என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entrance exam"

    • நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

    இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

    www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் நுழைவுத் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகிறது.

    • இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் கணினி வழியாக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளன.

    பதிவு எண், பாஸ்வேர்டு கொடுத்து தாங்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் என்.டி.ஏ. வழங்கியுள்ள கேள்விக்குரிய விடைகள் ஆகியவற்றை பார்வை யிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்து க்கொள்ளலாம். அவை நாளை வரை கிடைக்கும்.

    விடைக்கு றிப்பில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் அதையே சவால் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து, கட்டணமாக ஒரு கேள்விக்குரிய விடைக்கு ரூ.200- செலுத்த வேண்டும். தேர்வர்களால் செய்யப்படும் சவால்கள், பாட நிபுணர்கள் குழுவால் சரிபார்க்கப்படும். சரியானவை என கண்டறியப்பட்டதால் விடைகள் அதற்கேற்ப திருத்தப்படும்.

    திருத்தப்பட்ட இறுதி விடை குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    • 2-ம் கட்ட ேஜ.இ.இ. நுழைவு தேர்வு விண்ணப்பப்படிவத்தை திருத்தம் செய்ய மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
    • முதற்கட்டமான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

    சேலம்:

    இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பகுதி 1, பகுதி 2 என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமான பகுதி 1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

    இதையடுத்து பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு (முதன்மை) 2022 நடத்துவதற்கான ஏற்பாடுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பில் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் திருத்த செய்ய வேண்டி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்று அவர்களில் நலன் கருதி மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

    அதன்படி விண்ணப்ப தாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய நாளை (3 ந்தேதி) இரவு 11.50 மணி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

    விண்ணப்பப் படிவத்தில் மாணவ மாணவிகள் கவனமாக திருத்தம் செய்து பயனடையுமாறு என்.டி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. 

    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறை சார்பாக தேசிய தேர்வு முகமை இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுபல்கலைக்கழக நுைழவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

    மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) -2022 நாடு முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நடைபெற உள்ளது.

    43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழங்களில் அட்மிஷனுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் பதிவு செய்துள்ளனர்.

    வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் அதனை இன்று முதல் நாளை நள்ளிரவு 11.50 மணி வரை திருத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இந்த இறுதி கட்ட வாய்ப்பை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    ×