என் மலர்
நீங்கள் தேடியது "Election commission"
- 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 133 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
- இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.
அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்
இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஏப்ரல் 30-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.
- கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு.
புதுடெல்லி:
போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை எழுப்பினார்.
கடந்த சில ஆண்டுகளாக சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாக்காளர் பட்டியல் இந்திய பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நிலையில் ஏதாவது தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குகள் ஆலோசனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டப்படி தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துமாறும் சட்டத்துக்கு உட்பட்டு பெறப்படும் ஆலோசனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன.
- செயல்படாத கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்பாடில்லாத பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அந்த கட்சிகளுக்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 23 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்தது.
உரிய கால அவகாசத்தில் விளக்கம் அளிக்காத நிலையில், அக்கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விளக்கம் மற்றும் கணக்குகளை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் அந்தக் கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. அந்த விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவை தவிர, எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாமல், கமிஷனிடம் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் உள்ள 22 கட்சிகளை செயல்படாத கட்சிகளாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்தக் கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
- அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் தேர்தல் ஆணையராக நியமனம்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். மேலும் மற்றொரு தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல்ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன, கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார். விருப்ப ஓய்வின் கீழ் அண்மையில் அவர் ஓய்வு பெற்றார்.
- 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
அகமதாபாத் :
182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.
19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது.
இதன்மூலம் மொத்தம் 63.14 சதவீத வாக்குகள் இறுதியில் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
இந்த தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 78.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
பழங்குடியினரின் ஆதிக்கம் மிகுந்த மற்றொரு மாவட்டமான தபி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் முறையே 76.91 மற்றும் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது.
மாநிலத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பின்னர் 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
- இமாசலபிரதேசத்தில் நகர்புற வாக்காளர்களில் பலர் ஓட்டுப் போடவில்லை.
- சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் காந்திதாம் தொகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.
இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ந் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் ஒன்றாம் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட தேர்தல் 5ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இமாசலபிரதேசத்தில் நகர்ப்புற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்களிக்கவில்லை. சிம்லாவில் 62.53 சதவீத வாக்குகளே பதிவாகின. கடந்த தேர்தலைக் காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு. குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகரங்களில் நடந்த வாக்குப்பதிவு, அங்குள்ள வாக்காளர்கள் அக்கறையின்றி இருப்பதையே காட்டுகிறது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக காணப்படுகிறது. காந்திதாம் தொகுதியில் மிகக்குறைந்த அளவாக 47.8 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 6.34 சதவீதம் குறைவு. அடுத்தபடியாக சூரத்தில் உள்ள கரஞ்ச் தொகுதியில் கடந்த தேர்தலில் 55.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதைவிட 5.37 சதவீதம் குறைவாகவே மக்கள் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாஜக சின்னத்துடன் உள்ள பிரசார வாகனங்களில் மது வினியோகம் செய்யப்பட்டது.
- காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி வாகன ஊர்வலம் நடத்தியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது:
நமது ஜனநாயகத்தின் கண்காணிப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் பிரதமரின் வாக்கு மதிப்பும், சாமானியரின் வாக்கு மதிப்பும் ஒன்றுதான். ஆனால், பிரதமர் வாக்களிக்கச் செல்லும்போது இரண்டரைமணி நேரம் ரோட்ஷோ நடத்துவது எப்படி?
பிரதமரின் எந்த அத்து மீறலையும் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையத்திற்கு என்ன நிர்பந்தங்கள் உள்ளன?. பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கும் போதும், இரண்டரை மணி நேர ரோட்ஷோ நடத்தும் போதும் அனைத்து சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்தார். இது விளம்பரம் இல்லையா? இதற்காக பா.ஜ.க.விடம் கட்டணம் ஏன் வசூலிக்கக் கூடாது. கட்சியின் தேர்தல் செலவினத்தின் கீழ் இதை கொண்டுவர நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
மது விற்பனை தடை உள்ள மாநிலத்தில் பாஜகவினர் வெளிப்படையாக, வெட்கமின்றி, பாஜக சின்னத்துடன் தங்கள் வாகனங்களில் மது வினியோகம் செய்யும் காட்சிகளையும் நாங்கள் மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருகிறோம். அத்தகைய விதி மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஏன்.
பாஜக தொடர்ந்து நடத்தி விதிகளை மீறுகிறது, ஆனால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அமைதியாக உள்ளது. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பயப்படுவதாக தெரிகிறது. காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
- 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சென்னை:
ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.
- தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு, இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும்.
- வாக்காளர்கள் பங்களிப்பை அதிகரிப்பதில் இது புரட்சிகரமான மாற்றமாக இருக்கும்.
