என் மலர்
நீங்கள் தேடியது "explosives"
- 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என தகவல்.
பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் வைத்து சென்ற பையில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ரவை இட்லி வாங்கிக் கொண்டு அதை சாப்பிடாமால் பையை மட்டும் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார்.
- குக்கர் வெடிகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.
நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இதைதொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் பாதுகாப்பு படையினரால் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 கிலோ வெடிபொருட்கள் கொண்ட தொடர் IED வெடிகுண்டு மற்றும் 1 குக்கர் வெடிகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
- சிதம்பரத்தில் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
- வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில்தெருவை சேர்ந்தசெந்தில் என்பவர்சிதம்பரம் புறவழிச்சாலையில் வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். கடந்த 2021ம்ஆண்டு தேர்தல் நேரத்தில் பறக்கும் படை அதிகாரி கள் இந்த குடோனில் திடீர் சோதனை செய்தபோது அனுமதித்த அளவுக்கு அதிகமாக வெடி பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிகாரிகளின் தொடர் விசாரணையில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரால் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிநேற்று மாலை இந்த வெடிமருந்து குடோனில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 582 வானவெடிகள், 35 நாட்டு சணல் வெடிகுண்டு,7 கிலோ கரி, 250 கிராம் சல்பர், 300 கிராம் பொட்டாசியம், வெடி மருந்து 1800 கிராம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிஅந்த வெடிமருந்து குடோனுக்கு சீல் வைத்தார். பின்னர் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதுகுறித்து கோட்டாட்சியர் ரவி, கடலூர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.
- கடலூர் அருகே இன்று பயங்கரம் பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து 3 பேர் பலியானர்.
- தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே எம்.புதூரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இன்று காலைஊழியர்கள் பணியில் இருந்தனர். இங்கு இன்று மதியம் திடீர் என குடோனில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. அதோடு அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது போல் வீடுகள் குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சத்தம் வந்த திசை நோக்கி சென்றனர். அப்போது நாட்டு வெடிகள் வைத்திருந்த குடோன் இடிந்து தரைமட்டமாகி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில்காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர்.
விசாரணையில் இந்த குடோனில் 7பேர் வேலை பார்க்க வந்தனர். 2 பேர் மதிய உணவுக்கான சென்று விட்டனர். மீதமுள்ள 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மற்ற 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த ஒருவரின் உடல் சிதறி கிடந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வயநாடு அருகே உள்ள பூக்காடுனங்கு பகுதியில் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர்.
அவர்கள் பல்கலைக் கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியை மிரட்டி நுழைவு வாயில் அருகே சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிளக்ஸ் போர்டுகளையும் கட்டினர்.
சுவரொட்டியில் சி.பி.ஐ. மாவோயிஸ்டுகளின் 14-ம் ஆண்டு பிறந்த நாள் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கொண்டாடப்படும் என எழுதப்பட்டு உள்ளது. பின்னர் வெளியே செல்ல காவலாளியிடம் வழிகேட்டனர். காலையில் அந்த வழியாக 3 மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் வழி கேட்டு விட்டு மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் புகுந்துவிட்டனர்.
மாவோயிஸ்டுகள் அங்கிருந்து செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வெடி பொருளை வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வயநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். மாவோயிஸ்டுகள் வைத்து சென்ற வெடி பொருளை வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது அவை வெடி பொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. வயநாடு பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் நடமாட்டம அதிகரித்து வருகிறது. அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.