என் மலர்
நீங்கள் தேடியது "Gender"
- திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
- வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நீதித்துறை, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுகந்தி வரவேற்று பேசினார். கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தலைமை தாங்கிபேசினார். அப்போது அவர் பேசியதாவது:- "ஒரு இனத்திற்கான உரிமை மறுக்கப்படும்போது அதனை பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு மீண்டும் உரிமைகள் மீட்கப்பட்டு வரும் காலங்களிலும் அவ்வுரிமைகள் தொடர வேண்டும் என்பதை நமக்கு நினைவு கூறுவதே உலக மகளிர் தின கொண்டாடப்படும் வரலாறு. ஒரு பெண்ணின் விடாமுயற்சியும் தைரியமும் அவர் உழைப்பினால் பெரும் வெற்றியும் அதன் பின்னர் வரும் காலங்களில் அந்த துறை சார்ந்தபெண்கள் சிறந்து விளங்குவதற்கு முதல் வித்தாகும். இனி வரும் காலங்களில் பாலின சமத்துவத்தை முன்னெடுத்து வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ சமுதாயத்தை தருவோம் என்று இந்த நன்னாளிலே நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டுகிறேன் என்றார்.
விழாவில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீ குமார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பழனிசாமி, சிவப்பிரகாசம், ராஜேந்திரன் மற்றும் நிறங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா நன்றியுரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மகளிர் தினத்தை முன்னிட்டு நிறங்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்ப ட்டது. அதனை தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா சார்பு நீதிபதிகள், நீதித்துறை, நடுவர்கள், வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்புகள்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனி திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.
ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டுவரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு.
சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ தயாரிப்புகள் மீது 25% வரி விதிக்கப்படும். சீன பொருட்களுக்கான வரி குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.
மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ப்படும். அமெரிக்க மக்களின் நலன் கருதி நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அரசு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் பேச்சு சுதந்திரம் கொண்டு வரப்படும். அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்கி கொள்ளலாம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய நவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எரிசக்தி செலவை குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும்.
உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை வழங்க முடியும். இது அமெரிக்காவிற்கும் பலன் தரும்.
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு ரூ.1 கோடி 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை 210 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 25 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவி வழங்கினார்.
பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-
தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருத்தணி போன்ற எல்லைப் பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தாய்மார்கள் ஆர்வம் காட்டுவது இல்லை என்று தெரிகிறது.
ஸ்கேன் மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து விடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் புதிதாக 1 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமானோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க உத்தேசித்து உள்ளோம்.
ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.எல்.ஏ., தாசில்தார் இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், துயர் துடைப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசிலன், தலைமை எழுத்தர் ரவி கலந்து கொண்டனர்.