என் மலர்
நீங்கள் தேடியது "India Team"
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராய்ப்பூர்:
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
- இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா வென்ற 7-வது கோப்பை இதுவாகும்.
இந்நிலையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்தியாவிற்கு என் வாழ்த்துகள். இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி. நியூசிலாந்து அணியில் இடம்பெற்றதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
என ரச்சின் கூறினார்.
4 போட்டிகளில் விளையாடிய ரச்சின், 263 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான ரிசர்வ் வீரர்களான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்திய அணி ஜிம்பாப்வே-க்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
- இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் கோப்பையுடன் நகர் வலம் வரவுள்ளனர்.
- இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
- இந்திய கேப்டன் ரோகித் சர்மா நடனம் ஆடி மகிழ்ந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.
கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் உள்ள ஐடிசி மவரியா விடுதிக்கு சென்றனர். அங்கு இந்திய அணி வீரர்களுக்கு மேளதாளங்களுடன் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விடுதிக்குள் நுழைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மேளதாள இசைக்கு ஏற்றவாரு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு விடுதி சார்பில் விசேஷமாக உருவாக்கப்பட்ட கேக்-ஐ இந்திய வீரர்கள் வெட்டினர். இந்திய வீரர்கள் வருகையால் தங்கும் விடுதி உற்சாக நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு பேருந்து மூலம் சென்றுள்ளனர்.
பிரதமரை சந்திக்கும் இந்திய அணியிர் மும்பையில் திறந்தவெளி வாகனத்தில் உலா வரவுள்ளனர். இதற்காக திறந்தவெளி வாகனம் சிறப்பு ஸ்டிக்கர்களால் அசத்தலாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
- இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.
- இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.
கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதோடு பிரதமர் மோடியுடன் அவர்கள் காலை உணவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் இன்று மாலை மும்பையில் நகர் வலம் வரவுள்ளனர்.
- சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.
மும்பை:
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்தது. போட்டியில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
ஆனால் மகுடம் சூடிய இந்திய அணி வீரர்களால் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதிப்போட்டி நடந்த பார்படோசை புயல் தாக்கியதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் 2 நாட்கள் அங்குள்ள ஓட்டலில் முடங்கினர்.
நிலைமை சீரானதும் விமான சேவை தொடங்கியதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இந்திய ஊடகத்தினர் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் தாயகம் புறப்பட்டனர்.
ஏறக்குறைய 16 மணி நேர பயணத்துக்கு பிறகு வீரர்களின் விமானம் வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர், இந்திய அணியினர் டெல்லியில் இருந்து விமானத்தில் மும்பைக்கு வந்தனர். அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் திறந்த பஸ்சில் பிரமாண்டமான வெற்றி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய வீரர்களின் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் தொடங்க தாமதம் ஆனதால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
இரவு 7.30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள் வெள்ளத்தில் பஸ் மிதந்து வந்தது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், கரகோஷமும் காதை பிளந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் மும்பையே ஸ்தம்பித்து போனது. ரசிகர்கள் கூட்டத்தில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பெரும் அளவிலான குப்பைகள் கிடந்தது. இதனையடுத்து உடனே களத்தில் இறங்கிய மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 9000 கிலோ குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தனர். உணவு பொட்டலங்கள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டதால் மறுநாள் காலை அப்பகுதியை சுத்தமாக காட்சியளித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இணையவாசிகள் துரித நடவடிக்கை மேற்கொண்ட ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை மெரின் டிரைவ் என்பது வி.ஐ.பி. பகுதி. இங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் அதிகம் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
- அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.
புதுடெல்லி:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வருகிற 28-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் 103 டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமகா உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.
- பிப்ரவரி-மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.
- வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோற்றது. மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 184 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
2025-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி விவரங்கள் முழுவதும் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 3-ந்தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியோடு இந்த ஆண்டு இந்தியாவில் போட்டி தொடங்குகிறது.
