என் மலர்
நீங்கள் தேடியது "EPFO"
- பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் முடிவு.
- அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் வழங்கப்படும்.
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது.
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- வட்டி விகிதம் உயர்வு பி.எப். சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், உறுப்பினர்களுக்கு பி.எப். ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்கள் வடிவில் சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது.
தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கு சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2022-23-ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 8.15 சதவீதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2023-24-ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் இன்றைய கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வட்டி விகிதம் உயர்வு குறித்த தகவல் 6 கோடிக்கும் அதிகமான பி.எப். சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
- சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
கன்னயாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெறும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
- வேலையில் இருந்து நின்று ஒரு மாதத்திற்குப் பிறகு 75 சதவீதம் பணத்த எடுக்கலாம்.
- அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மீதமுள்ள பணத்தை பெறலாம்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.
வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
தற்போது வீடு கட்ட வேண்டும் அல்லது அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்றால் இணைய தளம் மூலம் ரிஜிஸ்டர் செய்து பணத்தை எடுக்க முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து ஏடிஎம் மெஷின்களில் வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுக்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிமை கோருபவர்கள், பயனாளிகள் அதிகப்பட்டியான மனிதர்கள் தலையீடு இல்லாமல் இனிமேல் பணத்தை எடுக்க முடியும்.
அடுத்த ஆண்டு ஐ.டி. 2.1 மேம்படுத்தல் நடைமுறைக்கு வந்தவுடன் EPFO இன் ஐ.டி. உள்கட்டமைப்பு வங்கி அமைப்புகளுக்கு இணையாக இருக்கும். இதனால் அவர்கள் எளிதாக பணத்தை பெற முடியும். உரிமைகோரல் தீர்வை எளிமையாக்க எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்துகிறோம். ஏடிஎம்கள் மூலம் வருங்கால வைப்பு நிதியை எடுப்பது விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சக செயலாளர் சுமிதா தவ்ரா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட உடன் பணத்தை எடுப்பதற்கான கார்டு வழங்கப்படும். இது வங்கிகள் வழங்கும் ஏடிஎம் கார்டுகள் போன்று இருக்கும். எனினும் மொத்த தொகையில் 50 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும்.
பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம் ஏதும் இல்லை. வேலையில் இருக்கும்போது பணத்தை எடுக்க முடியாது. வேலையில் இருந்து நின்று ஒரு மாதத்திற்குப் பிறகு 75 சதவீதம் பணத்தை எடுக்கலாம். அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மீதமுள்ள பணத்தை பெறலாம்.
- EPFO 3.0-க்கு பிறகு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும்.
- வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணம் மிகப்பெரிய அளவில் பயன்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.
வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் EPFO அலுவலக வளாகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
அதன்பின்பு பேசிய அவர், "விரைவில் , EPFO 3.0 வரவுள்ளது. அதன்பின்பு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும். இப்போதும் நீங்கள் உங்கள் பி.எஃப் பணத்தை எடுக்க EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. EPFO 3.0 அப்டேட்டிற்கு பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த வங்கியின் ATM-களில் இருந்து உங்கள் பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.