என் மலர்
நீங்கள் தேடியது "Electric Vehicles"
- பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
- மின்சார வாகன இயக்கத்தை விமானப்படை தலைமை தளபதி தொடங்கி வைத்தார்.
சுற்றுச் சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாகவும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு டாடா நெக்ஸான் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள விமானப்படைத் தலைமை அலுவலகமான வாயு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் 12 மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட மின்-வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான சூழல் அமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவது தொடர்பாக, இந்திய விமானப்படை ஏற்கனவே இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய பயணத்தில், இந்திய விமானப் படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முயற்சி.
- உற்பத்தி மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரிப்பு.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஐ.சி. என்ஜின் மாடல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
எலெக்ட்ரிக் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் எதிர்காலத்தில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டி.வி.எஸ். நிறுவனம் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டிலேயே டி.வி.எஸ். நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
- அமெரிக்காவை தவிர, சீனாவிலும் ஜெர்மனியிலும் டெஸ்லா உற்பத்தி செய்து வருகிறது
- தொடக்கத்தில் பிஒய்டி, பேட்டரி தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது
கடந்த 2003ல், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க் (Elon Musk), தொடங்கிய பேட்டரி கார் நிறுவனம், டெஸ்லா (Tesla).
அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி ஆனாலும், பெருகி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக, இந்நிறுவனம் கார் உற்பத்தியை சீனாவிலும், ஜெர்மனியிலும் நடத்தி வருகிறது.

2023 வருட மூன்றாம் காலாண்டில் மட்டும் 4,30,488 மின்னணு கார்களை உற்பத்தி செய்தது.
கார்கள் விற்பனை மூலம் 2022-ஆம் வருட வருமானமாக டெஸ்லா, $81,462 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.
இந்நிலையில், சீனாவின் ஷென்சன் (Shenzen) பகுதியை சேர்ந்த மற்றொரு முன்னணி மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), உலகளவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.
பிஒய்டி, 2023-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 5,26,000 கார்களை தயாரித்துள்ளது. 2023 முழு ஆண்டில் 3 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது.
1995ல் சீனாவின் ஷென்சன் பகுதியில் வேங் சுவான் ஃபு (Wang Chuanfu) என்பவர் தொடங்கிய பிஒய்டி, முதலில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. விலை உயர்ந்த ஜப்பானிய பேட்டரிகளை விற்பனையில் முந்திய பிஒய்டி பிறகு கார் தயாரிப்பிலும் கால் பதித்தது.

ஒரு மின்னணு கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கு முக்கிய பாகமாக கருதப்படுவது அதனை இயக்கும் பேட்டரிதான். பேட்டரி தயாரிக்கும் தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ள நிறுவனம் என்பதாலும், தங்கள் பேட்டரியை வைத்தே தங்கள் கார்களை தயாரிப்பதால் பெருமளவு செலவினங்கள் குறைவதால், விலை குறைவான கார்களை பிஒய்டி-யால் தயாரிக்க முடிகிறது. குறைந்த செலவில் லாபம் ஈட்டி, அதிவேகமாக கார்களை பிஒய்டி தயாரிக்க இது முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக பேட்டரி கார் தயாரிப்பில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள டெஸ்லா, போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.
- பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
- பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்
பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.
மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
- ஓலா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- சில மாடல்களுக்கு ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், ஓலா S1 X மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 74 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் வாங்கிட முடியும். மேலும், பயனர்கள் தங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொடுத்து புதிய ஓலா ஸ்கூட்டரை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் ரூ. 40 ஆயிரம் வரை வழங்குகிறது.

