என் மலர்
நீங்கள் தேடியது "Halwa"
- மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் செய்வதாக நெல்லை இருட்டுக் கடை ஓனர் கவிதா கூறியுள்ளார்.
- இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார்.
நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருட்டுக்கடை அல்வா விளங்கி வருகிறது. இந்த இருட்டுக்கடையின் உரிமையாளர் கவிதா சிங். இவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் நெல்லையில் வைத்து பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தாயுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து கனிஷ்கா கூறியதாவது;-
எனக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று தாழையூத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் எனது கணவருடன் கோவையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார்.
இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந்தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தடைந்தேன். பின்னர் மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் நெல்லை வீட்டிற்கு வந்து எனது தாயிடம், உன் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும் , நெல்லையில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும். இல்லை என்றால் நான் உன் மகளுடன் வாழ மாட்டேன் என்று மிரட்டி சென்றார்கள்.
எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்தனர். பின்னர் வாட்ஸ்-அப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும், குறுஞ்செய்திகள் மூலம் என்னை மிரட்டுவது போன்ற செயல்களினால் எனது உயிருக்கும்,எனது பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இது கராச்சி அல்வா, நட்ஸ் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த அல்வாவை மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - ½ கப்
ஆரஞ்சு நிறம் - 1 சிட்டிகை
பொடித்த நட்ஸ் - ½ கப்
ஏலக்காய் பொடி - ¼ தேக்கரண்டி
செய்முறை
ஒரு ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை போட்டு அதனுடன் 1 ½ கப் தண்ணீர், ஒரு சிட்டிகை கேசரி கலர் சேர்த்து மாவு கரையும் வரை கலக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
சர்க்கரை கரைந்த பின்னர் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவு கலவையை சேர்த்துக் கலக்கவும்.
குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும் கிளறும் போது லேசாக கட்டிகள் உருவானால் பயப்பட வேண்டியதில்லை.
கார்ன்ஃப்ளார் மாவு ஓரளவு கெட்டியாக கண்ணாடி பதம் வந்த பிறகு அதில் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
நெய்யை முழுமையாக சேர்த்த பின்னர் பொடித்த நட்ஸ் சேர்த்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா திரண்டு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவிய பின்னர் தயார் செய்துள்ள அல்வாவை அதில் சேர்க்கவும்.
அதனை ஒரு கரண்டி கொண்டு சமமாக செய்த பிறகு ஓரளவு கெட்டியாகும் வரை ஆறவைக்கவும்.
அல்வா ஆறிய பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
சுவையான பாம்பே அல்வா தயார்.
- இந்த அல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
- சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
தினை அரிசி - 200 கிராம்,
கருப்பட்டி - 175 கிராம்,
முந்திரி - 30 கிராம்,
திராட்சை - 30 கிராம்,
பாதாம் - 20 கிராம்,
பிஸ்தா - 20 கிராம்,
நெய் - 100 கிராம்,
தண்ணீர் - 200 மி.லி.,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.
பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.
ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்.
பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.
- இருட்டுக்கடை அல்வா ருசிக்கு பெயர் போனது.
- இந்த அல்வாவின் அசாத்திய ருசிக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 200 மி.லி
சர்க்கரை - 4 ½ கப்
வறுத்த முந்திரி – 20
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
மாவை சாஃப்டாக பிசைந்த பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை 6 மணி நேரம் ஊற வைக்கவும். கலவை நன்கு ஊறிய பின்பு மாவை கையால் எடுத்து நன்கு அழுத்தி நீரில் அப்படியே கரைத்து விடவும்.
ஊற வைத்துள்ள தண்ணீரில் மாவு முழுவதும் கரைந்த பின்பு அதை வடிக்கட்டி பாலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த பாலை புளிக்க செய்யவும். அதற்கு பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது பால் நன்கு புளித்து மேலே ஏடு மிதக்கும். அதை மட்டும் கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிக்கட்டவும். இப்போது அல்வா செய்வதற்கான திக்கான பால் தயார்.
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றவும்.
சரியாக 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு பாலை கைவிடாமல் கிண்டவும். கரண்டியால் தொடர்ந்து கிளறினால் தான் கெட்டி தட்டாமல் சரியான பதத்தில் அல்வா வரும்.
அடுத்து 3 கப் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கரையும் வரை கிளறவும்.
