search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas Israel"

    • ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
    • இன்னும் ஹமாஸ் அமைப்பினர் வசம் 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதகிள் உள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரை கொன்று குவித்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு இழுத்து சென்றனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.

    திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வெகுண்டெழுந்தது. அந்த அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து மீண்டும் அங்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

    அதேவேளையில் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்பதற்காக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார்.

    இந்த நிலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார்.

    தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இந்த நிலையில் பணய கைதிகளின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த படுகொலைக்காக ஹமாசுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார். மேலும் பணய கைதிகளை கொன்றதன் மூலம் அவர்கள் (ஹமாஸ்) அமைதி ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

    பிணைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், உயிருடன் உள்ள மற்ற பிணைக்கைதிகளை உயிரோடு மீட்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்த நிலையில் 29 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பு ஒன்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை நடத்த அழைப்புவிடுத்துள்ளது. இதனால் இன்று இஸ்ரேல் நாட்டின் முழுவதும் பொது சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்கள் ஐந்து வயதிற்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு.
    • குழந்தைகள், சிறுவர்கள் 4707 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3155 பெண்களும் பலியாகியுள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தொடக்கத்தில் வான்வழி தாக்குதலால் காசா பகுதியை சீர்குலைத்தது. ஏவுகணை தாக்குதலால், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்க முடியாத அவல நிலை உருவானது.

    தற்போது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை காசாவில் குறைந்தது 11,470 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4,707 பேர் குழந்தைகள் மற்றும் மைனர்கள் ஆவார்கள். 3,155 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும், பெரும்பாலானோர் இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் இதுவரை உயிர்ச்தேசம் குறித்து அப்டேட் செய்து வந்தது. தற்போது இஸ்ரேல் அவர்களின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் உயிர்ச்சேதம் குறித்து அப்டேட் செய்யவில்லை.

    அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனால் மருத்துவமனைக்குள் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை, ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அதேபோன்று மேற்கு கரையின் சில பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இருந்தபோதிலும் கல்வி, சுகாதார அமைச்சகம் ஆகியவை மற்றும் பாலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசா மீதான தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது இஸ்ரேல்
    • தரைவழி தாக்குதலில் முழுப்படைகளுடன் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்கொள்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அமைப்புகளுடன் சேர்ந்து முழுப்படையுடன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் ஊடுருவலை முறியடிப்போம்.

    நேதன்யாகு மற்றும் தோற்கடிக்கப்பட்ட அவருடைய ராணுவமும் எந்தவொரு ராணுவ வெற்றியையும் அடைய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

    நேற்று இஸ்ரேல் துருப்புகளுடன் காசாவின் வடகிழக்கு நகரான பெய்ட் ஹனௌன் மற்றும் அல்-புரெய்ஜின் மத்திய பகுதியில் சண்டையிட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இதனால் வரும் நாட்களில் காசா பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ×