என் மலர்
நீங்கள் தேடியது "Eknath Shinde"
- அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார்.
- நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
எல்லோரும் அதையே விரும்புவதாகவும் அதை சட்டப்படி செய்வோம் என்றும் மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார். இதற்கிடையே இந்த பிரச்சனை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில் நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் உள்ள கர்தா சௌக்கில் நிறுவப்பட்ட சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று ஷிண்டே கூறினார்.
சத்ரபதி சிவாஜி, ஒன்றுபட்ட இந்தியாவின் பெருமையும், இந்துத்துவத்தின் கர்ஜனையுமாகும். சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சகாப்தத்தின் மனிதர், நீதியை ஊக்குவிப்பவர் மற்றும் சாமானிய மக்களின் மன்னர்.
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வரலாற்றை தொடர்ந்து நினைவூட்டும் விதமாக இந்த சிலை செயல்படும். இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் சிவாஜி மகாராஜின் துணிச்சல் மற்றும் நிர்வாகத்தின் மதிப்புகளை அறிந்துகொள்ள ஊக்கமளிக்கும். இந்த கர்தா சௌக் இனி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக் என்று அழைக்கப்படும் என்று ஷிண்டே கூறினார்.

இதை கேட்டு பரவசம் அடைந்த கூட்டத்தினர் "ஜெய் பவானி, ஜெய் சிவாஜி" என்ற கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே அவுரங்கசீப் கல்லறை பாபர் மசூதியை போல வேரோடு பிடுங்கி எறியப்படும் என இந்து அமைப்புகள் சூளுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
- ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.
- சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
மும்பை :
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று அவர் அகோலாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
துரோகிகளை கொண்ட மராட்டிய அரசு வரும் மாதங்களில் கவிழும். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஷிண்டே தலைமையிலான அரசு 4 மிகப்பெரிய தொழில் திட்டங்களை இழந்து உள்ளது. அந்த திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதன் மூலம் மராட்டியம் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளது.
ஷிண்டேக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவரால் மராட்டியம் தொழில் முதலீடு வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறது.
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேயா அல்லது தேவேந்திர பட்னாவிசா என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது. சட்டவிரோதமாக அமைந்த இந்த அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
- மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர்.
நாந்தெட் :
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி ஆட்சி, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் அதிருப்தியால் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேரின் உதவியுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் நாந்தெட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஏன் இன்னும் மந்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை? ஏன் என்றால் அவ்வாறு செய்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஊழல் மற்றும் அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். என்ன நடக்கிறது எந்த மராட்டியத்தில்?.
முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவர் உள்பட தற்போது பதவியில் உள்ள பல மந்திரிகளும் மகா விகாஸ் அகாடி அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதாவில் தலா 9 மந்திரிகள் உள்ளனர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக 43 மந்திரிகள் வரை இருக்கலாம்.
- சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
- அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.
நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
தானே :
தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.
பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.
இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினார்.
- ஷிண்டே அணியினர் தாங்களாகவே விலகிச் சென்தால் உரிமை கோர முடியாது என்று உத்தவ் குறிப்பிட்டார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
அதன்பின்னர் சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.
இதேபோல் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். 'ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,' என்று உத்தவ் குறிப்பிட்டார்.
இரு தரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இன்று உத்தரவு பிறப்பித்தது. உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா தான் சட்டப்பூர்வமான சிவ சேனா என்று கூறியது. அத்துடன், சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட உத்தவ் தரப்பு முடிவு செய்துள்ளது.
- சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
- ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.
அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.
இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.
இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.
உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.
- பா.ஜனதா சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகிறது.
- கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருட முடியும்.
உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
பா.ஜனதா சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகிறது.
