என் மலர்
நீங்கள் தேடியது "Fire Brigade"
- உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் நேரு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ரமணி (வயது 68). இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரமணி பையூர் பாறை குளம் அருகே நடந்து சென்றார்.
அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பாறை குளம் பக்கமாக ரமணி சென்றதாக அந்த பகுதியில் உள்ள வர்கள் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த ரமணி உறவினர்கள் குளத்தில் தவறி விழுந்திருக்கலாமோ என்று எண்ணி சிலர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தனர்.
மேலும் இது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறிந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் பாருக்குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர்கள் தினமும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.
அதேபோல் நேற்றும் அவர்கள் சென்றனர். வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர். அப்போது அவர்களது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து தங்களின் மாடுகளை தேடி 3 பேரும் காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.
ஆனால் காட்டுக்குள் சென்ற 3 பேரும் மாலை 4 மணியாகியும் திரும்பி வரவில்லை. அவர்கள் திரும்பி வர வழி தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். மதியம் ஒரு மணியளவில் மாயாவிடம் அவரது கணவர் செல்போனில் பேசியிருக்கிறார்.
அதன்பிறகு அவரது செல்போன் கிடைக்க வில்லை. இதனால் காட்டுக்குள் சென்ற 3 பெண்களும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத் தினர் பரிதவித்தனர்.
இதுகுறித்து 3 பெண்களின் குடும்பத்தினரும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காணாமல் போன 3 பெண்களை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் உடனடயாக தொடங்கினர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மாலை தொடங்கிய தேடுதல் பணி இரவிலும் நீடித்தது. ஆனால் 3 பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை விடவில்லை.அப்போது காட்டுக்குள் சிக்கிய 3 பெண்களும் கண்டு பிடிக்கப்பட்டனர்.
அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் வழி தெரியாமல் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுவிட்டனர். திரும்பி வர வழி தெரியாமல் தவித்த அங்கேயே ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். அவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்கள் இன்று காலை வரை வனப்பகுதியில் இருந்தனர். அவர்களை வனத்துறையினர் இன்றுகாலை விடிந்தபிறகு காட்டில் இருந்து வெளியே அழைத்தது வந்தனர். பெண்களை மீட்டு வந்த குழுவினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
வனப்பகுதியில் சிக்கிய பெண்களை இரவு என்றும் பாராமல் விரைந்து செயல்பட்டு மீட்ட வனத் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
- இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
- 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.
இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.
மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- பாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை 25 ந் தேதி சுழற்சி முறையில் பணியில் இருக்கும்.
- மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தீபாவளி பண்டிகையின் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீக்காயத்துக்கு சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர் அடங்கிய பிரத்யேக குழு தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை (25 ந் தேதி) சுழற்சி முறையில் பணியில் இருக்கும். இதே போல் தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காங்கயத்தில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கில் இருந்து, தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை உட்பட தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைக்க தேவையான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்டத்தில் 3 நாட்கள் நடக்கும் தீக்காயம் தொடர்பான விபத்து, சிகிச்சைகளை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேப்போல் தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
- விழுப்புரம் அருகே நடு ரோட்டில் கெமிக்கல் லாரி பற்றி எரிந்தது.
- விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம்:
திருச்சி பெரமங்கலத்தில் இருந்து சோடியம் பை கார்பனேட் கெமிக்கல் லோடு சுமார் 15 கேன்களில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை ரெட்டில்ஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) கவிராஜ் (26) என்பவர் ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது லாரி என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவர் மோகன்ராஜ் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று லாரியில் இருந்து பயங்கர வெடி சத்தம் ஒன்று கேட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த மற்றொரு டேங்கர் லாரி மீதும் தீ பரவியது. இந்த விபத்தில் மோகன்ராஜ் கவிராஜிற்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மோகன்ராஜ், கவி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த லாரியை போராடி அணைத்தனர்.