என் மலர்
நீங்கள் தேடியது "district secretaries"
- மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் :
அ.தி.மு.க., ஓபிஎஸ் அணியில் தாராபுரத்தை சேர்ந்த டி. டி. காமராஜ் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம், உடுமலை மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் பொறுப்பளாராக செயல்படுவார். மற்றொரு மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என அ.தி.மு.க. ஓபிஎஸ். அணியின் தலைமை அறிவித்து உள்ளது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்று கொண்ட பின் டி.டி. காமராஜ் தாராபுரம் வந்தபோது புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
- பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தகவல்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமீபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் இன்று (வெள்ளிக் கிழமை) ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு விழாவின்போது எத்தனை கொண்டாட்டங்கள் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தவெகவில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
- கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன் உள்ளிட்டோர் நியமனம்.
- திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம்..
தமிழக பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன், திருப்பூர் வடக்கு- கேசிஎம்பி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மேற்கு- ஜெயராமன், திருவண்ணாமலை வடக்கு- கவிதா, ராணிப்பேட்டை- நெமிலி ஆனந்தன், கிருஷ்ணகிரி மேற்கு- நாராயணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மேற்கு- ராமச்சந்திரன், திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தவெகவுக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
- விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவும் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை அருகே பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசிய அவர் தனது அரசியல் பயணம் புத்துணர்ச்சியுடன் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணிகளை செய்வதற்கு என்று மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியையும் அவர் உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
இதைதொடர்ந்து, இன்று 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்கள் விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
- 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு.
- 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவும் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை அருகே பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசிய அவர் தனது அரசியல் பயணம் புத்துணர்ச்சியுடன் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணிகளை செய்வதற்கு என்று மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியையும் அவர் உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
இதைதொடர்ந்து, 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்களின் 3ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி கிழக்கு, சேலம், கோவை, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்கள் விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும், தவெகவின் புதிய மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முடிவு.
- புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்ட சபை பொதுத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க. வியூகம் வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கேற்ப கட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு வசதியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்து இருந்தார். இந்த குழுவில் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழு அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கூடி தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தது.
அது மட்டுமின்றி எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை நிலவுகிறது என்பதையும் கேட்டறிந்தனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களை தனியாக அழைத்தும் கட்சி நிலவரங்களை கேட்டு வந்தார்.
இளைஞரணி அமைப்பாளர்களிடம் விவரங்கள் கேட்டறிந்து வந்தார். மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? கட்சிக்காரர்களுக்கு அமைச்சர்கள் உதவுகிறார்களா? மதிக்கிறார்களா? என்று பல்வேறு தகவல்களை கேட்டறிந்து வைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் கட்சியை மேல்மட்ட அளவில் சீரமைக்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பல்வேறு முடிவுகளை மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் முடி வெடுத்திருந்தார்.
அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில் சென்னையில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும், மற்ற மாவட்டங்களில் 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்தது.
அதாவது ஒரே பாராளுமன்ற தொகுதிக்குள் மாவட்டங்கள் அமையும் வகையில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலை முதலில் ஏற்றுக் கொள்ளாமல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால் இப்போது 2026-ம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு வசதியாக கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளார்.
அதன் முதல் நடவடிக்கையாக தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் என்று இருப்பதை 76 மாவட்டங்களாக பிரித்துள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் மத்திய மாவட்ட மும், திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்க ளும், விழுப்புரத்தில் மத்திய மாவட்டம் என 4 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.
இதன் மூலம் தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்திருந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி வழங்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்காக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், வானூர் ஆகிய 2 தொகுதிகளை பிரித்து விழுப்புரம் மத்திய மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டத்துக்கு டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ. மாவட்ட செய லாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரும் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்தான்.
இதேபோல் திருப்பூரில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்களாக செயல் பட்ட தி.மு.க.வில் கிழக்கு, மேற்கு ஆகிய 2 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இதில் தெற்கு மாவட் டத்தில் இருந்த காங்கேயம், தாராபுரம் ஆகிய 2 தொகு திகளை பிரித்து மேற்கு மாவட்டம் உருவாகி உள்ளது. இந்த மாவட்டத் துக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாவட்ட செயலாளராகி உள்ளார்.
வடக்கு மாவட்டத்தில் இருந்து பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய 2 சட்டசபை தொகுதிகளை பிரித்து கிழக்கு மாவட்டமாக்கி அதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலளாராகி உள்ளார். அவர் வகித்து வந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இல.பத்மநாபன் தொடர்கிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ.விடம் இருந்த மதுரை மேற்கு தொகுதி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி வசம் வந்துள்ளது.
இதேபோல் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக் கப்பட்டு வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதே போல் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ.வுக்கு பதில் பட்டுக்கோட்டை பழனி வேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செய லாளராக இருந்த முபாரக் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு கே.எம்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்த மைதீன்கானுக்கு பதிலாக பேட்டை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. நியமிக்கப் பட்டுள்ளார்.
இன்னும் தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கரூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அமைப்பு ரீதியாக தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ஏற்ப அடுத்தடுத்த நாட்களில் அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தெரிகிறது.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin