிறார்.

    • ரஜினிகாந்த் (வயது 45). இவர் மணக்குப்பத்தில் ஸ்டார் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை உறவினர்கள் வீடுகளிலும் பல்வேறு பகுதிகளிலும் தேடியுள்ளார்.


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மனக்குப்பம் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 45). இவரது மனைவி வனிதா (36) இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். இவர் மணக்குப்பத்தில் ஸ்டார் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2ந் தேதி பெரியசோலையில் உள்ள கல்பரதேசி சித்தர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை உறவினர்கள் வீடுகளிலும் பல்வேறு பகுதிகளிலும் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் வனிதா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார்.
    • இவரின் மனைவி , காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எடையார் பாளையம் மாரியம்மன் கோவில் வடக்குவீதியைச்சேர்ந்தவர் ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது புதுச்சேரி சென்று வரும் இவர், மாதம், மாதம் தனது மனைவி கோவிந்தம்மாளுக்கு சம்பளம் பணத்தை அனுப்பி வந்துள்ளார்.   கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி சென்று விட்டு, காரைக்கா லுக்கு வேலைக்கு செல்வ தாக கூறி காரைக்கால் வந்துள்ளார்.  கடந்த 3-ந் தேதி, மனை விக்கு போன் செய்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். அதற்கு வீட்டுக்கு வரும்படி மனைவி கூறியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த 5-ந் தேதி ஓட்டலில் இருந்து காரைக்கால் நகர் பகுதிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜு, அன்று இரவு வரை ஓட்டலுக்கு திரும்பவில்லையென கூறப்படுகிறது   ஓட்டல் உரிமையாளர் மூர்த்தி, கோவிந்தம்மாளுக்கு போன் செய்து, ராஜு, புதுச்சேரி வந்தாரா என கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் புதுச்சேரி வரவில்லையென கூறியுள்ளார். பின்னர், 7-ந் தேதி கோவிந்தம்மாள் காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.  இது குறித்து, கோட்டுச்சேரி போலீசில், ராஜுவை தேடி கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

    • 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை‌

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர் இளம்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்
    • கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை

    கடலூர்:

     பண்ருட்டி அடுத்த அன்னங்காரன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் சிநேகா (22). இவர் பி.எஸ்.சி.நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.    கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை. அக்கம்,பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசில் சிநேகாவின் தந்தை தனசேகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிநேகாவை தேடி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் கூத்தக்குடி மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இந்த மளிகை கடையை இவரது மனைவி பேபி ஷாலினி (41) நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • அமுதா (வயது 40). இவரது கணவர் இறநது விட்டதால் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
    • வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் பிரியதர்ஷினியை (19) காணவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி அமுதா (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டதால் தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா விவசாய வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள்    ரியதர்ஷினியை (19) காணவில்லை. இவர் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.   அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அமுதா தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் சங்கராபுரம் அருகே பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் குருபாலன் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார்.
    • மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்

    • கனகவள்ளி (வயது 22). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி தந்தை சுப்ரமணியுடன் செஞ்சியில் உள்ள அரசு பேங்கிற்கு சென்றனர்.
    • கனகவள்ளி கூட்டுரோடு அருகே கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கனகவள்ளியை தேடினார்.தேடியும் கிடைக்காததால்,போலீஸில் புகார் கொடுத்தார்,

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே சென்னாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் கனகவள்ளி (வயது 22). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி தந்தை சுப்ரமணியுடன்செஞ்சியில் உள்ள அரசு பேங்கிற்கு சென்றனர்.

    இதனையடுத்து கனகவள்ளி கூட்டுரோடு அருகே கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சுப்ரமணி கனகவள்ளியை தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கனகவள்ளி கிடைக்க வில்லை. இது குறித்து சுப்பிரமணி செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகுமாரின் மகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
    • தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ள்க்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ந் தேதி இரவு சசிகுமார் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகள், மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையுடன் மகள் மாயமானதால் விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த வர்கள் மாரியப்பன், பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களது மகள் மகாலட்சுமிக்கு எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால் மகாலட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருகில் வசித்த வீரமுனீஸ்வரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியே சென்ற மகா லட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்ச வர்ணம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹபிபுனிஷா வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அவுலியா நகர் பனங்காட்டுத் தெருவை சேர்ந்தவர் சையத் முகமத் மனைவி ஹபிபுனிஷா (வயது 22). வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார். இதுவரை வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

    ×