என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health ministry"

    • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது.

    கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்பட்டால், அவரிடம் சிகிச்சை பெற நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    அப்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முதல்முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதில், முரண்பாடுகளும், பொறுப்பேற்கும் தன்மையும் இல்லாததால், இந்த நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. தான் அனுமதிக்கப்படும் துறையை தவிர, நோயாளிக்கு சிறப்பு மருத்துவமோ, பகுப்பாய்வோ, மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டால், அவருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

    அந்த பரிந்துரையை சம்பந்தப்பட்ட டாக்டர்களே எழுத வேண்டும். முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், தங்கள் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அந்த பரிந்துரையை முடித்துவிடக்கூடாது.

    ஒவ்வொரு டாக்டரும் முந்தைய நாள் தங்களது குழுவினர் கவனித்த பரிந்துரை நோயாளிகளின் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், நோயாளிகள் பராமரிப்பையும், பயிற்சி மருத்துவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் முடியும்.

    துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.

    பயிற்சி மருத்துவர்களுக்கும் இது நல்ல பயிற்சி முறையாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது. குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    • ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    18-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ந் தேதி முடிகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இந்த தொடர் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் கூறியதாவது:-

    இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாக ஐபிஎல் இருப்பதால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

    அதேபோல், மது அல்லது புகையிலை ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

    • நாங்கள் கூறிய அதே கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
    • மத்திய அரசின் ஆணையை ஐ.பி.எல். அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும்.

    ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் மது, புகையிலை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்தியாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மக்கள் நலன் கருதி மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    இது தொடர்பாக ஐ.பி.எல் அமைப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அருண்சிங் துமாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,''இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாலும், அவர்கள் சுகாதாரமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாலும், ஐ.பி.எல் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா என்பதாலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், மத்திய அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் ஐ.பி.எல் அமைப்புக்கு சமூக, தார்மீகக் கடமை உள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் சரியானது ஆகும்.

    கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான மறைமுக விளம்பரங்கள் திணிக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு, கிரிக்கெட் வாரியங்களுக்கு நான் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். பசுமைத் தாயகம் அமைப்பு கிரிக்கெட் மைதானம் முன்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.

    இந்தியா ஒரு விளையாட்டு தேசமாக உருவெடுத்து வருகிறது. விளையாட்டுகளை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதனை உறுதி செய்கின்றன. விளையாட்டு அணிகள் மீதும் வீரர்கள் மீதும் தங்களது அன்பையும் விசுவாசத்தையும் விளையாட்டு ரசிகர்கள் வெறித்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். விளையாட்டுகள் மீதான இளைஞர்களின் பேரார்வத்தை புகையிற்ற புகையிலை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. இதைத் தடுக்கும் புகையிலைப் பொருட்களின் விளம்பரம், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புரவலர் செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதே கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    மத்திய அரசின் ஆணையை ஐ.பி.எல். அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும். சென்னை உள்பட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகள், மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:

    பஸ் ஸ்டாண்ட், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.

    தற்போது வரை 79 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 38 சதவீதம் பேர் இரண்டாம் தவணை செலுத்தி உள்ளனர்.

    நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. #MaduraiAIIMS #MaduraiHC
    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு  விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


    நிதிக்குழு ஒப்புதல் அளித்ததும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியது. இதையடுத்து கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #MaduraiAIIMS #MaduraiHC
    ×