என் மலர்
நீங்கள் தேடியது "finance minister"
- கொரோனா பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது.
- வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வாஷிங்டன்:
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, உலக பொருளாதார நிலவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்டது.
அதில் நடப்பு நிதிஆண்டில் (2022-2023), இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கணிப்பில், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டனில் புரூக்கிங்ஸ் நிறுவனத்துடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று கால பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது என்றும், இந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடினமாக இருக்கலாம் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதாகும், அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
- பிரதமரின் படங்களை வைக்க பாஜகவினரும் அனுமதிக்கப்படவில்லை.
- பிரதமரின் பேனர் அகற்றப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்றும், இதனால் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் பேனர் அல்லது போஸ்டர்கள் வைக்கப்படுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்றும் நிதி மந்திரி அலுவலகம் சார்பில் டுவிட் செய்யப்பட்டது.
முன்னதாக பான்ஸ்வாடா பகுதிக்கு சென்ற மத்திய நிதி மந்திரியின் காரை மறித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், விலைவாசி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அந்த கும்பலை கலைத்தனர்.
- விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.
- அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தமது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் 8வது ஆண்டு தினத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பெரும் முன்னெடுப்பு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாகும். இது சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.
2014 ஆகஸ்ட் 28க்கு பின் பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள், 67 சதவீத கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களில் உள்ளன. ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத் தொகை இருப்புடன் 46 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களை பாதுகாத்தல், நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்தல் போன்றவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதன் மூலம் இதுவரை வங்கி சேவை கிடைக்காத பகுதிகளில் வங்கி சேவை வழங்குவதற்கும் வகை செய்துள்ளது.
மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் வாயிலாக, தகுதியுள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களில் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு வகை செய்துள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு நேரடி வருவாய், பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்கத் தொகை பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி சூழல் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் பலன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தெரிந்தது.
பிரதமரின் மக்கள் நிதித்திட்ட அணுகு முறையை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்ட கள அலுவலர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு, தமிழக அரசின் எதிர்ப்பு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் காரணங்களுக்காக தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில்(Label) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந்நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45 வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
1.வரிவிகிதங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல்.
2.தற்போதைய வரிவிகிதங்களை மறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.
இக்குழுவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளராகவும், பீகார், கோவா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இக்குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை. இக்குழு தனது பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.
அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் இவை மீதான வரிவிதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680 / ஆ1 / 2021,-இல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் (Fitment Committee) தமிழ்நாடு அரசின் பிரதிநிதியால் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 28 மற்றும் 29 ஆம் நாட்களில் சண்டிகரில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தின் 47வது கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.விவாதத்திற்கு பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சரே குறிப்பிட்டுள்ளார்.
உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் மத்திய அரசின் கருத்தொற்றுமை முடிவின்படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள், 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.
ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரியை தொடரவும், மற்ற 99 சதவீத பொருட்கள் 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரவும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி., ஆட்டோமொபைல், டயர், சிமெண்டு, ரியல் எஸ்டேட் சாதனங்கள், சில எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவை மீதான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GST #GSTCouncilMeeting
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.
நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.
இதேபோல், சமீபத்தில் அந்நாட்டின் மத்திய வங்கி தலைவரை நீக்கம் செய்து அதிபர் ஹசன் ரவுகானி உத்தரவிட்டதும், தொழிலாளர் நலத்துறை மந்திரியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றம் வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Iranfinanceremoved #MasoudKarbasian
உடல்நலம் சரியானதையடுத்து மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி.
மத்திய நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக சில மாதங்கள் ஓய்வெடுத்தார். எனவே, அருண் ஜெட்லி வசம் இருந்த நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.

2000-ல் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அருண் ஜெட்லி, இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை பா.ஜ.க. தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ArunJaitley
துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.
அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.
உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார். #Turkey #Erdogan #Tamilnews
புதுடெல்லி:
இந்தியாவில் இதற்கு முன்பு உற்பத்தி பொருள் மற்றும் விற்பனை செய்யும் பொருட்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தனித்தனியாக வரி விகிதங்களை வைத்திருந்தன.
அதை நாடு முழுவதும் ஒரே வரியாக்கி சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டு வரப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இன்றுடன் இந்த வரி முறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகிறது.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட போது, 4 விகிதங்களில் வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி 28 சதவீதம், 18 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என 4 அளவீடுகளில் வரி விதிக்கப்பட்டது.
இவற்றில் சில பொருட்களுக்கு வரிகளை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதால் சுமார் 320 பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. மூலம் ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி வருமானம் வரும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தனர். ஆனால், அதை விட அதிகமாகவே வருவாய் வந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டு முடிவில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.
எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரூ.94 ஆயிரத்து 63 கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.93 ஆயிரத்து 590 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.93 ஆயிரத்து 29 கோடியும், அக்டோபர் மாதம் ரூ.95 ஆயிரத்து 132 கோடியும், நவம்பர் மாதம் ரூ.85 ஆயிரத்து 931 கோடியும், டிசம்பர் மாதம் ரூ.83 ஆயிரத்து 716 கோடியும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 929 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 47 கோடியும், மார்ச் மாதம் ரூ.89 ஆயிரத்து 264 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடியும், மே மாதம் ரூ.94 ஆயிரத்து 16 கோடியும், வசூல் ஆகி உள்ளன.
அதாவது ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்ததை விட அதிக வரி வசூல் கிடைத்துள்ளது.
