என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haryana Steelers"

    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
    • இதில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

    தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    • இத்தொடரில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.

    முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

    புனே அணி கேப்டன் அஸ்லம் மிக மதிப்புமிக்க வீரராக தேர்வு பெற்றார். அவர் 142 ரைடு புள்ளிகளும், 23 டேக்கிள் புள்ளிகளும் பெற்றார். அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது.

    இந்தத் தொடரில் அதிக ரைடு புள்ளிகளை டெல்லி கேப்டன் அகமாலிக் பெற்றார். அவர் மொத்தம் 228 புள்ளிகளை எடுத்தார். சிறந்த ரைடராக தேர்வு பெற்ற அகமாலிக்குக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைத்தது.

    வீரர்களை மடக்கி பிடிப்பதில் சிறந்த வீரராக புனே வீரர் முகமது ரேசா தேர்வு பெற்றார். அவர் 97 புள்ளிகள் பெற்றார். அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.

    இறுதியில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • அரியானா அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே குஜராத் அணியினர் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில், குஜராத் அணி 47-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. இது குஜராத் அணி பெற்ற 2-வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 37-32 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி 7வது வெற்றியைப் பதிவு செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

    • தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.
    • தமிழ் தலைவாஸ் 7-வது இடத்திலும் உள்ளன.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.

    இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் முதல் இடத்திலும், புனேரி பால்டன் 3வது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 6-வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 7-வது இடத்திலும் உள்ளன.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், அரியானா அணி 36-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இது அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 30-28 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 32-26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 43-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய அரியானா அணி 38-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா 11 வெற்றி, 3 தோல்வி என 56 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் 39-37 என பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய அரியானா அணி 42-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது.

    இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா அணி 12 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 61 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

    மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணி 34-33 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்தது.

    இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    16 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 9 தோல்வி, ஒரு டிரா என மொத்தம் 38 புள்ளிகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 42-36 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும்

    புள்ளிப் பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடித்து வருகிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா 15வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய அரியானா 37-26 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 15-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் யு மும்பா அணி 47-31 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    ×