என் மலர்
நீங்கள் தேடியது "Ganges"
- கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
- மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெப்ப நிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மக்கள் சொல்லிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பஞ்சம், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் என நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமானது ஆகும்.
நாட்டில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அரசியல் போட்டியில் அண்டை மாநிலமான அரியானா யமுனை நதி நீரை அடைத்து வைத்துள்ள நிலையில் தலைநகர் டெல்லி தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த ஒன்றரை மாத காலமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
நீர் வற்றிய நிலையில் கற்பாறைகளும், குப்பைக்கூளங்களும், உடைந்த படகுகளும் நதி மணலில் கிடப்பது காண்போருக்கு வெயிலின் கொடுமையைதெள்ளிதின் உணர்த்துகிறது. வற்றாத ஜீவ நதியான கங்கையின் நிலைமையே இப்படியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இமய மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கும் கங்கை நதி இந்து மதத்தில் புனத்தமனாதாக பராக்கப்படும் நிலையில் மக்கள் அதிகம் புழங்குவதால் மிகுந்த அழுக்கடைந்த நிலையில் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்த உடல்களை கங்கை நதியில் வீசுவதையும் பார்த்து உள்ளேன்.
- கட்டுக்கதையில் இருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது.
மும்பை:
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் 19-வது ஆண்டு நிறுவன தினம் தாதரில் கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்துகொண்டு பேசியதாவது:-
எனது கட்சி பிரமுகர் பாலாநந்த்காவ்கர் மகா கும்பமேளா சென்றிருந்தார். அங்கிருந்து புனித கங்கை நீரை கொண்டு வந்தார். ஆனால் அதனை நான் குடிக்க மறுத்து விட்டேன் ஏனெனில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை பார்த்து உள்ளேன்.
சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை சொறிந்து கழுவுவதை கண்டு உள்ளேன். மேலும் உயிரிழந்த உடல்களை கங்கை நதியில் வீசுவதையும் பார்த்து உள்ளேன். இந்தியாவில் உள்ள எந்த நதியும் சுத்தமாக இல்லை. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது கங்கை நதி விரைவில் சுத்தம் செய்யப்படும் என அவர் பேசியதை நான் கேள்விப்பட்டு உள்ளேன். இப்போது இந்த கட்டுக்கதையில் இருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் பேசினார்.