என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festivals"

    • கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல், முதலாம் ஆண்டு நிறைவு விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவீதி உலா மற்றும் திருமுறைகள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்து நால்வர் திருமேனிகள் மற்றும் திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவன் அடியார்கள் தங்களின் சிரமேல் வைத்து பக்தி பெருக்குடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கைலாய வாத்தியம் முழங்க திரு வீதிஉலா நடைபெற்றது.திருவீதி உலாவின் போது சிவன் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் ஆங்காங்கே பொதுமக்கள் நீர்மோர், இளநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, பட்டுக்கோட்டை, திருச்சி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவர்.
    • 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நாளை இரவு தொடங்கி 6-ந் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி நாளை இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கைகளுடன் விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    திருவிழாவை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும்,பால், பன்னீர்,இளநீர், சந்தனம்,குங்குமம், மாப்பொடி ,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நடைபெற்றது.

    தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும்.
    • பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும். அனைத்து பண்டிகைகளும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கக் கூடியவை. அதேசமயம் பண்டிகைக்கு தயாரிக்கும் பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பண்டிகை நாட்களில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு சில குறிப்புகள்:

    பண்டிகைக்கால பரபரப்பில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். அதனால் மதியம் உணவு சாப்பிடும் அளவு அதிகரிக்கும். இடையில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எண்ணம் உண்டாகும். அதன் காரணமாக பண்டிகை பலகாரங்களை கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவீர்கள்.

    பண்டிகை நாட்களில் உடல் எடையை குறைப்பது சாத்தியம் இல்லாதது. உறவினர்களும், நண்பர்களும் இனிப்புகளை வழங்கும்போது உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே உடல் எடையை குறைக்கும் எண்ணத்தைத் தவிர்த்து, தற்போது இருக்கும் எடையை அதிகரிக்காமல் பராமரிப்பதற்கான வழிகளை கடைபிடியுங்கள்.

    பண்டிகை நாட்களிலும் உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள். மிதமான உடற்பயிற்சிகள், உடங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மன நிறைவையும் உண்டாக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல் வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கிய மான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும். குளிர்பானங்கள் குடிப்பதில் சற்றே கவனமாக இருங்கள்.

    அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் மதிய உணவில் அதிக கொழுப்பு உள்ள பொருட்களையும், இனிப்புகளையும் சாப்பிட்டீர்கள் என்றால். மற்ற நேரங்களில் எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு நாளுக்கு கூடுதலாக 500 கலோரிகள் எடுத்துக்கொண்டால். அது உங்கள் உடல் எடையில் விரைவாக எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். பண்டிகை நாட்களாகவே இருந்தாலும், ஆரோக்கிய மான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுங்கள். எண்ணெய், கொழுப்பு நிறைந்த, மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவதே நல்லது.

    • இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.
    • தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.

    தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.

    இத்திருநாளை தெய்வீகத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றி கொண்டாடுகிறது.

    பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான

    பங்குனி உத்திர திருநாளில் தான் அநேக தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன.

    இந்த புராண அடிப்படையிலேயே பங்குனி மாதத்தில் சைவத் திருத்தலங்களோடு, வைணவ ஆலயங்களிலும்

    திருக்கல்யாண உற்சவ மாத பங்குனி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

    இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.

    • சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.
    • இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

    சிருஷ்டித் தொழிலுக்கு ஆக்கப்பூர்வ மாக உதவுபவன் காமன் ஆகிய மன்மதன்.

    இவனது மனைவி ரதி. ஒரு சமயம் மன்மதன் தேவர்கள் வேண்டுகோளின்படி தன் மனைவியைப் பிரிந்து வந்து தியானத்தில் இருந்த

    சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தம் நெற்றிக் கண் அக்னியால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

    இதையே காமதகனம் என்பர்.

    தன் கணவனின் மரணத்தை அறிந்து வருந்திய ரதி ஓடோடி வந்து சிவபெருமானை வேண்டி, மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.

    அவள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் படியாக காமனை உயிர்ப் பெற்று எழச்செய்தார்.

    இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

    அன்று மன்மதன் ரதியை வழிபடுவோருக்கு சிவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
    • இதன்மூலம் சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருநாள் பண்டைய காலந் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

    சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திரு நாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.

    எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு.

    இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.

    இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம்.

    இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.

    சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில்,

    தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவையாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.

    இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

    • ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
    • இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்தது.

    தெய்வ முகூர்த்த நாளாகக் கருதப்படும் இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    மேலும் ஸ்ரீ ரங்கநாதனையே மணாளனாக தன் மனத்தில் வரித்துக்கொண்ட

    ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.

    இறைச் சித்தப்படி திருமாலைப் பிரிந்து பூலோகம் வந்த திருமகள் வஞ்சுளவல்லி நாச்சியாராய்

    அவதரித்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே என்று நாச்சியார் கோயில் தலப்புராணம் பேசுகிறது.

    எனவே சிறப்பு மிக்க இந்நாளில் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    • ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
    • இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது

    வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது.

    தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது

    மேலும் முருகப் பெருமானின் இச்சா சக்தியான வள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தபுராணம் பேசுகிறது.

    திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.

    பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம்.

    குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து

    ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.

    • இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
    • அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.

    சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ ெதாலைவில் இருக்கிறது கொள்ளிடம்.

    இத்தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள்.

    இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.

    இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.

    திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள்.

    அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்.

    பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.

    அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து பேசுகின்றன.

    தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.

    • அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
    • ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,

    அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு

    பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.

    ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,

    மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.

    முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,

    வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,

    ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

    • சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
    • அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும்.

    ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    பலி விழாப்பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்று திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.

    சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

    முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

    ×