search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "failure of negotiation"

    • ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.
    • இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,

    வெங்கரையில் எழுந்தருளியுள்ள வெங்கரைகாளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இக்கோவில் விழா மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 1-ந் தேதி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் மீண்டும் சுமூக தீர்வு ஏற்படாததால், திருச்செங்கோடு உதவி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா பேச்சு வார்த்தை 2-வது முறையாக தோல்வியடைந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்கப்பட்டது.
    • இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்கப்பட்டது. இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

    நேற்று கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தி

    யாளர் சங்க தலைவர் சங்க

    மேஸ்வரன் தலைமையில், 3-ம் கட்ட போனஸ் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து சங்க மேஸ்வரன் கூறியதாவது:-

    நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக

    உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறியதன்படி, கடந்த ஆண்டு கொடுத்த 8.15 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறினோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் அதற்கு உடன்படாமல் சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார். விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்ரமணி கூறுகையில், நாங்கள் 20 சத வீதம் போனஸ் கேட்டோம். ஆனால் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு கொடுத்த 8.15 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறினார்கள். அதில் எங்களுக்கு உடன்பா டில்லை என்றனர்.

    இதில் கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சுந்தரராஜ், ராஜேந்திரன், குமாரசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலசுப்ரமணி, சுப்ரமணி, பாலுசாமி, வெங்கடேசன், சரவணன், சரஸ்வதி, செல்வராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×