என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "father son"
- 2 மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.
- போலீசார் விசாரணை நடத்தி நகை திருடிய தந்தை-மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மகனுக்கும், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது மணமகன் அறையில் இருந்த 16 பவுன் நகை திருடுபோனது.
திருமண வீட்டில் கலந்து கொள்வது போல வந்த மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ்எட்வர்டு, ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணையை தொடங்கினர்.
திருமண வீட்டில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்த கேமராமேனிடம் இருந்த வீடியோக்களை போலீசார் பார்வையிட்டனர். இதில் இருவீட்டாருக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 பேர் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். நகை திருட்டில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் நரசிம்மபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(48) மற்றும் அவரது 16 வயது மகன் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 16 பவுன் நகை மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- முத்தையா 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார்.
- தகராறின்போது அல்லாத்தான், முத்தையாவை சரமாரியாக தாக்கினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்தையா (வயது 64). இவரது முதல் மனைவி பூலம்மாளின் மகன் அல்லாத்தான். முத்தையாவின் முதல் இரு மனைவிகள் இறந்து விட்டதால், 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான 2 வீடுகளில் ஒரு வீட்டை அல்லாத்தானுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் மற்றொரு வீட்டையும் தனக்கு எழுதி தருமாறு அல்லாத்தான் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அல்லாத்தான், தனது தந்தை முத்தையாவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லாத்தானை இன்று கைது செய்தனர்.
- மாணிக்க வாசகம் டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாபநாச பெருமாள் இறந்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பாபநாச பெருமாள். இவரது மகன் மாணிக்க வாசகம் (வயது 21). பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு பாவூர் சத்திரத்தில் உள்ள டீக்கடை யில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது தந்தை பாபநாச பெருமாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மாணிக்கவாசகம் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனவிரக்தியில் இருந்து வந்த மாணிக்க வாசகம் நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெண்களை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க வேல்.இவரது மனைவி பாக்கியம் (வயது54). இதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவர் மகன் பிள்ளையார் சித்தன் (27). இவர் பாக்கியம் வீடு அமைந்துள்ள சந்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.
இதனால் விபத்து ஏற்படும் என்று பாக்கியம் அவரை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பிள்ளையார் சித்தன், தனது தந்தை ராமரிடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் ஆகியோர் பாக்கியத்துடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.
அதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த 2 பெண்களும் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா பெண்களை தாக்கிய ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் பணம் நிரப்பிய பாண்டியன் நகர் மற்றும் ராமமூர்த்தி ரோடு பகுதி ஏ.டி.எம். மையங்களை ஆடிட்டர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது 2 மையங்களிலும் சேர்த்து ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, பணம் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சக்தி கண்ணன் (வயது 28) தான் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே பணத்தை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்ட சக்திகண்ணன் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கட்டியுள்ளார். மீதி பணத்தை கட்டாமல் இழுத்தடித்தார்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கிருஷ்ண நாராயணன், விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பணம் மோசடி விவகாரத்தில் சக்தி கண்ணனின் தந்தை ஆண்டவர் (53) சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அதன் பேரில் தந்தை- மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்