search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal activity"

    • சிம்கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியது அம்பலம்.
    • சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகிவை பறிமுதல்.

    சென்னை:

    கிரீம்ஸ்ரோடு முருகேசன் நாயகர் வணிக வளாகத்தில் 'ஆப்செட் பிசினஸ் சொல்யூஷன்' என்ற பெயரில் தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தை 5 ஆண்டுகளாக கன்னிராஜ் என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 800 பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்.

    முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன் களை திருப்பி செலுத்தும்படி கூறுவார்கள்.

    மத்திய அரசின விதி முறைகளை மீறி செல்போன் சிம்கார்டுகளை சிம்டூல் பாக்சில் பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக வோடபோன் நிறுவன அதிகாரி பிரபு புகார் செய்ததையடுத்து மத்திய உளவுப் பிரிவு டி.எஸ்.பி. பவன் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் குழுவினர் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள்.

    6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் போது சிம்கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் அருணுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சட்ட விரோதமாக பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கால் சென்டர் உரிமையாளர் கன்னிராஜ், பொறுப்பாளர் உமாபதி ஆகியோரை காணவில்லை என்றும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.

    • ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதாக கருதி கடந்த மார்ச் 1-ந்தேதி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் ஆலை செயல்படுவது போல் தினமும் பலர் அந்த ஆலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோத மாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில் தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.

    இந்த ஆய்வில் 50 தொழி லாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறி யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் மாரனேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய பயிற்சி பெற்ற போர்மேன்களை மட்டுமே பணியில் அமர்த்தி உரிய விதிமுறைகளை பின்பற்றி அவரது மேற்பார்வையில் மருந்து கலவை செய்ய வேண்டும் என்று கலெக்டர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இதில் முரண்பாடு இருந்தால் ஆலை மீதும், அந்த போர்மேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×