என் மலர்
நீங்கள் தேடியது "Graveyard Robbery"
- டிஜிட்டல் பேனர்கள் வைக்க தடை
- வேலூர் போலீசார் அதிரடி உத்தரவு
வேலூர்:
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மயான கொள்ளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மயானகொள்ளை விழாவில் செல்லவுள்ள தேரின் உயரம் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மயானக்கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீப்பிடிக்கக்கூடிய வகையில் உள்ள பொருட்களை பயன்படுத்தாமல், மின் சாதனப்பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்தல் வேண்டும்.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்படும் சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். மேலும் ஒலி அளவு வடிவிலான நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது, மின் திருட்டு செய்திடல் கூடாது. நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சியினர் பேனர்களோ, மதத்தலைவர்கள் பேனர்களோ வைத்தல் கூடாது.
பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வப்போது வருவாய், காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். சாமி சிலை ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு 3 மணிக்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்வித இடையூறும், இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
சாமி சிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். மாறாக மாட்டு வண்டிகள் மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூடாது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டு காளி, காட்டேரி நீலி, சூலி, அனுமான் போன்ற பல வேடங்கள் தரித்து பல பிரிவுகளாக ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பக்தர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் கலந்து கொள்ளவேண்டும்.
மயானக்கொள்ளை ஊர்வலத்தில் வரும் பக்தர்கள் மற்ற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் ஒலிபெருக்கி அமைத்து இசை தட்டு முழங்கியோ, பேசிபோ பாடல் இசைத்தோ ஊர்வலத்தில் செல்ல அனுமதி இல்லை.
மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது ஊர்வலத்தின் இடையிலோ அல்லது ஊர்வலத்தின் கடைசியிலோ செண்டமேளம், ஆகியவைகளை அடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரக்கூடாது. தாரை தப்பட்டை
மயானக் கொள்ளை ஊர்வலத்திற்கு முன்பு மட்டும் நிர்வாகிகளுடன் போக்குவரத்திற்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படாமலும் ஊர்வலத்தை நிறுத்தாமலும் நகர்ந்து கொண்டே மங்கள மேளம் அடித்து செல்லவும்.
மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது வழிநெடுகிலும் பட்டாசுகளை ஆங்காங்கே வெடிக்கக் கூடாது. ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்திலும், சாமி சிலை சேரும் சுடுகாட்டிலும் மற்றும் ஊர்வலம் நின்று பேச அனுமதிக்கப்பட்ட இடத்திலும் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் வரவேண்டும்.
மயானக் கொள்ளை ஊர்வலம் மசூதி மற்றும் சர்ச் வழியே செல்லும் போது ஊர்வலத்தில் செல்பவர்கள் மசூதிக்கோ, முஸ்லீம் மதத்தினருக்கோ புண்படும் வகையிலான செயல்களையோ செய்து கொண்டோ கோஷமிட்டுக்கொண்டோ அல்லது மசூதி முன்பு நின்று ஆட்டம் போடவோ கூடாது.
மயானக் கொள்ளை ஊர்வலத்தில் செல்பவர்கள் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் மற்றும் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் போஸ்டர் மற்றும் பேனர்களைக் வைக்க கூடாது.
மயானக் கொள்ளை 19-ந் தேதி நடைபெற ஊர்வலத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊர்வலம் நடைபெற உள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் பிற இடங்களுக்கு அனுமதி கிடையாது.
மயானக் கொள்ளை ஊர்வலத்தில் வருபவர்கள் யாரேனும் மது அருந்திய நிலையில் வரக்கூடாது. அவ்வாறு யாரேனும் வந்தால் தேவைப்படும் பட்சத்தில் மது போதையில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி ஊர்வலத்தினை அமைதியாக நடத்திட காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்.
மயானக் கொள்ளை திருவிழா தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள் வைக்ககூடாது மீறி வைப்பவர்கள் மீது காவல்துறை எடுக்கும் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
சாமி ஊர்வலத்தை மாலை 6 மணிக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு பழனி இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி செந்தில்குமார் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
- தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியிலிருந்து 13-நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ளஅம்மனுக்கும், சிவபெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு மயானத்தை நோக்கி அம்மன் புறப்பட்டு மயானத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை , காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலக்குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.