என் மலர்
நீங்கள் தேடியது "Houthi rebels"
- பாலஸ்தீன போரை எதிர்த்து ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்
- எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் சூளுரைத்துள்ளார்.
லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஒரு வார காலமாக மிகப்பெரிய அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. லெபனான் முழுவதும் பரவியுள்ள ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்துச் சிதறியதால் 35 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. 4000 பேர் வரை படுகாயமடைந்தனர். தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா உயர் கமாண்டர்கள் பலரும் கொல்லப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் உள்ளிட்ட இடங்கள் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாலஸ்தீன போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகச் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவை போல ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறனர். எனவே தற்போது ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து 1,800 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை. எங்களைச் சீண்டுபவர்களை நாங்கள் அழித்தொழிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட்[Yoav Gallant] சூளுரைத்துள்ளார்.
- செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தனர்
- கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடந்துள்ளது
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பில் இருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கார்டெலியா மூன் [Cordelia Moon] எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர். ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹுதைதா [Hodeidah] வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மேலும் கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ள ஹவுதிக்கள் கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
- ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் -இல் ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று டெல் அவிவ் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே ஏவுகணை விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கத் தவறியதால் அது கீழே விழுந்துள்ளது என்றும் இதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏமனின் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலமுறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
பதிலுக்கு, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது.
செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், டிரோன்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அவ்வப்போது ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள், ஆயுத கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகளை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- மனிதாபிமான நிலைமையை மதிப்பிட டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.
- களத்தில் உள்ள எங்கள் சக ஐநா ஊழியர்களுக்கும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது.
பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் கண்டதை டிசம்பர் 26 ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது. நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். என்று இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடந்தபோது தாங்கள் நூலிழையில் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோவை டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக எனக்கு ஏற்பட்ட துயரச் சூழலில் இருந்து நலம் பெற வாழ்த்திய எனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.
என்னைப் பாதுகாக்க முயன்றபோது தன்னலமற்றவர்களாக இருந்த சக ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.
நாங்கள் மிகவும் ஆபத்தான தாக்குதலை எதிர்கொண்டோம், ஆனால் நானும் எனது சக ஐநா ஊழியர்களும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம். காயமடைந்த எங்கள் சக ஊழியரை மீட்டோம், அவர் உடல்நிலை நிலையாக உள்ளது.
களத்தில் உள்ள எங்கள் சக ஐநா ஊழியர்களுக்கும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது. நான் ஜெனீவாவுக்கு வீடு திரும்பும் வழியில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.