இரண்டும் நன்கு கலந்து அல்வா பதத்திற்கு வந்தபின்பு கடாயை இறக்கி வைக்கவும்.
சர்க்கரை பாகு
திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். சூட்டில் சர்க்கரை கரைந்து பாகு போல் உருகி வரும். கெட்டி பதம் தட்டாமல் இருக விடாமல் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறிக் கொதிக்க தொடங்கியதும் இறக்கி விடவும்.
திருநெல்வேலி அல்வா
இப்போது மாவு இருக்கும் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளையாக இருக்கும் மாவு நிறம் மாறி அல்வா நிறத்திற்கு வரும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
இப்போது நெய்யை ஊற்றவும். கரண்டியால் அல்வாவை கிளறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் போதும். சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.
அல்வா தயாரானதும் அதை கையால் தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் வந்தால் சரியான பதம் என அர்த்தம்.
இப்போது சூப்பரான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது.
- இன்று இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3/4 கப்
கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 டம்ளர்
செய்முறை :
முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.
ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.
இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.
இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழை இலை - 2
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
* சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.
* வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.
* இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
- இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையானபொருட்கள் :
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100 கிராம்,
கர்ஜூர் (Khajur )- 8 (விதை நீக்கியது),
நெய் - 100 கிராம்,
எண்ணெய் - 50 மில்லி,
சர்க்கரை - 250 கிராம்,
டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.
நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.
வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.
ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.
சூப்பரான சத்தான ட்ரை ஃப்ரூட் அல்வா ரெடி.
இதை அப்படியேவும் கொடுக்கலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டியும் கொடுக்கலாம். இதை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
- அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலர் பலவிதமான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுள்ள ரவையில் அல்வா தயாரிக்க உள்ளார்.
இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.
ராம் அல்வா கிண்டுவதற்காக 12000 லிட்டர் கொள்ளளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
இது எக்கு மற்றும் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இதை தூக்குவற்கு கிரேன் பயன்படுத்தப்படும். அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.
7000 கிலோ எடையில் தயாரிக்கப்படும் ராம் அல்வா குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்பு, ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில விஷ்ணு மனோகர் பல முறை இடம் பிடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 12-வது முறைாக இடம் பெற்றது. அப்போது 75 வகையான அரிசியில் 75 வகையான பலகாரங்களை 285 நிமிடங்களில் தயாரித்தார். இவற்றின் மொத்த எடை 375 கிலோ. ராம் அல்வா தயாரிப்பு மூலமும், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புவதாக ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திரில் ஹல்வா தயார் செய்யப்படுகிறது.
- 6,000 கிலோ ஹல்வா பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் கோரடியில் உள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திரில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் உலகின் மிகப்பெரிய கடாயில் 6,000 கிலோ அல்வா தயாரிக்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பட்நாவிஸ் கூறுகையில், "இன்று நாக்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோரடி மந்திரில், ராமர் ராம்ஜன்பூமிக்கு வருவதையும், ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வையும் குறிக்கும் வகையில், 6,000 கிலோ ஹல்வா பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.
சந்திரசேகர் பவான்குலே இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றுள்ளார்" என்றார்.
- திருநெல்வேலியில் உள்ள பிரபல இருட்டுக் கடைக்கு சென்றார்.
- அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்வா சாப்பிட்டார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் வழங்கிய அல்வாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
அதன்பின் இருட்டுக் கடை என பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.
முந்தைய காலத்தில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை நடைபெற்றது என்றும், அப்போது மக்கள் அந்தக் கடையை 'இருட்டாக இருக்கும் கடை' எனக்கூறி அழைத்ததால் 'இருட்டுக் கடை' என பெயர் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டு தெரிந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணம் கொடுத்து அல்வா வாங்கிச் சென்றார்.
- அல்வாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிறகு, திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். அவர்கள் வழங்கிய அல்வாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் அல்வா வகைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
*கல்விக்கடன் தள்ளுபடி
*பயிர்க்கடன் தள்ளுபடி
*5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி
*சிலிண்டர் ரூ.100 மானியம்
*டீசல் விலை ரூ.4 குறைப்பு
*மாதம் ஒருமுறை மின்கட்டணம்
*100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம்
*நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2500
*கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ. 4000
*இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு
*அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள்
*காலியாக உள்ள 3.50.000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
*பழைய ஓய்வூதிய திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
கிஸ்மிஸ் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.
கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.
பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.