என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Humanity"

    • தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும்.
    • பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரத்திற்குட்பட்ட ஏழை, எளிய அன்றாட கூலி தொழில் செய்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும், வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் விலையில்லா அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- மனிதனிடம் இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வான எண்ணங்கள் சொல் வடிவம் பெறாமல் போவதற்கு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதே காரணம். இந்த நிலை இருக்க கூடாது.

    தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • துபாயில் மனித நேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழருக்கு பாராட்டு குவிகிறது.
    • ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான விசா வழங்குவதற்கான நிகழ்ச்சி அன்வர் கன்சல்டன்சி நிறுவனத்தில் நடந்தது. இதில் அமீரக பிரமுகர் அலி செய்யது புத்தாவில் அல் மத்துருசி, அன்வர் குழுமம் அப்துல் காதர், டாம் சர்வீஸ் ஷானவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கோல்டன் விசா பெற்று கீழக்கரை நகருக்கு பெருமை சேர்த்த ஹமீது யாசினுக்கு தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கம் செயற்குழு உறுப்பினரும், இஸ்லாமியாகல்வி நிறுவனங்களின் தாளாளருமான எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் களஞ்சியம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் சேக் ஹுசைன், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் கபீர், கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துபாய் தொழிலதிபர்கள் முகமது ஜலாலுதீன், பைரோஸ் அலிக்கான், கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, கீழக்கரை தி.மு.க, நகர செயலாளர் பஷீர் அகமது, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், நகர் மன்ற கவுன்சிலர்கள் எம்.எம்.கே காசிம், முகம்மது சுகைபு சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைன் உள்பட நூற்றுக்கணக்கான அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், அனைத்து சமுதாய நிர்வாகிகளும், தொழில் அதிபர்களும் மொபைல் மற்றும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாணவ பருவத்திலிருந்தே மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
    கரூர்:

    ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒருவார காலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கரூர் தாந்தோனி மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மனித நேய வார தொடக்க விழா நடந்தது. இதில் மாணவ-மாணவிகளால் "மனித நேயம் காப்போம்'' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் அடங்கிய கண்காட்சியினை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனித நேயத்தை மக்கள் மனதிலும், மாணவர்களின் மனதிலும் விதைக்கும் வகையில் கருத்தரங்குகள், கலை இலக்கியப்போட்டிகள், மேடை நாடகங்கள் என பல்வேறு வகையிலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

    மாணவ சக்தி என்பது அளப்பரியது. மாணவப் பருவத்தில் இருந்தே மனித நேயத்தை வளர்க்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனித நேயமே அன்பையும், இரக்கத்தையும், நேசத்தையும் உங்களிடத்தில் ஏற்படுத்தும். நல்ல மனிதனாக வாழ மனிதநேயமே அடிப்படைத்தகுதியாகும்.

    எனவே, மாணவர்களாகிய நீங்கள் உங்களிடத்தில் மட்டு மல்லாது, உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்திலும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இங்கே உங்களால் வரையப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ள அருமையான ஓவியங்கள், மனிதநேயம் சார்ந்த வரை படங்கள் வெறும் படமாக மட்டும் இருந்திடாமல் அனைவருக்கும் பாடமாகவும் அமைய வேண்டும். இணையதளம் இன்றியமையாததாகி இருக்கும் காலம் இது. உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் "இந்தகாலத்தின் அற்புத விளக்கே'' இணையதளம். மாணவர்கள் இணைய தளத்தை முறையாகப் பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் துறையில் வல்லுநர்களாக உயர வேண்டும். 

    அதே போல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. நமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செய்திகளையும் அன்றே தொகுத்து பாடல்களாக வழங்கியிருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அனைவரும் திருக்குறள் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் லீலாவதி, அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் அம்பாயிரநாதன், கற்பகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×