என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government official"

    • அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

    • கல்யாணசுந்தரம் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி .
    • வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி சேர்ந்தவர்கல்யாணசுந்தரம் (72),இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஆவார்.இவர்நீண்ட நாட்களாகவயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்ததாககூறப்படுகிறது. நேற்று காலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார்.
    • 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அரசு வேலை என்பது படித்தவர்களிடம் பெரிய கனவாகவே இருந்து வருகிறது. அப்படி இருக்க கிடைத்த வேலையை அதுவும் கலெக்டர் வேலையை ஒருவர் உதறிவிட்டு துறவியாகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி அரசு பதவியை துறந்து செல்ல இருப்பவர் நாகராஜ். கர்நாடக அரசு அதிகாரியான இவர் தற்போது மண்டியா மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார். அந்த சமயத்திலேயே அவர் நாகமங்களாவில் உள்ள புகழ்பெற்ற ஆதிசுஞ்சனகிரி மடத்தில் துறவறம் மேற்கொள்ள தீட்சை பெற்றார். இதனால் அவருக்கு நிஷ்சலானந்தநாத் சுவாமிஜி என பெயர் சூட்டப்பட்டது.

    இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி, சாமியாராக போக நினைத்த முடிவை கைவிட வைத்தனர். இருப்பினும் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என வேட்கை மட்டும் அவருக்கு குறைந்தபாடில்லை. அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக அவர் தனது கூடுதல் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சாமியாராக மாற உள்ளார். இவர் ஒக்கலிக மகா சமஸ்தான மடத்தின் மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் சீடர் ஆவார்.

    துமகூரு மாவட்டத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பாலகங்காதர்நாத் சுவாமியிடம் கல்வி பயின்றார். இதனால் அவருக்கு ஆன்மிகம் மீது அதிக நாட்டம் ஏற்பட காரணமாகிவிட்டது.

    முதலில் கோர்ட்டில் எழுத்தராக பணியாற்றிய அவர் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ஹாசன், கே.ஆர்.பேட்டை, நாகமங்களா பகுதிகளில் தாசில்தாராக பணியாற்றி வந்துள்ளார். மக்கள் மத்தியில் நேர்மையான, திறமையான அதிகாரி என்ற பெயரும் நாகராஜுக்கு உள்ளது. இந்த நிலையில் அவர் அரசு பதவியை உதறிதள்ளிவிட்டு துறவறம் செல்ல இருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

    கர்நாடகத்தை பொறுத்தவரை கர்நாடக அரசு அதிகாரி ஒருவருக்கு அடிப்படை சம்பளம் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் ஆகும். இதர படிகள் சேர்த்து மொத்தம் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை ஒரு அதிகாரிக்கு சம்பளம் கிடைக்கும். அதன்படி நாகராஜ் சுமார் ரூ.2¼ லட்சம் ஊதியத்தை உதறிவிட்டு சாமியாராக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது
    • கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு அதிகாரியின் மைனர் மகன் ஓட்டிவந்த கார் சீக்கிய வழிபாட்டு ஊர்வலத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூரில் உள்ள ராஜா பார்க் பகுதியில் நேற்று இரவு 8:30 மணியளவில் பஞ்சவடி வட்டம் அருகே கோவிந்த் மார்க் பகுதியை ஊர்வலம் கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

    மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறிய போதிலும், ஒரு முதியவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த சீக்கியர் கூட்டம் ஒன்று விபத்து ஏற்படுத்திய கார் மீது தாக்குதல் நடத்தியது.

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு நபர் கார் பானட்டின் மீது ஏறி அதை தடியால் தாக்குவதும், கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.

    அரசு அதிகாரி ஒருவரின் மைனர் மகன் கார் ஒட்டி வர அவனுடன் மேலும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். விபத்தின் பின் அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதர்ஷ் நகர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.=

    அதிகாரியின் மைனர் மகன் போலீசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. காரின் கண்ணாடியில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர், அது சரிபார்க்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    ×