என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Constitution"

    • உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது.
    • இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறுகையில், " இந்தியாவில் அரசியல் சாசனம் நிலைப்பதற்கு அதை எழுதியவர்கள் காரணமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஜனநாயகம் எப்படி நிலைக்கும் என கேள்வி எழுப்பியோருக்கு 75 ஆண்டுகால அரசியல் சாசனம் பதில் அளித்துள்ளது.

    உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது. இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    கல்வியை ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமையாக்கியது நமது அரசியல் சாசனம்" என்றார்.

    • நேற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி வழங்கப்பட்டது
    • 1976ல் இந்திரா காந்தி கொண்டு வந்த திருத்தம் செல்லாது என டாக்டர். சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்

    இந்திய தலைநகர் புது டெல்லியில் ரெய்சினா ஹில் பகுதியில் சென்ட்ரல் விஸ்டா எனும் பெயரில் இந்தியா முழுவதிற்குமான மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. இப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின்படி, ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டது.

    இக்கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க, புதிய கட்டிடத்திற்குள் நேற்று மதியம் சுமார் 01:00 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரும் சென்றனர். பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு "சம்விதான் சதன்" என பெயரிட பிரதமர் பரிந்துரை செய்தார்.

    அப்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி வழங்கப்பட்டது.

    இப்பிரதியை கண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் "முன்னுரை" (preamble) பகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 1976ல் கொண்டு வரப்பட்ட 42-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட "செக்யூலர்" மற்றும் "சோஷலிஸ்ட்" எனும் இரு வார்த்தைகள் தற்போது வழங்கப்பட்ட பிரதிகளில் இடம்பெறவில்லை. மதசார்பின்மையை வலியுறுத்தவும் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கவும் "செக்யூலர்" எனும் வார்த்தையும், பணக்காரர்களிடமே செல்வம் குவிந்திருக்கும் நிலையை தடுக்கவும், சமதர்மத்தை வலியுறுத்தும் விதமாகவும் "சோஷலிஸ்ட்" எனும் வார்த்தையும் அப்போது சேர்க்கப்பட்டன. தற்போது இவை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம் என அச்சப்படுகிறேன்" இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்தார்.

    "முதல் முதலாக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது இப்படித்தான் இருந்தது. அதில் அந்த இரண்டு வார்த்தைகளும் இல்லை. பல வருடங்கள் கழித்து 1976ல் தான் இடையில் அந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. உறுப்பினர்களிடம் தற்போது முதல்முதலாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் பிரதிதான் வழங்கப்பட்டிருக்கிறது" என இதற்கு பதிலளித்த இந்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார்.

    ஏற்கெனவே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். சுப்ரமணியன் சுவாமி, இந்த இரு வார்த்தைகளையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தது சட்டபூர்வமாக செல்லாது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 1949 நவம்பர் 26ல், அரசியல் நிர்ணய சபை உருவாக்கிய வடிவம் ஏற்கப்பட்டது
    • இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல

    வெள்ளையர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது.

    பல மதங்கள், இனங்கள், சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவுகள் கொண்ட இந்திய மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் விதமாக நாட்டிற்கு ஒரு திசைகாட்டியாக விளங்க அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை உருவாக்கி தரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை அரசியல் நிர்ணய சபை எனும் அறிஞர்களை கொண்ட குழு ஏற்று கொண்டது.

    1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கி தந்த அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்றம் ஏற்று கொண்டது.

    இந்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலுக்கு வந்தது.

    இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (சம்விதான் திவஸ்) என கொண்டாடப்படும் என 2015 அன்று மத்திய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2015 அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது சட்ட தினம் என கொண்டாடப்பட்டு வந்தது.

    அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், உரிமைகள், கட்டுப்பாடுகள், சலுகைகள், விதிகள் மற்றும் விலக்குகள், வலியுறுத்தும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், இந்த அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களை மக்கள் நினைவுகூரும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

    சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம், சுரண்டலை மறுக்கும் உரிமை, தனது மதத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்பதும் உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அதிக நீளம் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "மக்களுக்காக, மக்களால், மக்களின் ஜனநாயகம்" என புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் 3 அங்கங்களாக விளங்கும் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக துறை ஆகியவற்றின் கடமைகளையே வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் என்பதே இதன் பெருமைக்கு ஒரு சான்று.

