search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flight Service Cancelled"

    • பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல், இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகா ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.


    இதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு பெங்களூரில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், வருகை விமானங்கள்5, புறப்பாடு விமானங்கள் 5, மொத்தம் 10 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி கள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாமலும் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும், இன்று 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டு உள்ளதால், விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன.
    • கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுனத்தில் பணிபுரியும் கேபின் ஊழியர்களில் ஒரு பிரிவினர் கடந்த 7-ந்தேதி இரவில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். நிர்வாகம் தங்களை தவறாக நடத்துவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அன்றைய தினம் ஏர் இந்தியாவின் 85 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் வேலைக்கு திரும்புவதாக ஊழியர்கள் கூறினர். ஆனால் அவர்கள் பணிக்கு திரும்பாத காரணத்ததால் நேற்று 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து கேரள மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநில விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள திருவனந்தபுரம், கண்ணூர், கரிப்பூர், கொச்சி ஆகிய 4 விமான நிலையங்களில் பல விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன. ஆனாலும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட வேண்டிய மஸ்கட் விமானம் இயக்கப்படவில்லை.

    இதேபோல் ஷார்ஜா விமான சேவையும் பாதிக்கப்பட்டது. கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், ரியாத், ராசல் கைமா, தம்மாம் , தோஹா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

    கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், குவைத், தோஹா, பஹ்ரைன், ராசல்ஹைமா ஆகிய விமான சேவைகள் ரத்தாகின. இதேபோன்று கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 4, கண்ணூரில் 8, கரிப்பூரில் 6, கொச்சியில் 4 என 22 விமான சேவைகள் கேரளாவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பி வருபவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

    ×