என் மலர்
நீங்கள் தேடியது "firearm"
- அப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குட்மேன் குறை கூறி வந்தார்
- ஸெரபியின் தந்தையை அலட்சியப்படுத்திய குட்மேன் ஸெரபியை நோக்கி முன்னேறினார்
அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க் பகுதியில் தன் தந்தையுடன் வசித்து வந்தவர் சிறுமி ஸெரபி மெதினா (9).
இவள் வசிக்கும் வீட்டின் தெருவின் எதிர் புறத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் மைக்கேல் குட்மேன் (43). அவர் சில நாட்களாக அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குறை கூறி வந்தார்.
குழந்தைகளால் அதிக சத்தம் வருவதாக அதிருப்தி அடைந்த குட்மேன், ஸெரபியின் மீதும் குற்றம் சாட்டி, ஸெரபியின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 09:30 மணியளவில் ஸெரபி, தனது வீட்டருகே குழந்தைகளுக்கான ஸ்கூட்டரை ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தார். அவருடன் அவரின் தந்தையும் இருந்தார்.
அப்போது ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. ஸெரபியின் தந்தையின் உடனே ஸெரபியை வீட்டிற்கு உள்ளே போக சொல்லி அவசரப்படுத்தினார். உடனே ஸெரபியும் தனது குழந்தைகளுக்கான ஸ்கூட்டரில் தனது அபார்ட்மென்ட்டின் உள்ளே செல்ல முற்பட்டாள்.
அப்போது குட்மேன் கையில் ஒரு துப்பாக்கியுடன் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஸெரபியை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
இதனை கண்ட ஸெரபியின் தந்தை அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்க முற்பட்டார். ஆனால் அவரை அலட்சியப்படுத்திய குட்மேன் ஸெரபியை நோக்கியே வேகமாக நடந்தார்.
இதனையடுத்து விபரீதத்தை உணர்ந்த ஸெரபியின் தந்தை தன் மகளை காக்க அவளை நோக்கி ஓடினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் செல்லும் முன்பாக குட்மேன் துப்பாக்கியை உயர்த்தி ஸெரபியின் தலையை நோக்கி சுட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த ஸெரபியின் தந்தை குட்மேனை பிடிக்க அவரோடு போராடினார். இதில் அந்த துப்பாக்கி மீண்டும் வெடித்தது. இதில் குட்மேன் கண்ணில் குண்டு பாய்ந்தது.
குட்மேன் துப்பாக்கியால் சுட்டதில் ஸெரபி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினரும், அவசர கால மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ பகுதியிலிருந்து 9 மிமீ துப்பாக்கி குண்டுக்கான மேற்பகுதியும் ஒரு துப்பாக்கியையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டெடுத்தனர். குட்மேனின் இல்லத்தின் சுவற்றிலும் ஒரு குண்டு பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காயமடைந்த குட்மேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். அவர் மீது பிணையில் வர முடியாத பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை மைக்கேல் குட்மேன் சுட்டதற்கான காரணம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
- அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என கடந்த 7-ந் தேதி அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதில் முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் உரிமம் பெற்று தற்காப்பிற்காக வைத்துள்ள ஒற்றைக்குழல், இரட்டைக் குழல் துப்பாக்கிகள், ரைப்பிள், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளை உரிமையாளர்கள் உடனடியாக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதன் பேரில் இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற 286 துப்பாக்கிகள் உள்ளன. இதில் கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 268 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆனதும் உரிமையாளர்களிடம் மீண்டும் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.