என் மலர்
நீங்கள் தேடியது "ernakulam"
- தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
- வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 5 மற்றும் 6-ம் தேதி ஆகிய 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சுள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின.
- காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்களும், தொற்று நோய்களும் பரவ தொடங்கியது. பருவ மழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன. அங்கு டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின.
மேலும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களும் வேகமாக பரவியபடி இருக்கிறது. அங்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று நோய்களின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எலி காய்ச்சலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் ஒருமனயூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற வாலிபர் இறந்திருந்த நிலையில் தற்போது ஜிம் பயிற்சியாளர் ஒருவரும் எலி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்.
குருவாயூர் அருகே உள்ள மம்மியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ஜார்ஜ்(வயது62). கோட்டப்பாடி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த வாரம் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
- கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.
இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.
அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.
இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.
திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.
திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மைய பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது.
இந்த மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இந்த குப்பைகள் அகற்றப்படவில்லை.
இதுபற்றி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்தினர் கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகும் குப்பைகள் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீர் நேற்று இக்குப்பைகளை அகற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். காய்கறி மார்க்கெட் அருகே குவித்து வைக்கப்பட்ட குப்பைகளின் அருகில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்கு வந்தனர். 1 மணி நேரத்தில் குப்பைகள் அனைத்தையும் அகற்றினர்.
நீதிபதி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதும், இதனால் ஒரு வாரமாக தேங்கி கிடந்த குப்பை உடனடியாக அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடே இந்நோய்களுக்கு காரணம். எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். எனவே தான் குப்பைகளை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டேன்.
இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் இதுபற்றி புகார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றே இப்போராட்டத்தை நடத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் தினமும் 6 முதல் 7 லோடு குப்பைகள் தேங்கும். அவற்றை உடனுக்குடன் அகற்றுவோம். கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. எனவேதான் குப்பைகள் தேங்கி விட்டது என்றனர். #Tamilnews
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’... இந்த பாடல் வரிகளுக்கு உயிரூட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து விபரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பட்டில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவர் 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் 2 கண்களின் பார்வை பறிபோனது.
இருந்தாலும் பெற்றோர் மகளுக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர். பிரஞ்ஜாலின் பட்டில் வளர வளர சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. படிப்பிலும் தீராத தாகம் இருந்த அவர் தொடுதிரை உதவியுடன் நன்கு படித்து வந்தார். மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடிதார்.
பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டம் முடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதினார். 773-வது இடமே கிடைத்ததால் அவரால் கலெக்டர் ஆக முடியவில்லை. அதே நேரத்தில் ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது லட்சியமான கலெக்டர் கனவு அவரை வாட்டியது.

நெகிழ்ச்சியடைந்த அதிகாரிகள் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி மகளை கலெக்டர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. #Tamilnews