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் வலுவாகவும் மாற்ற இயலாததாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஓரு சில விதிமுறைகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப பாராளுமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளன.

    1950ல் ஏற்று கொள்ளப்பட்ட அரசியமைப்பு சட்டத்தில் 2023 செப்டம்பர் மாதம் வரை, 106 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடந்தது.
    • இந்திய அரசியலமைப்பை எந்த அதிகார சக்திகளாலும் தொட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

     மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைதுள்ள நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள இந்த 18 வது பாராளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

    பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் முன்னதாக கையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் அணிவகுத்தபடி பாராளுமன்றத்துக்குள் சென்றனர் அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடந்தது.

    இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியும் அமித் சாவும் இந்திய அரசியலமைப்பின் மீது தொடுத்துள்ள தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    எனவே தான் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடி நாங்கள் வந்துள்ளோம். பதிவேற்கும்போதும் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடியே பதவியேற்போம். இந்திய அரசியலமைப்பை எந்த அதிகார சக்திகளாலும் தொட முடியாது என்று தெரிவித்துள்ளார். 

    • மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடி என முழக்கமிட்டனர்.
    • சிவபெருமானின் படத்தை காட்டி தன்னுடைய உரையை தொடங்குவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.

    மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

    இதற்கிடையே, மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடி என முழக்கமிட்டனர்.

    சிவபெருமானின் படத்தை காட்டி தன்னுடைய உரையை தொடங்குவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.

    அப்போது, அவையில் சிவபெருமானின் படத்தை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா ? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பனார். சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது அவை விதி என சபாநாயகர் தெரிவித்தார்.

    பின்னர் மேற்கொண்டு அவர் கூறியதாவது:-

    நான் காட்டிய சித்திரத்தில் நாங்கள் பாதுகாத்த சில சிந்தனைகள் உள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியா என்ற சிந்தனை மீது, அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் உள்பட எதிர்க்கட்சியினர் பலரும் குறிப்பிட்டு தாக்கப்பட்டனர்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    என் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள், இரண்டு ஆண்டு சிறை தண்டனை போடப்பட்டது. என்னிடம் 55 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. எதற்கும் அஞ்சாமல் கல்லை போல அமர்ந்திருந்ததாக விசரணை அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

    என்னுடைய வீடு என்னிடமிருந்து பறிக்க்கப்பட்டது, அது குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்திய அரசியலமைப்பை காப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளது.

    மற்ற உயிரினங்கள் போல நாங்களும் பிறப்போம், இறப்போம். ஆனால், பிரதமர் மோடி பயாலஜிக்கலாக பிறக்காதவர்.

    காந்தி இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல. நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி தான் பேசுகின்றன.

    இந்த தேசம் அகிம்சையின் தேசம், அச்சப்படும் தேசமல்ல. சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி நாடு வழி நடத்தப்பட வேண்டு என கூறியவர் சாவர்க்கர்.
    • நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே மிக நீண்ட காலம் எழுதப்பட்ட அரசியல் சாசனம் என்று மக்கள் கூறுகின்றனர்.

    குறிப்பிட்ட சிந்தனைகளையும், குறிப்பிட்ட சித்தாந்தங்களையும் உள்ளடக்கியது தான் நமது அரசியல் சாசனம்.

    அரசியல் சாசனத்தை திறந்தால் அதில் அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் குரல்களையும், சிந்தனைகளையும் கேட்க முடியும்.

    இந்த சிந்தனை எல்லாம் நமது நாட்டின் ஆழமான பாரம்பரியத்தில் இருந்து வந்தது.

    அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் வெவ்வேறு வடிவங்களின் ஒரே சிந்தனை தான்.

    அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி நாடு வழி நடத்தப்பட வேண்டு என கூறியவர் சாவர்க்கர்.

    உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக நீங்கள் பேசும்போது உங்கள் தலைவரான சாவர்க்கரை அவமதிக்கிறீர்கள்.

    என்னுடைய முந்தைய உரையில் மகாபாரத குருஷேத்திர போர்களை பற்றி குறிப்பிட்டேன். இந்தியாவில் இன்று அத்தகைய போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு பற்றி கேட்டால் பெரியார் என்று சொல்லுவோம்.

    நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    1000 ஆண்டுகளுக்கு முன்பு 4 வயது குழந்தை ஒருவன் அதிகாலையில் எழுந்து தவம் செய்து கொண்டிருந்தான். நான் பல ஆண்டுகளாக கடுமையாக தவம் செய்கிறேன். என்னை குருவாக்குங்கள் என்று அந்த சிறுவன் துரோணாச்சார்யாவிடம் கூறினார். ஆனால், நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர் அல்ல என்று துரோணாச்சாரியார் அந்த சிறுவனை நிராகரித்தார்.

    சிறுவன் மீண்டும் காட்டுக்குச் சென்று தன்னுடைய தவத்தை தொடர்ந்தான்.

    பாண்டவர்களும், துரோணாச்சாரியாரும் காட்டை விட்டு சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர்களை பார்த்து குறைத்தது.

    துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.

    அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள்.

    நாட்டில் உள்ள விமானங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு நிறுவனங்களை அதானிக்கு கொடுத்து விட்டீர்கள்.

    அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.

    நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு.
    • காலங்களை கடந்து, இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.

    மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு பயணம் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறோம்.

    இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது.

    அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

    இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

    75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு. இந்திய சாசனத்தை வடிவமைத்தவர்களுக்கு நன்றி.

    அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றி உள்ளனர். வெவ்வேறு பின்னணி கொண்ட 15 பெண்கள் அரசியல் நிர்ணய சபையில் இருந்தனர்.

    ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் கொண்டாட வேண்டிய நேரம் இது.

    காலங்களை கடந்து, இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.

    உலகின் பல்வேறு நாடுகளும் விடுதலைக்கு பின் பெண்களுக்கு வாக்குரிமை தர பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டனர். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

    இன்று மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர்.

    இன்று நாட்டின் குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஒரு பெண் தான். கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.

    நமது நாடு விரைவில் உலகின் 3வது மிகப்பெரிய சக்தி கொண்ட நாடாக உருவெடுக்கும். இது 140 கோடி இந்திய மக்களின் சங்கல்பம்.

    நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில் நமது அரசியல் சாசனம் தான் ஆதாரமாக உள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் இந்தியா ஒற்றுமையாகவே இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு 60 முறை மாற்றியுள்ளது.
    • எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பிறத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

    மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவரச சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் அல்ல.

    1976ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியபோது அந்த தீர்ப்பை மாற்றியவர் இந்திரா காந்தி. காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு 60 முறை மாற்றியுள்ளது.

    எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பிறத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவியை பறித்ததால், கோபத்தில் நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்தார்.

    தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். நேரு விதைத்த விஷ விதைக்கு, தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் இந்திரா காந்தி. அரசியல் சாசனத்தை காரணம் காட்சி சிலர் தங்களது தோல்வியை மறைக்க பார்க்கின்றனர்.

    தனது பதவி பறிப்பதற்கு காரணமானவர்களை எமர்ஜென்சி மூலமாக பழி வாங்கினார் இந்திரா காந்தி.

    தனது வெற்றி செல்லாது என அறிவித்த நீதிபதி கண்ணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வர இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை.

    அமைச்சரவை முடிவெடுத்த ஒரு அரசியல் மசோதாவை, ஒரு சாதாரண எம்.பி ஊடகத்தினர் முன்னிலையில் கிழித்தெறிந்தார்.

    2015ம் ஆணடு எங்களுடைய ஆட்சி வந்த பிறகு தான் அம்பேத்கர் சர்வதேச மையம் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதுதான் வழங்கப்பட்டது.

    நேரு முதல் ராஜீவ் காந்தி வரை இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தவர்கள். இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக நீண்ட கடிதங்களை எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு.

    நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின, பழங்குடியின மக்களை காங்கிரஸ் வஞ்சித்தது.

    மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மிக நீண்ட விவாகதங்களை நடத்தினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடியின் உரை இடையே, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    • கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம்.
    • மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம்.

    மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பற்றி கேட்டால் நாங்கள் பெரியார் என்று சொல்லுவோம். கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம். மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம். குஜராத் என்றால் காந்தி என்று சொல்லுவோம். சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவர்களே தங்களுக்கு முன்மாதிரி" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.

    அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.

    நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்" என்று தெரிவித்தார்.

    அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வியாழக்கிழமை) மலர் தூவி மரியாதை செய்கிறார். #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.



    தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பகல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் ஏற்பாடு செய்து உள்ளது.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரத மர் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசாரும், கமாண்டோ படையினரும் குவிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.  #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute 
    ×