என் மலர்
நீங்கள் தேடியது "Fighter Jet"
- 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
- ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
- குஜராத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் விமானிகள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
- ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு பைலட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.
போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
- மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல.
மிக்-29 போர் விமானம், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது எனவும் விபத்தின் போது விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
அரியானாவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குளாகி உள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஏர்கிராஃப்ட் போர் விமானம், பஞ்சகுலாவில் உள்ள மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விபத்துக்குள்ளானது.
விமானி ஒரு பாராசூட் துணைகொண்டு தரையிறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை நிர்மூலம் ஆக்குவதற்கு 12 ‘மிராஜ்-2000’ விமானங்கள பயன்படுத்தப்பட்டன.
இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.
இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.
ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குகிற பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான், இந்த மிராஜ்-2000 விமானங்களும். இந்தியாவிடம் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 விமானங்கள் உள்ளன.
இவை ஒற்றை என்ஜினை கொண்டவை. இந்த விமானங்கள் அதி நவீனமானவை.
இவற்றில் இருந்து ஏவுகணைகளை ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் போட முடியும்.
இவை, தாக்குதல் இலக்கை மிகத்துல்லியமாக சென்று நிர்மூலம் ஆக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ஏனென்றால், இந்த விமானங்களில் ‘தேல்ஸ் ஆர்.டி.ஒய். 2’ ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு வழிநடத்தக்கூடியவை. மேலும் நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்-2000’ விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை.
எனவே தான் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடியில் தர மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.
இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.