என் மலர்
நீங்கள் தேடியது "Fans"
- உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், சீமான், தொல். திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் திமுகவிலிருந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை. குறிப்பாக தமிழ் திரைத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆனால் விஜயின் இந்த வாழ்த்து செய்திகளே ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசிற்கு எதிராக பதிவிட்டதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசியதும் திமுக அரசிற்கு நெருக்கடியை உருவாக்கியது.
இதனால் தான் விஜய்க்கு திமுகவிலிருந்து யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
- வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- ஆப்கானிஸ்தான் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவை பொறுத்து 3 அணிகளில் (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் ஆட்டம் நடைபெற்றது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
இதனை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியதை கண்ட அந்த நாட்டு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்க்ரஹர் என்ற இடத்தில் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வந்த இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.
- அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆடுகளம், வந்தான் வென்றான். ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டாப்சி பன்னு. லாரன்ஸ் நடித்த முனி 3 படத்தில் பேயாக நடித்து மிரட்டினார்.
தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வந்தார். ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடித்த 'டங்கி' என்ற படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டென்மார்க் பேட்மின்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உதய்பூரில் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டாப்சி.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு என் உதடுகளும் உள்ளங்கால்களும் சிவந்திருக்கும் போது பச்சையாக என்னை நோக்கி வராதே என தலைப்பிட்டு படத்தை பகிர்ந்துள்ளார் டாப்சி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்துள்ளனர்.
- ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டு வருகின்றனர்.
2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். காலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து இந்திய வீரர்கள் மும்பைக்கு புறப்படனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். வான்கடே மைதானத்தில் வாழ்த்து நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் கடுமையான கிண்டல், கேலி செய்த வேளையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக் என்று அவரது பெயரை கோஷமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மகிழ்ச்சியான தருணங்களும், என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
- ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர்.
டி 20 உலகக்கோப்பை கொண்டாட்டங்கள் நேற்று மும்பையில் களைகட்டியது. வான்கடே மைதானத்தில் வைத்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றிடயை கொண்டாடித் தீர்த்தனர். மகிழ்ச்சியும் உணர்வுபூர்வமான தருணங்களும் மைதானத்தை நிறைத்தது.
மகிழ்ச்சியான தருணங்களையும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது. டிஜே பாடல்கள் மைதானத்தை அதிரவைத்த நிலையில் இந்திய வீரர்கள் அவற்றுக்கு வெற்றிக் களியாட்டம் போட்டனர்.
மைதானத்தில் நடந்த ரெயின் டான்ஸ் பார்ட்டியில் ஷாருக் கான் படத்தின் பிரபல பாடலான சக் தே இந்தியா பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர். ரசிகர்களும் அவர்களின் உற்சாக மனநிலை தொற்றிகொள்ளவே வான்கடே மைத்தனமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாடல்களுக்கு இந்திய வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
- ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.
இந்திய திரையுலகில் தற்போது பெயர் சொல்லும் முன்னனி நடிகைகளில் ஒருவர் தன்னா. நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் ஒருவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர். கதாபாத்தரத்தை முழுமையாக ஏற்று நடிப்பதிலும் , ஒரே படத்தில் பல குணங்களை வெளிக்காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர்.இவரது திரைபயணம் 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமன்னா. இதுவரை மூன்று மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.

நடிகை தமன்னா சமீப காலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- "சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாகவே எனது முடிவுகளும் இருந்தன. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதற்காக 100 சதவீதம் உழைத்தேன். இப்போது சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.
ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
- ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ராயன் படத்தின் நடித்த துஷரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்னா முரளி, மற்றும் பலர் அவர்களது வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
ரசிகர்கள் அவர்களது அன்பை மற்றும் வாழ்த்தை தெரிவிக்க இன்று தனுஷின் வீட்டை சூழ்ந்தனர், அங்கு தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தாற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கான்பூர் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் சி பால்கனி தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.
- ஒருவேளை ரிஷப் பண்ட் அடிப்பதை பார்த்து வெறும் 50 ரசிகர்கள் துள்ளிக் குதித்தால் கூட அந்த தளம் தாங்காது.
வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது,. இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது போட்டி உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கும் க்ரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கும் அந்தப் போட்டிக்காக கான்பூர் சென்றடைந்துள்ள இந்திய அணியினர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கான்பூர் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் சி பால்கனி தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் 4800 ரசிகர்கள் அமரக்கூடிய அந்த தளத்தில் 1700 பேர் மட்டுமே போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அந்த தளம் வலுவாக இல்லை என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதை சீரமைக்க நாட்கள் தேவைப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது பற்றி மைதான இன்ஜினியர் கூறியதாவது:-
ஒருவேளை ரிஷப் பண்ட் அடிப்பதை பார்த்து வெறும் 50 ரசிகர்கள் துள்ளிக் குதித்தால் கூட அந்த தளம் தாங்காது. மிகவும் மோசமாக உள்ள அந்த தளம் சீரமைக்கப்பட வேண்டும்" என்று கூறினார். இதனால் சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தை சரியாக கவனிக்காமல் இருக்கும் பிசிசிஐ மீது இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்திய வருகிறார்கள்.
- வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது.
- ரசிகர்கள் திரையரங்கில் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ஆயுத பூஜை கொண்டாட்டமாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது. பல திரையரங்கில் காலை முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கியது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
என்கவுன்டர் பற்றி அலசும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சனும் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருவர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருப்பதால் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் ஆர்வத்துடன் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.
வேட்டையன் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பல திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் ஆகிய இருவருடன் இணைந்து பகத் ஃபாசில், ராணா, கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெண் கதாபாத்திரங்களையே மையப்படுத்தி நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூர், ஐதரபாத், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் என இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்தை காண ரஜினி ரசிகர்கள் குவிந்து வருகினனறனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார்.
- பட்டாசு வெடிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் என எனது தந்தை கூறினார்.
தமிழில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருந்தார்.
அவர் கூறும்போது 'சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்றார். அவர் சொன்னது சரி என்று தோன்றியது. அன்று முதல் இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை'' என்றார்.
இந்த பேச்சு வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் ரகுல் பிரீத் சிங்கை சாடி வசைபாடி வருகிறார்கள்.
விலை உயர்ந்த ஆடை அணிகிறீர்களே, சாதாரண உடை அணிந்து பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்வீர்களா? நீங்கள் விலை உயர்ந்த உணவு சாப்பிடாமல் சாதாரண உணவை சாப்பிடலாம் இல்லையா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவித்தது.
- ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி 87 ஆயிரத்து 242 ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர்.
- இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
- போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் (பிப்ரவரி 6) நடைபெறுகிறது.
இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க கூடியதால் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குடிப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாக்கில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.