என் மலர்
நீங்கள் தேடியது "hanged"
- மரத்தில் 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழனிசாமி மின் விசிறியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள திங்களூர் அடுத்த திருக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவருக்கு திரு மணமாகி அன்னக்கொடி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.
இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று பழனிசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவ ர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பழனிசாமியின் மனைவி அன்னக்கொடி கோபித்து கொண்டு மகள்க ளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் பழனிசாமியின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உள் பக்கமாக மூடி இருந்தது.
வீட்டிக் கதவை தள்ளி திறந்து பார்த்த போது அங்கு பழனிசாமி மின் விசிறியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த சிவராந்தகம் பேட் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் வில்லியனூர் கொம்யூன் டேங்க் ஆப்ரேட்டராக அரியூர் வள்ளலார் தண்ணீர் டேங்கில் பணியாற்றி வந்தார்.
அவருக்கு காத்தாயி என்ற மனைவியும், நதியா என்ற மகளும், தேவநாதன் என்ற மகனும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி யினருக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பின்னர் அரியூரில் உள்ள தண்ணீர் டேங்குக்கு சென்றவர் டேங்கில் தண்ணீர் ஏற்றவில்லை.
சக ஊழியர் பாபு அதிகாலை செல்வத்திற்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. உடனே பாபு செல்வத்தின் மகன் தேவநாதனுடன் தண்ணீர் டேங்க் அறையில் சென்று பார்த்த போது செல்வம் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த தேவநாதன் இது குறித்து அவரது தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். வில்லியனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செல்வத்தின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பொறையூர் பேட் புது நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமளா. இவர்களது மூத்த மகள் தவப்பிரியா 14 இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த தவப்பிரியா தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை வெங்கடேசன் கண்டித்தாக தெரிகிறது. இதனால் தவப்பிரியா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
வெங்கடேசன் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி கோமளா மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது வீட்டில் தனியக இருந்த தவப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.
சிறிது நேரம் கழித்து பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கோமளா மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தவப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூரில் சோக சம்பவம்
- அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த கணுவாய்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சுந்தரம்(வயது47). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன.
ஆனால் உடல்நலக்குறைவால் அந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போனது. இதனால் சுந்தரம் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த சோகத்தை மறக்க மது பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
தினமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்த மஞ்சுளா வில்லியனூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஏற்கனவே குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்த சுந்தரம் தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை வழக்கம் போல் மஞ்சுளா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் சுந்தரம் வீட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் வேதனை
- மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்கமறுத்ததால் இறைச்சி கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது.36). இவர் அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாயா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
ராஜ்மோகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தினமும் வேலை முடிந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டி ருந்தார். அதுபோல் நேற்று மாலை ராஜ்மோகன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் ராஜ்மோகன் மனைவிடம் தகராறு செய்தார். இதையடுத்து மாயா தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை மாயா குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தார். கணவர் ராஜ்மோகன் மின்விசிறியில் வேட்டியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மனைவி மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் ராஜ்மோகன் வேதனையில் இந்த துயர முடிவை எடுத்த கொண்டதாக கூறப்ப டுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது.52). பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவருக்கு பூரணி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நாராயணமூர்த்தி தொடர்ந்து மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பூரணி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நாராயணமூர்த்தி தற்கொலை கொள்ள முடிவு செய்து மனைவி வெளியே சென்ற நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார்.
இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
- நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
- மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை 4 வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 51) இவர் புதுவை மரியாள் நகரில் உள்ள அங்கவாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு காயத்திரி என்ற மகள் உள்ளார். இவர் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
குப்பம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குப்பம்மாள் வீட்டின் மாடியில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய சரவணன் மனைவியை காணாததால் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்பம்மாளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பலராமன் (வயது64). இவருக்கு செல்வி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகன் மற்றும் வள்ளி மற்றும் துர்கா ஆகிய மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தனது இளையமகள் துர்கா வீட்டுக்கு சென்றிருந்தார். பலராமன் தனது மனைவி செல்வியை வீட்டுக்கு அழைத்து வருமாறு மகனிடம் கூறி வந்தார்.
அதற்கு மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் இதனை பலராமன் ஏற்காமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டு வராண்டாவில் பலராமன் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.வெளியில் சென்றிருந்த மணிகண்டன் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பலராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை குயவர் பாளையம் பகுதியை ராஜூ (வயது 65).
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு புதுவை அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பின்பு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு கொண்டிருந்தது. சரியாக சாபிடமுடியாமல் இருந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி ஜெயா வீட்டிற்கு வந்த போது ராஜூ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜூவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளைபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
- இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு வீதியை சேர்ந்தவர் மணி. மீனவர். இவரது மூத்த மகள் சுகந்தி(வயது35). இவருக்கும் காரைக்காலை சேர்ந்த நாகமுத்து என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு காரைக் காலில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற காரைக்காலில் இருந்து சுகந்தி நல்லவாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் பயண களைப்பாக உள்ளதாக கூறி சுகந்தி படுக்கை அறைக்கு தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் முத்து லட்சுமி படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சுகந்தி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுகந்தியை தூக்கில் இருந்து மீட்டு ஆட்டோவில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுகந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது44). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கோமதி ஒதியம்பட்டில் உள்ள தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகிறார்.
முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருந்து வந்தது.
இந்த நோய் காரணமாக கடந்த சில நாட்களாக முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் கொடுமையால் முருகன் மனவிரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கோமதி புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.
முருகன் மனைவிக்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து வேலை முடிந்து கோமதி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கணவர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.