என் மலர்
நீங்கள் தேடியது "Governor RN Ravi"
- பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
- பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.
துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல்வர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே, கவர்னர் ரவி அவையை விட்டு வெளியேறினார்
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துவிட்டார். இதனால், கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அவர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே, கவர்னர் ஆர்.என்.ரவி கோபத்தில் அவையை விட்டு வெளியேறினார். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஏற்கனவே டெல்லியில்தான் இருக்கிறார். எனவே, அவர் சார்பில் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு ஜனாதிபதி மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் அவரை சந்திப்பார்கள். அப்போது, தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என தெரிகிறது.
- காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு இடையிலான பி.எஸ்.சி. நாட்டிக்கல் பிரிவுக்கான (கப்பல் கேப்டன்) இறுதி தேர்வு நடைபெற்றது.
- அதில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடந்தது.
திசையன்விளை:
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு இடையிலான பி.எஸ்.சி. நாட்டிக்கல் பிரிவுக்கான (கப்பல் கேப்டன்) இறுதி தேர்வு நடைபெற்றது.
அதில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிசான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாணவர் ஜிஸ்னுமோன்னை கல்லூரி தாளாளர் வி.எஸ்.கணேசன், செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ், கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி மற்றும் கேப்டன்கள், மாணவர்கள் பாராட்டினர்.
- சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும் ஈஷாவின் சார்பில் டி.என்.ஏ.யு. வில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
மேலும் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.

அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐ.என்.எஸ். அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப். மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.
இந்த இலவச யோகா வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோகா பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.
- ரஜினிகாந்த் குணமடைய வேண்டுகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கவர்னர் ஆன் என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
- சென்னையில் இருந்து நாளை மறுநாள்(சனிக்கிழமை) விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
- கவர்னர் வருகையையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை 3 மாவட்ட போலீசார் செய்து வருகின்றனர்.
நெல்லை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து நாளை மறுநாள்(சனிக்கிழமை) விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். பகல் 12 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறும் வ.உ.சி. 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
அங்கு வ.உ.சி. குறித்த புத்தகத்தை வெளியிடும் அவர் 12.45 மணிக்கு கார் மூலம் நெல்லை வருகிறார். பின்னர் மாலை 3.30 மணிக்கு தென்காசி மாவட்டம் மத்தாளம்பாறைக்கு செல்கிறார். அங்கு பத்மஸ்ரீ விருது பெற்ற சோகா கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனமான சோகா டெக்னாலஜி நிறுவனத்துக்கு செல்கிறார்.
மாலை 5.40 மணிக்கு கோவிந்தபேரி சோகோ டெக்னாலஜி நிறுவனத்துக்கு செல்கிறார். அங்கு அந்த நிறுவனம் பராமரித்து வரும் பள்ளிக்கூடத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து அந்த கிராம மக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். பின்னர் கலைநிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். அன்று இரவு குற்றாலத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார்.
மறுநாள் 19-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி ஆய்க்குடி அமர்சேவா சங்க 40-வது ஆண்டு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். பின்னர் தூத்துக்குடிக்கு செல்லும் அவர் அங்கிருந்து மாலை 3.45 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை 3 மாவட்ட போலீசார் செய்து வருகின்றனர்.
- நாளை மதியம் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை மதியம் சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
- தி.மு.க. அமைச்சர்கள் மீது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய ஆதாரங்களை கொடுத்து விட்டு வந்துள்ளாராம்.
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கவர்னர் ரவி சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆள் ஆளுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லி பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது.
உண்மையில் கவர்னர் ரவி எதற்காக டெல்லி சென்று இருக்கிறார்?
* தி.மு.க. அமைச்சர்கள் மீது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய ஆதாரங்களை கொடுத்து விட்டு வந்துள்ளாராம். இதுபற்றி விவாதிக்கவே கவர்னரை அமித்ஷா அழைத்துள்ளார் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
* பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கவர்னர் ரவி சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தென் இந்தியாவில் எப்படி செயல்படுகிறது என்பதை மத்திய உள்துறைக்கு விரிவான விளக்கமாக கொடுத்தது கவர்னர் ரவிதான். எனவே அதுபற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கவே டெல்லியில் இருந்து கவர்னருக்கு அழைப்பு வந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
* தமிழக அரசின் மசோதாக்களில் சிலவற்றை கவர்னர் ரவி இன்னமும் ஏற்காமல் உள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் பற்றிய விவகாரம். இது தொடர்பாக டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கவே அவர் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளையும் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
- டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருக்கும் கவர்னர் ரவி வருகிற 30-ந்தேதி (வெள்ளி) சென்னை திரும்புகிறார்.
சென்னை:
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டி.ஜி.பி.சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறும் போது, 'இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இன்று மாலையில் டெல்லி செல்லும் கவர்னர் ரவி நாளை டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
மேலும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருக்கும் கவர்னர் ரவி வருகிற 30-ந்தேதி (வெள்ளி) சென்னை திரும்புகிறார்.
பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னரின் திடீர் டெல்லி பயணமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.
சென்னை:
சென்னை வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
தஞ்சையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகனும் உடன் சென்றிருந்தார். இவர்கள் இருவரும் சுமார் 30 நிமி டங்களுக்கு மேல் கவர்னருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வரும் வேளையில் தமிழக அரசு இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாக மாநில கல்வி கொள்கைக்கான குழு அமைத்துள்ளதால் அதுபற்றியும் இவர்கள் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது.
ஏற்கனவே கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இப்போது பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.
- தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார்கள். அப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இத்தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
2011ல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கைந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, யாரெல்லாம் குற்றம்சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார், எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர். இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார், பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்பின்னர், நாங்கள் மனசு மாறிவிட்டோம், வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும்? என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அதனால்தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.