search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Excise Policy case"

    • அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 10-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி திகார் ஜெயிலில் சரணடைந்தார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அவர் சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில் இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுமீது பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் கருத்துக்களை பெறாமல் உடனடியாக இடைக்கால ஜாமின் வழங்கமுடியாது என நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இந்நிலையில், கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவால் பெயர் இல்லை. அவரை கைதுசெய்ததற்கு எவ்வித ஆதாரமோ, முகாந்திரமோ இல்லை.

    கடந்த 2 ஆண்டாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு சி.பி.ஐ. திட்டமிட்டு அவரை கைதுசெய்தது. கைது செய்வதற்கு முன் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை.

    அவர் எந்த அச்சுறுத்தலிலும் ஈடுபடமாட்டார். அவர் ஒரு அரசியலமைப்பு செயற்பாட்டாளர். எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார்.
    • இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அவரை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

    இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினர். அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர். ஜாமின் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் சிசோடியா ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் டெல்லி அமைச்சர் அதிஷி கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், பொய்யான வழக்கில் மணீஷ் சிசோடியா அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தது. தற்போது ஜாமினில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று உண்மை வென்றது, கல்வி வென்றது, குழந்தைகள் வென்றுள்ளனர் என தெரிவித்தார்.

    மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்ததை கூறுகையில், அமைச்சர் அதிஷி மேடையில் தேம்பி தேம்பி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த வழக்கில் சுமார் 17 மாதம் கழித்து சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல்.
    • இடைக்கால ஜாமின் கேட்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.

    சிபிஐ கைது செய்ததுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. தன்னை சிபிஐ கைது செய்தது, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதையும் எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது. அதேபோல் இடைக்கால ஜாமின் கேட்க மனு மீதான உத்தரவையும் ஒத்திவைத்துள்ளது.

    இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி சிங் "மக்களவை தேர்தலுக்காக மட்டும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 21 நாள் இடைக்கால ஜாமினை அவருடைய வசதிக்காக பயன்படுத்த முடியாது. அது தேர்தலுக்காக மட்டுமே வழங்கப்பட்டது.

    பணமோசடி வழக்கில் ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், டெல்லி உயர்நீதிமன்றம் அந்த ஜாமினுக்கு தடை வழங்கியதுடன், அதற்கான 30 பக்க அளவிலான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    வெறுமென சந்தேகம் இருந்தால் கூட தனி நபரை கைது செய்ய சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது. முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அந்த நேரத்தில் சிபிஐ-யிடம் போதுமான காரணம் இருந்தது. சிஆர்பிசி (CrPC) விசாரணைக்கான கைது செய்ய அனுமதி வழங்குகிறது.

    கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானதால் அவரைக் கைது செய்வது அவசியமானது. சிபிஐ விசாரணையை முடிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் மீது முதல்வர் செல்வாக்கு செலுத்துவார் என்ற நியாயமான அச்சம் உள்ளது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்" என வாதிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி "டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏன் கேட்கக் கூடாது என்பதற்கான காரணத்தை சிபிஐ கொடுக்கவில்லை. சிபிஐ-யின் நிலை தாமதப்படுத்தும் தந்திரம்.

    கெஜ்ரிவால் மீதான சமீபத்திய புதிய ஆதாரம் ஜனவரி 2024 ஆகும். ஜனவரி 2024-க்குப் பிறகு சிபிஐ புதிய ஆதாரத்தை பெறவில்லை. தற்போது சிபிஐ ஜூன் 13-ந்தேதி புதிய ஆவணங்களுடன் வந்துள்ளது. இது எங்கும் பயன்படாது. கைதுக்கு பிந்தைய ஆவணங்கள் கொடுக்க முடியுமா?.

    நீங்கள் 41A நோட்டீஸ் கொடுத்தபோது அதை நீங்கள் சமர்பிக்கவில்லை. அது எங்கே இருக்கிறது?  வாய்மொழியாக மட்டும் சொல்ல முடியாது. முழு விசயத்தின் அடிப்படையில், கெஜ்ரிவாலின் கைதுக்கு நியாயப்படுத்த புதிதாக எதுவும் இல்லை" என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யு கோர்ட்டில் சி.பி.ஐ. அவரை நேரில் ஆஜர்படுத்தியது. அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    ×