என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floodplain"

    • வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது.
    • கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நகரின் நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் அடையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் உள்ள 200 நீர் நிலைகளை இணைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் போதுமான சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே நீர்நிலைகளை தூர்வாரி இணைப்பு கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அடையாறு படுகையில் 196 குளங்களில் 134, கோவளம் படுகையில் உள்ள 120 குளங்களில் 66 நீர் நிலைகளை கட்அண்ட் கவர் முறையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரி அதிகப்படியான தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக தரைமட்டத்திற்கு கீழே மூடப்பட்ட கட்டமைப்புடன் வடிகால் கட்டப்படும். இவற்றை ஜப்பான் சர்வ தேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு தற்போது 22 டி.எம்.சி.யாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் துறை விரிவாக்கம் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் 28 டி.எம்.சி.யாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நகரின் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது இன்றியமையாதது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன.
    • 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தற்போது மரக்காணம் பகுதிகளில் விவசாய நிலங்களின் மணிலா நெல்லு, மரவள்ளிக்கிழங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டு உள்ளார்கள். அது தற்போது மழையினால் மூழ்கியது.

    கந்தாடு வண்டிப்பாளையம் கிளாப்பக்கம், ஓமிப்பேர், நாமக்கல் மேடுகாயல், மேலே எடசேரி, உப்பு வேலூர், கீழ்பெட்டை, அனுமந்தை, கூனிமேடு, மண்டபாய், ஆலப்பாக்கம் கலியங்குப்பம், செய்யாங்குப்பம் போன்ற கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்தது மழை தண்ணீரில் மூழ்கியது.

    அதுபோல், பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் செல்வதால் வண்டிப்பாளையம் ஆதிகுப்பம் பகுதியில் தண்ணீர் செல்வதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கிலோமீட்டர் சுற்றி புதுவைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    தற்போது மரக்காணம் பகுதிகளின் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
    • மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக கன மழை பெய்ததால் 1,70,000 கன அடி தண்ணீர் சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தையா நகரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலமாக பேசினார்.

    அப்போது வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உங்களுடன், எம்.எல்.ஏ மேயர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சரை காண்பித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் யாரும் அச்சப்பட வேண்டாம்.

    நீங்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உள்ளிட்ட அனைவரும் உங்களுக்கு தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளிலும் உடனடியாக செய்து தர உத்தரவிட்டுள்ளேன் என பேசினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அமைச்சருக்கு வீடியோ கால் மூலமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
    • தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

    வி.கே.புரம்:

    நெல்லை மாவட்டம் அம்பை, முக்கூடல், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் முக்கூடல் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்கு அங்கு பணி யாற்றும் ஊழியர்களான ராஜரத்தினம், லோகராஜ், சங்கர சுப்பிரமணியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்குமார் தலைமையில், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் கயிறு கட்டி, கடும் வெள்ளத்தில் நீரேற்று நிலையத்திற்குள் சென்று அங்கு சிக்கியிருந்த 4 பேரையும் அதே கயிறு மூலமாக பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில்-வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
    • அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர்அணையில் இருந்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ,திருச்சி வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் கொள்ளிடத்தில் 2 கரைகளையும் தொட்டு வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இந்த வெள்ளம் எய்யலூரில் புகுந்து உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலை மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் செல்கிறது. அந்த பகுதி யில் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ள தால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்து க்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×