எங்களின் கட்சி பெயர், சின்னத்தை திருடியது மிகப்பெரிய சதித்திட்டம். கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருட முடியும். தாக்கரே என்ற பெயரை யாரும் எங்களிடம் இருந்து திருட முடியாது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி என்னை தொடர்பு கொண்டு ஆதரவாக பேசினர். பீகார் நிதிஷ் குமாரும் தொடர்பு கொண்டார். அவரின் அழைப்பை எடுக்க முடியாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சிவசேனாவின் கட்சி நிதி குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே அளித்த பதிலில், "கட்சி நிதி பரிமாற்றம் குறித்து பேச தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை, அது ஒரு சுல்தான் போல செயல்பட முடியாது. நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும், அரசியல் கட்சிக்குள் உள் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் மட்டுமே அதன் பங்கு உள்ளது.
கட்சி நிதி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டால், கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என்றார்.
சிவசேனாவின் பல்வேறு சொத்துக்களை ஷிண்டே பிரிவினர் கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு, "எனது தந்தையின் (மறைந்த பால் தாக்கரே) பெயரையும், அவரது புகைப்படத்தையும் பயன்படுத்துவதை நிறுத்த அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?. அவர் (ஷிண்டே) அவரது தந்தையின் புகைப்படத்தை வைத்து வாக்கு கேட்கட்டும்" என்றார்.
- சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
- ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியது.
மும்பை:
சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், பாராளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
- சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
- சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்.
மும்பை :
மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை அவதூறாக பேசியதாக தானேயில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்பபெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஷிண்டே தரப்பு மறுத்து உள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், "சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் சஞ்சய் ராவத் இதேபோல பல குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அதில் எந்த ஆதாரமும் இருக்காது. அவர் கூறுவது போல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒருபோதும் செய்ய மாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்படும்" என்றார்.
சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், "இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த துரோக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அடங்குவதில்லை. மாகிமில் ஒரு எம்.எல்.ஏ. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
- கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்
- மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான்.
மும்பை :
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்தது. யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது.
ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்த போதும், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே வகித்து வரும் கட்சி தலைவர் (சிவசேனா பக்சா பிரமுக்) பதவியை ஏற்பதை தவிர்த்து உள்ளார்.
கட்சி உடைந்த போது ஏக்நாத் ஷிண்டே அவருக்கு முதன்மை தலைவர் (முக்கிய நேத்தா) என்ற பதவியை உருவாக்கி கொண்டார். தொடர்ந்து அவர் அந்த பதவியில் நீடிக்க உள்ளார். உத்தவ் தாக்கரே வகித்து வரும் பதவியை தற்போது எடுத்துகொண்டால், அது தாக்கரே மீது மக்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பக்சா பிரமுக் பதவியை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கட்சியில் அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஏக்நாத் ஷிண்டே வசம் தான் இருக்கும் என அவர் தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு செய்தி தொடர்பாளர் சீத்தல் மாத்ரே கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தான் எங்கள் முதன்மை தலைவர். தொடர்ந்து அவர் அந்த பதவியில் இருப்பார். எங்கள் செயற்குழுவிடம் எல்லா உரிமைகளும் உள்ளன. கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்" என்றார்.
ஷிண்டே தரப்பை சேர்ந்த மூத்த தலைவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை அவரது பதவியில் இருந்து நீக்கி எந்த அறிவிப்பையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை. மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான். ஏக்நாத் ஷிண்டேவை தலைவராக நியமித்தால் அது தவறாக போய்விடும். தாக்கரே தரப்புக்கு அனுதாப அலையால் ஆதாயம் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். இந்த அடிப்படையில் சிவசேனா பவன், சாக்கா அலுவலகங்களை உரிமைகோர மாட்டோம் என ஏக்நாத் ஷிண்டே கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்" என்றாா்.
சிவசேனா தலைவர் பதவி விவகாரத்தில் ஷிண்டே சிவசேனாவினர் பாதுகாப்பாக காய்நகர்த்தி இருப்பதாக உத்தவ் தாக்கரே அணி செய்தி தொடர்பாளர் மனிஷா காயன்டே கூறியுள்ளார்.