search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravidian model"

    • பெட்ரோல் குண்டு வீ்சி பா.ஜ.க.வினரின் பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
    • பா.ஜ.க. தொண்டர்களை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறோம்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தமிழகத்தில் என்.ஜி.ஓ.க்கள் எதிர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த என்.ஜி.ஓக்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. எல்லோருமே அமைதியாக இருக்கின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவில் காப்பரின் விலை 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. காப்பர் விலை ஏற்றத்தால் அதை சார்ந்த பொருட்களின் விலையும் ஏறியுள்ளது.

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீ்சி இருப்பதோடு, பா.ஜ.க.வினரின் பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. தொண்டர்களை நாங்கள் அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறோம். தமிழ் மாடலா?, திராவிட மாடலா? என்பதை விவாதிக்க பா.ஜ.க. எப்போதுமே தயாராக இருக்கிறது.

    70 ஆண்டுகளில் தி.மு.க.வின் சாதனை திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். அதையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் பொன்முடி நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் பா.ஜ.க. மாநில துணை தலைவர் ஒருவர் அவருடன் விவாதிக்க தயாராக வருவார்.

    அதே போல் தி.மு.க. தலைவர் எப்போது தயார் என்றாலும் அவர் குறிப்பிடும் இடத்துக்கு நான் வருகிறேன். இவை அனைத்தையும் நேரலையில் மக்கள் பார்க்க வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பயிற்சி பாசறை இன்று காலை தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கானோர் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை இன்று காலை தொடங்கியது. திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், மாநகராட்சி மேயர்தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர்பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். காணொலிகாட்சி மூலமாக ஆயிரக்கணக்கானோர் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்றனர்.

    • தமிழக மக்களை எவ்வாறு திராவிட உணர்வுடன் வழி நடத்தி சென்று அரசியல் பயணத்தை தொடர வேண்டும்
    • தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல்பயிற்சி பாசறை நடத்திட வேண்டுகோள்

    திருப்பூர் :

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்வர், கழக தலைவர், தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நீதிக்கட்சி தலைவர்கள்ஆகியோர் வகுத்து கொடுத்த திராவிட கொள்கை மற்றும் செயல்பாடுகளை இன்றைய திராவிட தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து அதன்படி எதிர்காலத்தில் திராவிட கொள்கையால் தமிழகத்தையும், தமிழக மக்களையு ம்எவ்வாறு திராவிட உணர்வுடன் வழி நடத்தி சென்று அரசியல் பயணத்தை தொடர்ந்திட தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல்பயிற்சி பாசறை நடத்திட வேண்டு கோள்விடுத்ததை அடுத்து திருப்பூர் மத்தியமாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் ராஜாராவ் வீதியில் அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் 19.6.2022(ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை9மணிக்கு திருப்பூர் மத்திய மாவட்டக் கழகப்பொறுப்பாளரும், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினருமான க.செல்வராஜ்எம்.எல்.ஏ., ஆகிய எனது தலைமையில் மாநகர பொறுப்பாளர்கள்டி.கே.டி.மு.நாகராசன், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர்முன்னிலையிலும் நடக்கிறது.

    அதேபோல் திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் எம்.எல்.ஆர். திருமணமண்டபத்தில் ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலையிலும்,வேலம்பாளையம் பகுதி, காந்தி நகர் முத்தனச்செட்டியார் மண்டபத்தில் பகுதிபொறுப்பாளர் கொ.ராமதாஸ் முன்னிலையிலும், அண்ணா காலனி பகுதி,புதியபேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காமாட்சியம்மன் செங்குந்தர்மணடபத்தில் பகுதி செயலாளர் அ.செல்வராஜ் முன்னிலையிலும், பாண்டியன்நகர் பகுதி, வாவிபாளையம் கொங்கு கலையரங்கத்தில் பகுதி செயலாளர்வெ.ஜோதி முன்னிலையிலும், கொங்கு நகர் பகுதி, கருணாகரபுரி சர்கார்பழனிசாமி மண்டபத்தில் பகுதி செயலாளர் போலார் சம்பத்குமார்முன்னிலையிலும் நடக்கிறது

    வாலிபாளையம் பகுதி, மன்னரை உமையாள் மண்டபத்தில்பகுதி செயலாளர் மு.க.உசேன் முன்னிலையிலும், நல்லூர் பகுதி, காங்கயம் ரோடுகாயத்திரி மஹாலில் பகுதி பொறுப்பாளர் மேங்கோ அ.பழனிசாமிமுன்னிலையிலும், கருவம்பாளையம் பகுதி, ஏபிடி ரோடு, விஸ்வகர்மா திருமணமண்டபத்தில் பகுதி செயலாளர் மியாமி அ.அய்யப்பன் முன்னிலையிலும் திராவிடமாடல் பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர்சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    எனவே திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதிமற்றும் வட்ட, ஊராட்சி உட்கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணிஅமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச. நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், உடன் பிறப்புகள் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் நடைபெறும்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி உடன்பிறப்புகள் தவறாதுவெண்சீருடை அணிந்து கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×