புதுடெல்லி :
நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர், இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை. இது கவலை அளிக்கும் விஷயம் என தேர்தல் கமிஷன் கருதுகிறது.
இதனால், வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கிற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 (மார்க் 3) மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷனுக்காக ஒரு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு 'ரிமோட் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்'. இதை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
வாக்குப்பதிவுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு, இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். ஒரே வாக்குச்சாவடியில் உள்ள எந்திரத்தை பயன்படுத்தி, அதிகபட்சம் 72 தொகுதிகளுக்கான ஓட்டுகளை பதிவு செய்ய முடியும்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு இதற்கான அழைப்பை தேர்தல் கமிஷன் விடுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டுகிறது.
மேலும் அரசியல் கட்சிகளிடம், ஜனவரி 31-ந்தேதிக்குள் எழுத்துமூலமான கருத்துகளும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த கருத்துகள் அடிப்படையில், எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முன்னெடுக்கும் என்று தெரிகிறது.
இந்த வசதியை அறிமுகப்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் சட்டம், வாக்காளர்கள் பதிவு விதிமுறைகள் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டி இருக்கும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்த எந்திரம் நடைமுறைக்கு வந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருக்காது.
வாக்காளர்கள் பங்களிப்பை அதிகரிப்பதில் இது புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் 16-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்பாடு செய்துள்ளார்.
- தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய முகவரிக்கு கடிதம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.
அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம் என்பதால் இந்த திட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் நாட்டில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும் போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் 16-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் 16-ந்தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு தேசிய, மாநில கட்சிகளுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.
அதன்படி அ.தி.மு.க.வுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கடிதத்தை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்க வேண்டாம் என்று கூறியதால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஊழியர்கள் கடிதத்தை வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
ஏனென்றால் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இப்போது கிடையாது என்பதால் அதை திருப்பி அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டபோது, "இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதால் இந்த கடிதம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சென்றடையவில்லை. காரணம் அவர் வேறு முகவரியில் வசித்து வருகிறார்.
இதனால் தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய முகவரிக்கு கடிதம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமியிடமும் கடிதம் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்திடமும் தேர்தல் கமிஷனின் கடிதம் இல்லை.
எனவே 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எந்த அடிப்படையில் சென்று அ.தி.மு.க.வினர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அ.தி.முக. தலைமைக் கழகம் பொதுவானது. அது எங்களுக்கும் சொந்தமானது. நாங்கள் தகராறு வேண்டாம் என்பதால்தான் உள்ளே போகாமல் இருக்கிறோம்.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம் எங்களுடைய முகவரிக்கு தான். ஆனால் அதை அங்குள்ளவர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பியது பெரிய தவறு.
தற்போது எங்களிடம் கடிதம் இல்லையென்றாலும், தேவைப்பட்டால் தேர்தல் கமிஷனில் முறையிட்டு அந்த கடிதத்தின் நகலை தலைமைச் செயலகம் சென்று பெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வோம்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கருத்து தெரிவிக்கையில், "இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு கடிதம் அனுப்புங்கள் என்று தான் கூறி உள்ளது. தனிப்பட்ட பெயர் போட்டு அனுப்பவில்லை.
அப்படி இருக்கும் போது இல்லாத பதவி பெயரை குறிப்பிட்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் வந்ததால்தான் திருப்பி அனுப்பி உள்ளனர். எனவே சரியான பதவியை குறிப்பிட்டு தமிழக தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு வருவோர், போவோர் கையில் கடிதத்தை கொடுக்க கூடாது. அது சட்டப்படி தவறு.
இவ்வாறு இன்பதுரை கூறினார்.
இதனால் தேர்தல் கமிஷனின் கடிதம் விவகாரம் அ.தி.மு.க.வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று அனுப்பி உள்ளார்.
- இப்போது அனுப்பப்பட்ட கடிதமும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதுதொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி அம்மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க இந்திய ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் அனுப்பினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு அவர் கடிதம் அனுப்பினார். அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அ.தி.மு.க.வில் அப்படி ஒரு பதவியே இல்லை என்று கூறி அந்த கடிதத்தை ஏற்க அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அத்துடன் அந்த கடிதத்தை தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் கமிஷனருக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அ.தி.மு.க. முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்றார்.
இந்த நிலையில் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று அனுப்பி உள்ளார். இப்போது அனுப்பப்பட்ட கடிதமும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது.
ஆவணங்களின் அடிப்படையிலேயே அ.தி.மு.க. தலைமை கழக முகவரியிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.