என் மலர்
நீங்கள் தேடியது "India A"
- முதல் இன்னிங்சில் இந்திய ஏ அணி 161 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய 'ஏ' அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஜூரெலின் அரை சதத்தின் மூலம் இந்திய அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி தடுமாறியது. அபிமன்யூ 17, கேஎல் ராகுல் 10, சாய் சுதர்சன் 3, கேப்டன் ருதுராஜ் 11, படிக்கல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னோட்டமாக நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி கேப்டன் ருதுராஜ் சொதப்பி உள்ளார். அவர் 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெறாத நிலையில் இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான இரண்டாவது அன்-அஃபிஷியல் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 7) துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து வந்த சாய் சுதர்சனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்து வந்தவர்களில் தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் ஜூரெல் 80 ரன்களும் அடித்ததால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா ஏ சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கல் நாசர் 4 விக்கெட்டுகளையும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் கோரெ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா ஏ அணி தடுமாற அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இன்னிங்ஸில் கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கேரெ வீசிய ஓவரை எதிர்கொண்ட கே.எல். ராகுல் குறிப்பிட்ட பந்தை விளையாட மனமின்றி அதனை தவிர்க்க ஸ்டம்ப்களை விட்டு நகர ஆயத்தமானார். அப்போது பந்தின் திசை மாறியது. இதனால் பந்து ஸ்டம்ப்களை கடந்து சென்றுவிடும் என்று கே.எல். ராகுல் எதிர்பார்த்தார்.
ஆனால், பந்து அவரின் கால்களுக்கு இடையில் கடந்து சென்று ஸ்டம்ப்களை தகர்க்க கே.எல். ராகுல் களத்தில் இருந்து வெளியேறினார். கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- முதல் இன்னிங்சில் ஜூரெல் 80 ரன்கள் அடித்தார்.
- 2-வது இன்னிங்சில் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிவடைந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 2-வது போட்டி கடந்த 7-ந்தேதி மெல்போர்னில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' பந்து வீச்சை தேர்தவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 'ஏ' 161 ரன்னில் சுருண்டது, அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன் ஆகியோர் டக்அவுட் ஆகினர். கே.எல். ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 223 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பிரசித் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரேல் 19 ரன்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தனுஷ் கோட்டியன் 44 ரன்கள் அடித்தார். மறுமுனையில் துருவ் ஜுரேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 'ஏ' 2-வது இன்னிங்சில் 229 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா 'ஏ'. தற்போது ஆஸ்திரேலியா 'ஏ' 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
- ஆஸ்திரேலியா அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
- இலக்கை ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ' - ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ 161 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 223 ரன்னும் எடுத்தன. 62 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரெல் 19 ரன்னுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய துருவ் ஜூரெல் 68 ரன்னிலும், நிதிஷ்குமார் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணா 29 ரன்னும், தனுஷ் கோடியன் 44 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 77.5 ஓவர்களில் இந்தியா ஏ 229 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கோரி ரோச்சிசியோலி 4 விக்கெட்டும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம் கோன்ஸ்டாஸ் 73 ரன்னுடனும், வெப்ஸ்டர் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், தனுஷ் கோடியன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை இந்திய ‘ஏ’ அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அணியில் பிரித்விஷா, மயங்க் அகர்வால், உஸ்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி, ரிஷப் பந்த், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ஈஸ்வரன், சகா, ஷிவம் துபே, உஸ்மான் கில், பிரியங் பஞ்சால், கவுதம், பரத், நதீம், மயங்க் மார்கண்டே, சைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், அவெஷ்கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 41 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது.
பின்னர் 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் ரகானே, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 14 ரன்னிலும், முகுந்த் 37 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இதனால் இந்தியா ‘சி’ அணி 85 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷான் 60 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்தார்.

ஷுப்மான் கில் சதத்தாலும், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தாலும் இந்தியா ‘பி’ 47 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 111 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 106 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘சி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 27-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் வந்த மெக்ராத் (58), கிரஹாம் (48), ஸ்டேலன்பெர்க் (47) சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ‘ஏ’.
பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.
தொடக்க வீராங்கனை புனியா 4 ரன்னில் வெளியேற, அதன்பின் வந்த வைத்தியா, மற்றொரு தொடக்க வீராங்கனை ரவுத் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். எஸ் பாண்டே 42 ரன்களும், ப்ரீத்தி போஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 46.2 ஓவரில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி 17-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
இந்த ஆட்டங்கள் விசாகப்பட்டனத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளதால் இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் ஆட்டம் பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்திலும், 2-வது ஆட்டம் ஆளுரிலும் நடைபெறும் என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா பி - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘பி’ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினார்கள். மயாங்க் அகர்வால் 36 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த ஷுப்மான் கில் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 109 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 117 ரன்கள் குவிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.

பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 24.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் நீண்ட நேர ஆட்டம் தடைபட்டது.
பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 40 ஓவரில் 247 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 93 பந்தில் 101 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஏ 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. காயம் அடைந்த புவனேஸ்வர் குமார் இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி அடைந்து விட்டார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக பந்து வீசினால், ஐந்தாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது.

இந்தியா ‘ஏ’ அணி அடுத்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியை 29-ந்தேதி எதிர்கொள்கிறது. இதனால் புவனேஸ்வர் 30-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டில் பங்கேற்க முடியாது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 7-ந்தேதி லண்டன் கியா ஓவலில் நடக்கிறது.
இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் சூர்ய குமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், ஈஸ்வரன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஜோடி சொதப்பியதால், அதன்பின் வந்த முன்னணி வீரர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யர் (7), அம்பதி ராயுடு (19), நிதிஷ் ராணா (19), குருணால் பாண்டியா (5) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

கலீல் அஹமது
அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 38 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 37.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 157 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குளேயெட் (24), பீட்டர் மலன் (47), சரேல் எர்வீ (20) சிறப்பான தொடக்கம் கொடுக்க 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.