என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dictator"
- போதைப்பொருளை ஒழிக்க முதல்வர் சர்வாதிகாரியாக மாற தேவையில்லை என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
- முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.
மதுரை
மதுரை கல்லூரி மைதானத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா நடந்தது.
கிரிக்கெட் போட்டிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு தேசியக்கொடிகளை பரிசாக வழங்கினார். பின்னர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
75-வது சுதந்திர தின விழாவை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தேசபக்தியுடன் தேச ஒற்றுமையை பாதுகாக்க செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது. ஏனென்றால் தமிழக அரசும், முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு சமமானது. தமிழக போலீசை சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மிகவும் திறமை மிக்கவர்கள். அவர்களை சுதந்திரமாக செயல்பட்டால் சட்டம்- ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காப்பார்கள்.
போதைப் பொருள் தடுப்பு விஷயத்தில் அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என பேசியுள்ளார். போதைப்பொருள் தடுப்பு விஷயத்தில் அதிகாரிகளிடம் சர்வாதிகாரியாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சரியான உத்தரவை, சரியான நேரத்தில் சரியான அதிகாரிகளுக்கு பிறப்பித்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்