என் மலர்
நீங்கள் தேடியது "Erode News"
- சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன் உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளம் பாலம் அருகில் உள்ள நீரோடையில் கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் கிடப்பதாக பிரம்மதேசம் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார். அந்தியூர் போலீஸ்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இறந்தது யார் எந்த ஊர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிர ப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் (48) கால்நடை வியாபாரி கடந்த 22-ந் தேதி வியாபாரத்திற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இவர் எப்பொழுதும் வியாபாரத்திற்கு சென்றால் 4, 5 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்சமூக வலைதளங்களில் பதிவிட்ட அங்க அடையாளங்களை வைத்து இறந்தவர் தனது கணவர் என்பதை அவரது மனைவி பழனியம்மாள் உறுதி செய்தார்.
இதனை அடுத்து போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன்உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த சீரங்கனுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
- வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டம், கேர்மாளம் வனச் சரகத்தில் வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து கேர்மாளம் மலை கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று கேர்மாளம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கானக்கரை கிராம பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள அங்கன்வாடி வளாகத்திற்கு அருகே இரண்டு நாட்டுத் துப்பாக்கிள் கிடந்துள்ளது அதை கைப்பற்றிய வனத்துறை சட்ட நடைமுறைகளின் படி கைப்பற்றிய நாட்டுத் துப்பாக்கிகள் 2-ம் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
- அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
ஈரோடு:
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). நகராட்சி தூய்மைப்பணியாளர். இவரது மனைவி மல்லிகா (49). இருவரும் கடந்த 25-ந் தேதி சொந்த ஊரானா ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுவண்டிபாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.
பின்னர் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மல்லிகா தன் கணவரை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொரமடை கடத்தூர் கொரங்காட்டு தோட்டம் பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
- இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரமடை கடத்தூர், கொரங்காட்டு தோட்டம், பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் நம்பியூரை சேர்ந்த மணிகண்டன் (24), எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (22), மதன்குமார் (25), கோகுல் (22), கடத்தூரை சேர்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், பணம் ரூ.950 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் ஏழை எளிய இந்து மக்களின் நலனுக்காக 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பவானி:
தமிழக முதல்- அமைச்சரின் வழிகாட்டு தலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் ஏழை எளிய இந்து மக்களின் நலனுக்காக வரும் டிசம்பர் மாதம் 4-ந் தேதி 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் கோவிலின் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து அறநிலைத்துறை சார்பில் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நடத்தி வைக்கப்படும் 5 ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் 2 கிராம் தங்கம் ரூ.10.000, மணமகன் ஆடை ரூ.1000, மணமகள் ஆடை ரூ. 2000, மணமகன் மற்றும் மணமகள் உடன் 20 நபர்களுக்கு விருந்து ரூ.2000, பூ மாலை ரூ.1000, பாத்திரங்கள் ரூ.3000, இதர செலவு ரூ. 1000 என ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
- இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.
பவானி:
ஈரோடு சின்னசோமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). தனியாருக்கு சொந்தமான சைசிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ராமசாமி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி அருகிலுள்ள நசி யனூர், ஆட்டையாம்பா ளையம் பிரிவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று ராமசாமியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மனைவி பிரியா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பி ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த ராகுல், பூங்கொடி மற்றும் அவரது கணவர் சரவணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
- இதில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பள்ளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 36). பூங்கொடியின் அண்ணன் சாமிநாதன் (38).
இவர் திருப்பூரில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே திரும ணமாகி 2 மகன்களுடன் இருந்த வளர்மதி என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு காந்தி நகரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவருடைய மூத்த மகன் ராகுல் (24). ஆகியோர் சம்பவத்தன்று சென்னி மலை அருகே காந்தி நகர் வீட்டுக்கு வந்து சாமிநாத னிடம், அவருடைய பெயரில் உள்ள சொத்தை எங்கள் பெயருக்கு எழுதி தாருங்கள் என கேட்டு தகராறு செய்த தாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சாமிநாதனின் தங்கை பூங்கொடி, அவருடைய கணவர் சரவணன், சாமிநாதன் வீட்டுக்கு சென்று தகராறு குறித்து கேட்டனர்.
இதில் அவர்களு க்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திர மடைந்த ராகுல், பூங்கொடி மற்றும் அவரது கணவர் சரவணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த சாமி நாதனை ராகுல் சரமாரி யாக கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராகுலை கைது செய்தனர்.
- முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது.
- இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி, பெங்களூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மேச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
தற்போது முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட ரூ.60 வரை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கேரட், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. இதேப்போல் கத்திரிக்காய் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.
வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:
பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-50, கருப்பு அவரை-110, பட்ட அவரை-70, சுரைக்காய்-20, பச்சைமிளகாய்-50, முட்டைகோஸ்-50, காலி பிளவர்-40, முருங்கைகாய்-120, வெண்டைக்காய்-40, முள்ளங்கி-50, பீட்ரூட்-80, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-45, தக்காளி-30.
- அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடவே அனைவரும் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று விட்டனர்.
- காயம் பட்ட அஜித் மற்றும் பழனிச்சாமி 2 பேரும் சிகிச்சைக்காக கோபி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கரிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 23). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அஜித்தின் மாமா சங்கர் என்பவருக்கும், சிறுவலூரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் கடந்த மாதம் சிறுவலூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வாய் தகராறு ஏற்பட்டு பிரதாப் குடிபோதையில் சங்கரையும் மற்றவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
தனது மாமா சங்கர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை பிரதாப் திட்டியதற்கு ஊருக்கு வந்திருந்த அஜித், பிரதாப்பிடம் ஏன் எதற்காக எனது மாமாக்களிடம் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.
இதனால் பிரதாப் அஜித் மீது முன்பகை கொண்டு தீபாவளி அன்று தனது நண்பர்களான இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், தமிழரசன் மற்றும் சீனி ஆகியோருடன் சேர்ந்து சிறுவலூரிலிருந்து அஜித் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் வீட்டிற்கு வெளியே கோவிலில் உட்கார்ந்து இருந்த அஜித்தை பார்த்து உனது மாமாவை திட்டினால் உனக்கு எதற்கடா ரோஷம் வருது என பேசி தகாத வார்த்தை களால் பேசியும் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து கையாலும், காலாலும், கற்களாலும் அடித்துள்ளனர்.
அஜித்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது உறவின ரான பழனிச்சாமி என்பவர் ஓடி வந்து தடுக்க முயன்றபோது, அனைவரும் சேர்ந்து பழனிச்சாமியையும் அடித்து உதைத்து கல்லால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடவே அனைவரும் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று விட்டனர். காயம் பட்ட அஜித் மற்றும் பழனிச்சாமி 2 பேரும் சிகிச்சைக்காக கோபி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அஜித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து அஜித் கொடுத்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரதாப், தமிழரசன் மற்றும் சீனி ஆகியோரை தேடி வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பிரதாப் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுவலூர் போலீஸ் நிலை யத்தில் மற்றொரு அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
- விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்படுகிறது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் வேலுமணி நகர் சக்தி விநா யகர் கோவிலில் பிள்ளையார்பட்டியில் நடப்பது போல் தினமும் கணபதி ஹோமம், மற்றும் மாதம் தோறும் 54 சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கோவில் வளாக த்தில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக பெரு மானுக்கு கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி வரும் 30-ந்தேதி மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹா ரயாகம், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடை பெற உள்ளது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூர சம்ஹார விழா நடைபெற உள்ளது. பின்னர் சாந்தி அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி தேவசேனா ஆறு முகப் பெருமான் வெள்ளி க்கவசத்தில் அருள் பாலிக்கிறார் . இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்.ஏ, என்.ஆறு முகம், கே.நாகலட்சுமி, 11-வது வார்டு கவுன்சிலர் ஏ.என்.முத்துரமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்படுகிறது. வரும் 31-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தேவ சேனா ஆறுமுக பெரு மானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை 11-வது வார்டு கவுன்சிலர் ஏ.என்.முத்துரமணன் தலை மையில் கோவில் நிர்வாக த்தினர் செய்து வருகின்றனர் .
- ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 277 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவி த்தனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் விதிமுறைகள் மீறுபவர்க ளுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.
மாவட்டத்தில் 2 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். ஈரோடு பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, பஸ் நிலையம், ஜிஹெச் ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு ,காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோ தனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசியப்படி வாகனம் ஓட்டி யது என 277 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ப ட்டது.
இதில் பெரும்பா லும் ஹெ ல்மெ ட் அணி யா மல் செ ன்றவ ர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க ப்பட்டது. இதே ப்போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 5 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 277 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவி த்தனர். இன்று 3-வது நாளாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேப்போல் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
- அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2700 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.