இதையடுத்து ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்ததாக பிப்ரவரி-மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.
அதன்பிறகு இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
அக்டோபரில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி அதன்பின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான தொடரிலும் விளையாடவுள்ளது. இந்திய அணி இந்த ஆண்டில் 18 இருபது ஓவர் போட்டிகளிலும், 10 டெஸ்டிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறது.
- இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
- தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன்.
டி20 லீக் போட்டிகளால் சர்வதேச கிரிக்கெட் தரம் குறைந்து வருகிறது. தலைசிறந்த முன்னாள் வீரர்களை போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை என்று இலங்கை அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனான அர்ஜுன ரனதுங்கா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரனதுங்கா கூறியதாவது:-
நான் 1990களின் தொடகத்தில் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணி கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்ற பேட்டிங் ஆர்டர்களை பெற்றிருந்தது. அவர்களை எங்களால் இரண்டு முறை (டெஸ்ட் போட்டி) ஆட்மிழக்க செய்ய முடியவில்லை. அவர்களை தொடர்ந்து அசாருதீன், தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, டிராவிட் பின்தொடர்ந்து வந்தார்கள்.
அவர்களிடம் அற்புதனமாக தரமான வீரர்கள் இருந்தனர். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். தற்போது அதை போன்ற கிளாஸ் பிளேயர்கள் இந்தியாவில் உள்ளனரா? நான் அப்படி நினைக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். நான் என்னுடைய 1990 இலங்கை அணியுடன், இந்த இந்திய அணிக்கு எதிரான விளையாடினால், என்னால் இரண்டு முறை ஆட்டமிழக்க செய்ய முடியும். இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிப்பேன்.

நாம் இளைஞர்களுக்கு முறையாக கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கிறோமா?. இந்தியாவில் கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்றோரை உருவாக்க முடியுமா?. ஒருவேளை தெண்டுல்கர், டிராவிட் போன்று? வெளிப்படைய நீங்கள் சொல்லுங்கள். எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள் பிரான்சிஸ் கிரிக்கெட்டுகளை விரும்புகின்றனர். நாட்டிற்காக விளையாடவில்லை என்றாலும், பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு போய்விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சிஸ் கிரிக்கெட் மட்டும்தான் இருக்கும்.
இவ்வாறு ரனதுங்கா தெரிவித்துள்ளார்.
- ஸ்பெயினிடம் 1-3 என்ற கணக்கில் முந்தைய நாளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
- அதற்கு சுடச்சுட இந்திய அணி பதிலடி கொடுத்து விட்டது.
புவனேஷ்வர்:
6-வது புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இந்திய வீரர்களால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
பிற்பாதியில் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு 32-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் கோல் போட்டு முன்னிலையை வலுப்படுத்தினார்.
முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. முந்தைய நாள் இதே ஸ்பெயினிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை நாளை சந்திக்கிறது.
இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இந்திய தரப்பில் நவ்னீத் கவுர், ருதஜா ததாசோ பிசல் கோல் அடித்தனர்.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. இந்திய பெண்கள் அணி அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் நாளை மல்லுக்கட்டுகிறது.
- இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது.
- சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றும், இந்த ஆட்டம் ஒரு தலைபட்சமாக இருக்கும் என்றும் இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்தியா மிகவும் பலமான அணியாக உள்ளது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி தழுவி 3 நாடுகள் போட்டி தொடரை இழந்தது.
மேலும் புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதில் தெளிவாக இந்திய அணியே மேலோங்கி இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் மோதிய பழைய போட்டிகளை வைத்து கூறுகிறோம் என்பது உண்மை தான். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எதிர் காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தானை விட பெரிய அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை தவிர வேறு யாரும் இல்லை. கேப்டன் பதவியில் ரிஸ்வான் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் சக வீரர்களிடம் இருந்து அவருக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள்.
எனவே எல்லா வகையிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும். இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட போட்டியாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும். வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.