என் மலர்
நீங்கள் தேடியது "illegal"
- சிறு நிறுவனங்கள் பல ஏழை, எளிய மக்களுக்கு வாரம் கந்துவட்டி கொடுத்து வருகிறார்கள்.
- மக்களின் சுய மரியாதையை கெடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்.
திருப்பூர் :
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுச்செயலாளர் வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் யுவராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடன் கொடுத்து விட்டு தமிழகத்தில் கலெக்சன் டீம் என சட்டவிரோதமாக பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து வருகிறார்கள்.
சிறு நிறுவனங்கள் பல ஏழை, எளிய மக்களுக்கு வாரம் கொடுத்து வருகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழு தலைவிகள் என்ற பெயரில் சிலர் கமிஷன் பெற்று விட்டு ஏழை, எளிய மக்களிடம் குழு கடன் என்ற பெயரில் அடாவடி செய்து வருகிறார்கள்.
மேலும், மக்களின் சுய மரியாதையை கெடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். எனவே சட்டவிரோத மகளிர் சுய உதவிக்குழுக்களை தடை செய்ய வேண்டும். கலெக்ஷன் டீமையும் தடை செய்ய வேண்டும் என்றார்.
- புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
- காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில், திருப்பூர் மெயின் ரோட்டில் ஆனந்தராஜ் என்பவரது மகன்கள் பாக்கியநாதன்(34), பெரிய ராஜ்(32) ஆகியோர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக போலீசார் அங்கிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதே போல உணவு பாதுகாப்புத் துறையினர் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.
- ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்
- இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது
வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இரண்டாம் தாமஸ் ஷோல். ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்.
பிஆர்பி ஸியர்ரா மேட்ரே எனும் பிலிப்பைன்ஸ் நாட்டு போர்கப்பல், இரண்டாம் உலக போரில் பயன்பட்டு வந்தது. இதன் பயன்பாட்டு காலம் முடிவடைந்ததும் அக்கப்பலை பிலிப்பைன்ஸ் இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் நிறுத்தியது. அக்கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு தளமாக பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது.
அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலிப்பைன்ஸ் அக்கப்பலை இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் 1999-ல் நிலைநிறுத்தியது.
தற்போது இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது.
அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் அந்த இடத்தில் வேண்டுமென்றே, சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் அதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருகிறது.
இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது தனது நாட்டு கப்பல் ஒன்றிலிருந்து சீனா நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியது. இதற்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு தெரிவித்து விட்டது.
இப்பிரச்சனையை பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது.
- சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல்.
ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
- விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது
வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி
உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
- தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனை செய்ததில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோ தமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்டத்தில் மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை , சிவகிரி , சென்னி மலை காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 108 மது பாட்டி ல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து சுமார் 40 லட்சம் இந்தியர்கள் விடுபட்டுபோனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதற்கான கண்டனம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், தனது கருத்தை சமூக வலைதளங்களில் காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் அத்துமீறி குடியேறிய வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியாவைச் சேர்ந்த அகதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அவர்கள் வெளியேறாவிட்டால் சுட்டுக் கொலை செய்வது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவினை சிதைக்க சதி செய்வதாகவும், அவர்களை வெளியேற்றுவதே அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது மற்றொரு பதிவில், இந்தியாவில் சட்டவிரோதமாக வாழும் அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் அவர்கள் போக மறுத்தால், துப்பாக்கி முனையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் இந்த சர்ச்சை கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh