என் மலர்
நீங்கள் தேடியது "For girls"
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயா (வயது 38). இவர்களது மகன் அருண் (20) கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி, அருண், ஜெயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- புதுவை கல்வித்துறை சார்பில் காந்திநகர் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 3 மாதம் தற்காப்புகலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை சார்பில் காந்திநகர் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 3 மாதம் தற்காப்புகலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாக்கு புதுவை மாநில கோஜரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை குணசுந்தரி, உடற்கல்வி ஆசிரியர் சரவணன், மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் மாலதி, மகாலட்சுமி , அமுதா, கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவிகளுக்கு கராத்தே சங்க மூத்த பயிற்சியாளர் சிவமதிமாண வருக்கு பயிற்சி அளித்தார்.
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கூலித்தொழிலாளி.
- இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (55). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தொழிலாளி சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.