என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drugs Case"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
    • போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

    • போலீசாரின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
    • நில பிரச்சினையில் கட்டுமான அதிபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவரை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    மும்பை:

    மும்பை கார் பகுதி போலீஸ் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு படை பிரிவை சேர்ந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் நேற்று முன்தினம் மாலை கலினா பகுதியில் சோதனை நடத்தினர். பின்னர் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் டேனியல் என்பவரை கைது செய்தனர்.

    இந்த சோதனை நடவடிக்கை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதில் சோதனைக்கு வந்த போலீசாரே டேனியலின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட டேனியல் விடுவிக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டேனியல் கூறுகையில், "போலீசார் முதலில் என்னை போதைபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போவதாக மிரட்டினர். ஆனால் அவர்களின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது தெரிந்தவுடன் என்னை விடுவித்துவிட்டனர்" என்றார்.

    இதேபோல டேனியலின் நண்பர் கூறுகையில், "நில பிரச்சினையில் கட்டுமான அதிபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவரை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றனர்" என குற்றம் சாட்டினார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வழக்கில் தொடர்புடைய 4 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் ராஜ்திலக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "முறையான சோதனை நடைமுறையை பின்பற்றாததற்காகவும், வீடியோவில் இருப்பதுபோல சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் காரணமாகவும் 4 போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையை முறையாக நடத்த அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

    திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஆதிகேசவலு நாயுடு. இவர் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார்.

    இவரது மகன் சீனிவாஸ் (வயது 45). இவர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீனிவாசனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் பெங்களூரில் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

    இதையடுத்து சீனிவாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    சீனிவாஸ் கைது குறித்து போலீசார் கூறுகையில்:-

    ஐதராபாத் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய பிரமுகர்களுக்கு சீனிவாஸ் போதை பொருள் சப்ளை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சீனிவாஸ் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைபொருட்கள் சப்ளை செய்தது உறுதியானது.

    இதையடுத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×