என் மலர்
நீங்கள் தேடியது "Elephant Ivory Smuggling"
- 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
- 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடததினார்கள். அதில் 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே அனுமந்தபுரம் பக்கமுள்ள திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (27), கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சம்மந்தூர் பக்க முள்ள மாரநாயக்கன அள்ளியை சேர்ந்த விஜயகுமார் (25), ஊத்தங்கரை தாலுகா நடுப்பட்டி அருகே உள்ள ஒந்தியம்புதூரை சேர்ந்த ஹரிபூபதி (39), ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த பரந்தாமன் (27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டரும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூரை சேர்ந்த முனிராஜ் (29), பெட்டமுகிலாளம் அருகே உள்ள தொளுவபெட்டா பழையூரை சேர்ந்த லிங்கப்பா (39), பசலிங்கப்பா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய பெட்டமுகிலாளம கிராமம் போப்பனூரை சேர்ந்த பசப்பா (40), ஜெயபுரத்தை சேரந்த மத்தூரிகா (39) ஆகிய 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.
- யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள அத்தியூர் என்ற பகுதியில் அழுகிய நிலையில் ஒரு யானை பிணமாக கிடந்தது.
இதை ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனச்சரகர் இந்துமதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ஆண் யானை என்று தெரிய வந்தது.
மேலும் அந்த யானையின் 2 தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் மூலம் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அத்தியூர் புதூரை சேர்ந்த செங்கோட்டையன் (40), சடையப்பன் (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்ததாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனாலும் வெட்டி எடுக்கப்பட்ட தந்தம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. இதனால் தந்தத்தை கைப்பற்ற முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே 17 வயது சிறுவனை அழைத்து வந்ததால் அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் வனச்சரகர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் வனத்துறையினரிடம் சிறுவன் எங்கே என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது,
வனப்பகுயில் யானை இறந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் யானை இறந்ததும் தெரிந்திருக்கும். தந்தங்களையும் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் ரோந்து பணியில் அலட்சியமாக ஈடுபட்டதால் யானை இறந்தது தாமதமாகத்தான் தெரிய வந்தது என்றனர்.