ஓலா S1 ப்ரோ அல்லது S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. ஓலா S1 X பிளஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இம்மாத இறுதி வரை வழங்கப்படும்.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓலா S1 மாடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
- சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
- சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது எங்கள் இலக்கு அல்ல என கூறியது.
பிரசெல்ஸ்:
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எந்த ஒரு வாகனத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவின் BYD மாடல்கள் 17.4 சதவீதமும், Geely 20 சதவீதமும், SAIC 38.1 சதவீதம் வரியையும் பெறுகிறது.
உள்ளுர் உற்பத்தியாளர்களின் நலன்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், எங்கள் விரிவான விசாரணையின் தெளிவான சான்றுகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை முழுமையாக மதிக்கும் வகையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணையை இறுதி செய்யும் நோக்கில் சீன அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இப்போது ஈடுபடுவோம்.
சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது இலக்கு அல்ல. எங்கள் இலக்கு சமநிலையை மீட்டெடுப்பது மற்றும் சீனாவில் இருந்து மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தை திறந்திருப்பதை உறுதி செய்வதாகும் என தெரிவித்தனர்.
- லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.
- சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன
சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார [எலெக்ட்ரிக்] வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலக சந்தையில் தங்களை நிலைநிறுத்தி லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.

இதுதவிர்த்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக சீன மின்சார வாகனங்களுக்கு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிக வரி விதித்திருந்தன. தற்போது கனடாவில் இறக்குமதி ஆகும் சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல்.
- ஜூப்பிட்டர் அல்லது XL மாடல்களில் ஒன்று எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம்.
டி.வி.எஸ். நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் இருவாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் டி.வி.எஸ். தனது புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் சமீபத்திய முதலீட்டாளர் சந்திப்பின் போது வெளியாகியுள்ளது. தற்போதைக்கு டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் மாடலை மட்டும் பல வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் ஓரளவுக்கு சந்தையில் வெற்றிகர மாடலாக உள்ளது.
இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எக்ஸ் ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் வினியோகம் இதுவரை துவங்கவில்லை. டி.வி.எஸ். எக்ஸ் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் கவர்ச்சிகரமாக இருந்தது. இது விற்பனையில் அமோக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டி.வி.எஸ். நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளையும் டி.வி.எஸ். துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
இதில் ஜூப்பிட்டர் அல்லது XL எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் ஒன்றை டி.வி.எஸ். முதலில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் XL எலெக்ட்ரிக் மாடல் வணிக பிரிவில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ட.வி.எஸ். நிறுவனம் XL EV மற்றும் E-XL பெயர்களை புதிய மாடலுக்கு சூட்ட டிரேட்மார்க் செய்துள்ளது.
- 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து
- டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மக்களிடேயே ஊக்குவிக்கும் முயற்சியாக தெலங்கானா அரசின் புதிய அறிவிப்பு இன்று முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள், மின்சார ஆட்டோ ரிக்சா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இந்த 100 சதவீத விலக்கு பொருந்தும். தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அமலில் இருக்கும்.
- ஜிஎஸ்டி வரி உயர்வு வாகனங்களின் மறுவிற்பனை சந்தையை கணிசமாக பாதிக்கும் என்ற அஞ்சப்படுகிறது.
- மின்சார வாகனங்கள் (EV) உட்பட மற்ற அனைத்து வாகனங்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12% லிருந்து 18% ஆக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இது வாகனங்களின் மறுவிற்பனை சந்தையை கணிசமாக பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி உயர்வு பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கும் (EV) நீட்டிக்கப்படும் என்றும் அவை தற்போது ஜனவரி 25, 2018 தேதியிட்ட அறிவிப்பு எண். 08/2018-மத்திய வரி (விகிதம்) இன் கீழ் 12% குறைக்கப்பட்ட விகிதத்தில் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் சப்ளையர் மார்ஜின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஒப்பீட்டளவில் குறைந்த பயனுள்ள வரி நிகழ்வுகள் உள்ளன.
அதன்படி பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி விகிதங்கள் பின்வருமாறு: பெட்ரோல், எல்பிஜி அல்லது சிஎன்ஜி வாகனங்களுக்கு 1200சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன் மற்றும் 4000மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட வாகனங்களுக்கு 18%; 1500சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன் மற்றும் 4000மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட டீசல் வாகனங்களுக்கு 18%; மற்றும் 1500சிசி க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்கு (எஸ்யுவி) 18% வரி விதிக்கப்படுகிறது.
மின்சார வாகனங்கள் (EV) உட்பட மற்ற அனைத்து வாகனங்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
இந்த பிற வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18% ஆக அதிகரிப்பதற்கான ஃபிட்மென்ட் கமிட்டியின் முன்மொழிவு பெரிய வாகனங்கள் மற்றும் எஸ்யுவி-களுக்கான தற்போதைய வரி கட்டமைப்போடு ஒத்துப்போகிறது.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் பழுது மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் சேவைகள் ஏற்கனவே 18% ஜிஎஸ்டியை ஈர்க்கின்றன. இது பயன்படுத்திய கார் சந்தையில் செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்கிறது.
ஜிஎஸ்டி விகித உயர்வு அமல்படுத்தப்பட்டால், தொழில்துறையானது செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் அதிக ஒட்டுமொத்த வரிவிதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இது உதிரி பாகங்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
- 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும் போது, வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் எலெக்ட்ரிக், டாடா பன்ச் எலெக்ட்ரிக், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6E, XEV 9e, எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வின்ட்சர், கியா நிறுவனத்தின் EV9 உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யபபட்டுள்ளன. இவைதவிர ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்து 1.94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது, நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 7.46 சதவீதமாக உயர்த்தியது. இது 2023 ஆம் ஆண்டு 6.39 சதவீதமாக இருந்தது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் போதிலும், பெட்ரோல் வாகனங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த ஆண்டு விற்பனையான ஒட்டுமொத்த (26.04 மில்லியன்) வாகனஹ்களில் 73.69 சதவீதம் (19.18 மில்லியன்) யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும்.
இதில் 10.5 சதவீதம் (2.62 மில்லியன்) யூனிட்கள் டீசல் மாடல்கள், 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள் ஆகும். 2024 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனத்திற்கு இணையாக 12.43 பெட்ரோல்-சி.என்.ஜி, ஹைப்ரிட், டீசல் மாடல்கள் அடங்கும்.

