என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health centres"

    • பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
    • சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

    பீகார் மாநிலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்களை மூட அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அசோக் குமார் கோஷ் கூறியதாவது:-

    விதிகளை பின்பற்றி மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 1800 சுகாதார மையங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மையங்கள் அகற்றுவதற்கு அமைக்கப்பட்ட விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீண்டும் பின்பற்றாதபட்சத்தில் சுகாதார மையங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    மேலும் இந்த சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

    இதுகுறித்து பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

    சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 50 சதவீதம் பிரசவங்கள் அதிகரித்துள்ளது.
    • தடுப்பூசிகள் போடப்படு–கின்றன.

    மதுரை

    தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மருத்துவ பரிசோதனை மையங்களை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் விழிப்பு–ணர்வு பிரசாரங்கள் ஏற்ப–டுத்துவதோடு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க–வும் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை மாநகராட்சியின் கீழ் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிக–ளுக்கான மருத்துவ சேவை–கள், தாய் மற்றும் குழந்தை நலம், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய–வற்றை சிறந்த முறையில் வழங்கி வழங்குகின்றன.

    இதன் மூலம் மதுரை நகர மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள–தாக தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த 10 நாட்க–ளுக்கு முன்பு இரண்டு ஆரம்ப சுகாதார மையங்க–ளில் தாய்மார்களுக்கான புதிய வார்டுகள் திறக்கப் பட்டு அதில் 2 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுள்ளனர்.

    கடுமையான நோய்கள், சமூகம் சார்ந்த மற்றும் குழந்தை மருத்துவ சேவை–கள் அளிக்கும் திறன் கொண்டவையாக இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை மாநக–ராட்சி நகர்ப்புற மருத்துவம–னைகளுக்கு வரும் கர்ப்பி–ணித் தாய்மார்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படு–கிறது.

    பாலூட்டும் தாய்மார்க–ளுக்கு பாதுகாப்பான மற் றும் கவனமாக சிகிச்சை அளிக்கப்படும் போது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உள் ளிட்ட பல்வேறு சோத–னை–கள் மற்றும் தடுப்பூசி–கள் போடப்படு–கின்றன.

    மகப்பேறுக்கு முந்தைய பராம–ரிப்பு திட்டம் உட்பட கர்ப்பிணிப் பெண்களை செவிலியர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்ப–டுத்துகிறார்கள். மேலும் இதன் விளைவாக, சராசரி மாதத்திற்கு 70 முதல் 80 பிரச–வங்கள் என்று இருந் தது தற்போது 120 ஆக அதி–கரித்துள்ளது. இது எங்க–ளுக்கு பெருமைக்குரிய விஷயம்.

    தற்போது, மதுரை மாநக–ராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மகப் பேறு மற்றும் பிரசவத் திற்கு பின்னர் கவனிக்க வேண் டிய, வசதிகளை ஏற்படுத்த தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலம் நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

    மாநகராட்சியில் மேலும் ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகதார மையங்களில் கூடு–தல் கட்டிடங்கள் கட்டப் பட்டு, மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான வச–திகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்த வசதிகளை சுகா–தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அரசு மருத்துவமனை–களை நம்பியிருக்கும் கர்ப்பி–ணிப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக பயனடைந்து வருகின்றனர் என்றார்.

    ×