அதிக வரி கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய நிதித்துறை பொறுப்பு மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறும் போது, வரி வருவாய் அதிகரிக்கும் போது, அந்த வருவாய் நுகர்வோருக்கு சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தப்படும்.
அதிக வருவாய் கிடைக்கும் போது மத்திய பட்ஜெட்டில் பற்றாக்குறை குறையும். எனவே, அவை அடிப்படை கட்டுமானங்களுக்கு செலவிடப்படும். மேலும் வரி வருவாய் விகிதங்களை குறைப்பதற்கும் அது வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இப்போது வரி வருவாய் எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிகமாக வந்திருப்பதால் வரியை குறைக்க உள்ளனர்.
குறிப்பாக 28 சதவீதம் வரை வரி உள்ள பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமான பொருட்களான சிமெண்டு, பெயிண்டு உள்ளிட்டவைகளுக்கு வரி குறைப்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இன்னும் 11 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மக்களை கவரும் வகையில் இந்த வரி குறைப்பு இருக்கும்.
விரைவில் நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடை பெறும். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி சில பொருட்களுக்கு வரி குறைப்பு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி இருந்தார். இப்போது வரி வருவாய் அதிகமாக இருப்பதால் அதற்கான சாத்தியம் உருவாகி உள்ளது.
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
குறிப்பாக கார், புகையிலை பொருள், குளிர்பானங்கள் உள்ளிட்ட லக்சரி பொருட்களுக்கு 28 சதவீதம் வரி இருப்பதை சற்று குறைக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
சீரான வரி விகிதம் இவற்றில் இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை சொல்லி இருக்கிறார். எனவே, அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களின் வரி குறைய வாய்ப்பு உள்ளது.
மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறும்போது, மக்கள் எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் வருவாய் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கு வரி குறைப்பு செய்ய முடியும் என்று கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி வருவாய் அதிகரித்து இருப்பது குறித்து ஜி.எஸ்.டி. சேர்மன் அஜய்பூஷன் பாண்டே கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி திட்டம் செயல்பாடுகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து உள்ளது. அதன் நடைமுறைகள் சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் அதிகரித்து வருகிறது.
மாதத்துக்கு சராசரியாக ரூ.90 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் 1 கோடி கணக்கு தாக்கல்கள் நடைபெறுகின்றன. இதுவரை 12 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 380 கோடி கணக்கு வழக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலில் இருந்த பிழைகள் இப்போது குறைந்து வருகிறது.
இதுவரை 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 693 பேர் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்ந்து பதிவு செய்துள்ளனர். இது, ஏற்கனவே வரி செலுத்துவோர் எண்ணிக்கையை விட 48 லட்சத்து 38 ஆயிரத்து 726 அதிகமாகும்.
இதற்கு முன்பு 35 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு முறையான வரி விகிதங்கள் இருந்தன. மாநிலத்துக்கு மாநிலம் மதிப்பு கூட்டு வரி மாறுபட்டு இருந்தது.
இப்போது ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகித வரி முறை வந்துள்ளது. மேலும் இதற்கு முன்பு 37 வகையான கணக்கு வழக்கு பாரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. மூலம் அவற்றையும் எளிமையாக்கி ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் விகிதத்தில் கொண்டு வந்துள்ளோம்.
இதில், இன்னும் எளிமையை கொண்டு வரப்போகிறோம். வருமான வரி தாக்கலுக்கு எவ்வாறு ஒரே பாரத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றனவோ அதேபோல் ஜி.எஸ்.டி.யிலும் ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் வகையில் எளிமைப்படுத்த உள்ளோம்.
மேலும் இந்த வரிமுறைகள் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது, வியாபாரிகளுக்கு எளிமையாக அமைகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேலும் இது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை நடத்தி இன்னும் எளிமைப்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.
ஜி.எஸ்.டி. வரி முறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதால் இதில், வரி ஏய்ப்பு செய்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. எங்கேனும் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, யாரும் ஏமாற்ற முடியாது.
சிறு வியாபாரிகளும் எளிமையாக கணக்கை தாக்கல் செய்யும் வகையில் எல்லா வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு விளக்கங்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் புதிய சாப்ட்வேர்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #GST #GSTDay
கொழும்பு:
இலங்கை நிதிமந்திரி மங்கள சமரவீரா கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் அரசு பல ஊதாரித்தனமான திட்டங்களை தீட்டியது. அதை செயல்படுத்த சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்றார்.
வெளிநாடுகளிடம் இருந்து ரூ.65 ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. அதில் ராஜபக்சே அரசு மிக அதிக வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கோடிகடன் சீனாவிடம் இருந்து ஹம்பந் கோட்டா துறைமுகம் மற்றும் ராஜபக்சே பெயரில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்துக்காக வாங்கப்பட்டுள்ளது.
ராஜபக்சே பெயரில் கட்டப்பட்ட விமான நிலையத்துக்கு தினமும் ஒரே ஒரு விமானம் மட்டுமே வந்து செல்கிறது.
இதுபோன்ற பல ஊதாரித் தனமான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. ராஜபக்சே ஆட்சியில் ஊழலும், மோசடியும் பெருமளவில் நடந்துள்ளது. இதனால் கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது அடுத்த ஆண்டில் மிகவும் மோசமடையும். ஏனெனில் வருகிற 2019-ம் ஆண்டில் ஏராளமான கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உள்ளது’’ என்றார். #RajapaksaCorruption