மாதாந்திர விற்பனை:
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே 1,45,064 மற்றும் 1,41,740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 2,13,068 யூனிட்களாக அதிகரித்தது. பிறகு ஏப்ரல், மே மாதங்களில் குறைந்து 1,15,898 மற்றும் 1,40,659 யூனிட்களாக இருந்தது. ஜூன் மாதத்தில் 1,40,137 யூனிட்கள் விற்பனையானது.
2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2,19,482 யூனிட்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிக வாகனங்கள் விற்பனையா மாதமாக அமைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,92,575 மற்றும் 1,32,302 யூனிட்களாக சரிந்தது.
எனினும், இந்த ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது.

மத்திய அரசு திட்டம்:
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்து ஃபேம் 2 திட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,15,898 யூனிட்களாக சரிந்தது.
இதன் பிறகு, பண்டிகை காலம் மற்றும் பிரதமரின் இ-டிரைவ் திட்டம் காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் சமீப காலங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய மாடல்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
- டெல்லியில் BHARAT MOBILITY EXPO வாகன கண்காட்சி நடைபெற்றது.
- இந்த வாகன கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் EV தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லியில் நடைபெற்றுவரும் BHARAT MOBILITY EXPO 2025 வாகன கண்காட்சியை கண்டு வியந்தேன். இந்த வாகன கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது உற்சாகம் அளிக்கிறது
ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட், பி.எம்.டபுள்யூ., டி.வி.எஸ். உட்பட பல வாகன நிறுவனங்களை பார்வையிட்டேன்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனத்தின் (EV) தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது
வின்ஃபாஸ்ட் கார் நிறுவனத்தில் ஆலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தது நமது தலைவரின் விரைவான முடிவெடுக்கும் திறமையால் சாத்தியமானது. மேலும் இந்த முதலீட்டை தென் தமிழகத்திற்கு கொண்டு வந்ததில் நானும் தனிப்பட்ட முறையில் எப்போதும் பெருமைப்படுவேன்
நேற்று அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட VF6 மற்றும் VF7 ஆகியவை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தூத்துக்குடி ஆலையில் இருந்து உற்பத்தி செய்து வெளிவரலாம் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.