என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father son"

    • பெண்களை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க வேல்.இவரது மனைவி பாக்கியம் (வயது54). இதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவர் மகன் பிள்ளையார் சித்தன் (27). இவர் பாக்கியம் வீடு அமைந்துள்ள சந்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

    இதனால் விபத்து ஏற்படும் என்று பாக்கியம் அவரை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக பிள்ளையார் சித்தன், தனது தந்தை ராமரிடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் ஆகியோர் பாக்கியத்துடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

    அதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த 2 பெண்களும் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா பெண்களை தாக்கிய ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஏ.டி.எம். மையங்களில் வைத்த பணத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் பணம் நிரப்பிய பாண்டியன் நகர் மற்றும் ராமமூர்த்தி ரோடு பகுதி ஏ.டி.எம். மையங்களை ஆடிட்டர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது 2 மையங்களிலும் சேர்த்து ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, பணம் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சக்தி கண்ணன் (வயது 28) தான் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே பணத்தை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்ட சக்திகண்ணன் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கட்டியுள்ளார். மீதி பணத்தை கட்டாமல் இழுத்தடித்தார்.

    இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கிருஷ்ண நாராயணன், விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பணம் மோசடி விவகாரத்தில் சக்தி கண்ணனின் தந்தை ஆண்டவர் (53) சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

    அதன் பேரில் தந்தை- மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மீன்சுருட்டி, 

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது மகன் தினேஷ்குமாருடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். 

    அப்போது அதே தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஜவகர்(24) முன்விரோதம் காரணமாக தவசாமியையும், தினேஷ்குமாரையும் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து ஜவகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில் - கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.

    அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.

    மரத்தை வெட்டிய தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சின்ன சேமகோட்டை பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 62), விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்து (51).

    கலியன் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது முத்துவீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தை வெட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கலியன் மனைவி சின்னபாப்பா (60) என்பவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து, அவரது மகன் ராமராஜன் (27), அவரது மனைவி தைலம்மாள் (25) ஆகியோர் எப்படி எங்கள் மரத்தை வெட்டலாம் என்று கூறி சின்னபாப்பாவிடம் தகராறு செய்தனர். 

    பின்பு அவரை ஆபாசமாக பேசி உருட்டுகட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சின்னபாப்பா கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து சின்னபாப்பா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய முத்து அவரது மகன் ராமராஜன் ஆகியோரை கைது செய்தார்.
    ×