என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl died"

    • சிறுமியை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மூவர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவரது மகள் அனுசியாஸ்ரீ (வயது6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அனுசியா ஸ்ரீ கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை அடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார்.

    உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனுசுயா ஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    • சிருஷ்டி தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனா. இவரது மனைவி சுமா.

    இந்த தம்பதியின் மகள் சிருஷ்டி (வயது 13). இவர் தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி சிருஷ்டி பள்ளிக்கூடத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த சமயத்தில் தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனே அப்பகுதி மக்கள் சிருஷ்டியை மீட்டு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்துபோனதும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது. 

    • இளம்பெண் மயக்கத்தில் இருந்ததால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
    • 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புக் குழு இளம்பெண்ணை மீட்டது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். பூஜ் தாலுகாவில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இளம்பெண்ணின் குடும்பத்தினர் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 490 அடி ஆழத்தில் இளம்பெண் சிக்கி உள்ளதாக புஜ் துணை ஆட்சியர் ஏ.பி.ஜாதவ் தெரிவித்தார். உள்ளூர் மீட்புக் குழு தொடர்ந்து ஈடுபட்டனர்.

    இளம்பெண் மயக்கத்தில் இருப்பதால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

    சிக்கியுள்ள பெண்ணை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குழுக்களும் அழைக்கப்பட்டன.

    இந்நிலையில், சுமார் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புக் குழுவினர் இளம்பெண்ணை மீட்டனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.
    • சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா.

    இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடினார். அப்போது அவர் அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை திடீரென எதிர்பாராதவிதமாக தொட்டார். இதில் மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு சிறுமியின் தாயார் அபிராமி அங்கு ஓடி வந்தார். மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மகளை மீட்டு மேட்டுப் பாளையம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச் சைக்கு சேர்த்தார்.

    ஆனால் அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோ தனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட் டதாக தெரிவித்தார். இதைகேட்டு அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விஷத்தன்மை மிக்க பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த பெண்ணும், குடித்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். #girldeath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர் மாவட்டத்தில் உள்ள மன்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் தனது இரண்டரை வயது குழந்தையுடன் நேற்றிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அவரை விஷத்தன்மை மிக்க பாம்பு கடித்துள்ளது. இதை அறியாமல் தூங்கிய அவர் குழந்தை அழுததால் அதற்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

    சற்று நேரத்தில் இருவரும் மூச்சுத்திணறலுடன் மயங்கி விழுந்தனர். உறவினர்கள் அவர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    சிகிச்சை பலனின்றி முதலில் குழந்தையும், பின்னர் தாயும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். #tamilnews #girldeath
    மாமல்லபுரத்தில் மாடியில் இருந்து விழுந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், திருக்குளம் தெருவில் வசித்து வருபவர் முகமது யாமின். இவரது மனைவி சீமா பேகம்.

    இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 6-வது மகள் அலிசா (வயது 6). இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம்.

    கடந்த 15-ந்தேதி அலிசா, வீட்டின் அருகே உள்ள மாடியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தாள்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அலிசாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அலிசா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×