என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvENG"

    • நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறியது.
    • டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 2வது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிறது.

    அடிலெய்டு:

    8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

    வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

    2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (10 விக்கெட்) மட்டும் தொடர்ச்சியாக விக்கெட் அறுவடை நடத்துகிறார். புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால் எதிரணியை அச்சுறுத்தலாம்.விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அரையிறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான்.

    எப்படி பார்த்தாலும் இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரிஷப் பண்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

    அடிலெய்டு:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த நிலையில் இன்று அடிலெய்டில் 2-வது அரைஇறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் தினேஷ் கார்த்திகா அல்லது ரிஷப் பண்டா என்ற நிலையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

    • அதிரடியாக ஆடிய ஸ்கிவர் புரூண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார்.
    • எமி ஜோன்ஸ் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா மற்றும் வியாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் சோபியா 10 ரன்னிலும், வியாட் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தகேப்சி 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 29 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதையடுத்து களம் புகுந்த கேப்டன் ஹெதர் நைட் மற்றும் நாட ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்கிவர் பிரண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த ஹெதர் நைட் 28 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    இறுதியில் எமி ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேத்தரின் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 50 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா (8), ஜெமிமா (13), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (4) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 7 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பாக ஆடிய ரிச்சா கோஷ் இலக்கை எட்ட போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே சேர்க்க முடிந்தது. ரிச்சா கோஷ் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாட் ஸ்கிவர் பிரண்ட் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டு மூலம் ஆட்டம் இழந்தனர்
    • தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றம்

    லக்னோவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா முதலில் 229 ரன்கள் சேர்த்தது. பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து பல்வேறு மோசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை பார்ப்போம்.

    1. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன்முறையாக இங்கிலாந்து அணி (நடப்பு சாம்பியன்) தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 1992-ல் 4 முறை தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

    2. இங்கிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் 129, 156 மற்றும் 170 ஆகிய ரன்களில் ஆல்அவுட் ஆகியுள்ளது. இதற்கு முன் இதுபோன்று தொடர்ந்து மூன்று முறை இங்கிலாந்து 200 ரன்களுக்கு முன்னதாக ஆல்அவுட் ஆனது இல்லை.

    3. 6 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்டானார்கள். இது ஒருநாள் போட்டியில் 3-வது சம்பவம் ஆகும். இதற்கு முன் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொண்டுள்ளன.

    • இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா அதிக ரன்ரேட்டை பெற்றுள்ளது
    • நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் மாறிமாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றன.

    நேற்றைய இந்தியா- இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன் இந்தியா முதல் இடத்தில் இருந்தது.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. எனினும், ரன்ரேட்டில் இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் 2.032 ஆகும். இந்தியாவின் நெட் ரன்ரேட் 1.405 ஆகும்.

    நியூசிலாந்து 6 போட்டியில் 4-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6-ல் நான்கில் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. நெட் ரன்ரேட் குறைவால் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை விட பின் வரிசையை பெற்றுள்ளது.

    இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    • உலகக் கோப்பையில் முதன்முறையாக விராட் கோலி டக்அவுட் ஆனார்
    • இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆகினர்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கிய ஆடுகளத்தில், இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க திணறினார்கள்.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 229 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். விராட் கோலியை கேலி செய்யும் வகையில், பார்மி ஆர்மி தனது டுவிட்டர் பக்கத்தில் வாத்து தலைக்குப் பதிலாக விராட் கோலி தலையை வைத்து போட்டோ ஒன்றை வெளியிட்டது.

    அதன்பின் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 129 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் முன்னணி வீரர்களான ஜோ ரூட் முதல் பந்திலும், பென் ஸ்டோக்ஸ் 9 பந்துகளை சந்தித்தும் டக்அவுட் ஆனார்கள்.

    இதை கேலி செய்யும் விதமாக பாரத் ஆர்மி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாத்து தலைக்குப் பதிலாக ரூட், ஸ்டோக்ஸ் தலையை வைத்து படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தது.

    இங்கிலாந்து அணியை ஆதரிக்கும் வகையில் ரசிகர்கள் பார்மி ஆர்மி அமைப்பு உருவாக்கினர். இந்த அமைப்பு இங்கிலாந்து விளையாடும் இடத்திற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கும். அதேபோல் இந்திய அணியை ஆதிரிக்கும் ரசிகர்கள் பாரத் ஆர்மி என பெயர் வைத்துள்ளனர். இந்திய அணி விளையாடும் இடத்திற்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.

    இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.


    இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.

    • இங்கிலாந்து அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அதில் இரண்டு பேர் புதுமுக வீரரர்கள் ஆவார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த அணி தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஜனவரி 7-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஜனவரியில் இந்தியா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 17 வரை மொகாலி, இந்தூர், பெங்களூரில் போட்டிகள் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29 வரை ஐதராபாத்தில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் (பிப். 2-6), 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டிலும் (பிப். 15-19), 4-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (பிப். 23-27), கடைசி டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 7-11) நடக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 3 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்று உள்ளனர். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, அட்கின்சன் ஆகிய அறிமுக வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். 20 வயதான சோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம் சோமர்செட் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அட்கின்சன், ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் அணியில் நுழைந்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, பேர்ஸ்டோவ், ஜோரூட், கிராவ்லி, ஆலிராபின்சன், பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஹார்ட்லி, ஜேக் லீச், பென் போக்ஸ், ஆலிபோப், மார்க்வுட்.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்த நிலையில் உடல் தகுதி பெறாத நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் சமி இடம் பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.மேலும், மற்ற 3 போட்டிகளில் அவர் இடம் பெற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    • கே.எல். ராகுல் உடன் மூன்று விக்கெட் கீப்பர்.
    • நான்கு சுழற்பந்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்) என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம பிடித்துள்ளனர்.

    பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

    முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. கே.எல். ராகுல், 7. கே.எஸ். பரத், 8. த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. அக்சார் பட்டேல், 12. குல்தீப் யாதவ், 13. முகமது சிராஜ், 14. முகேஷ் குமார், 15. பும்ரா, 16. ஆவேஷ் கான்.

    2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி முதல் மார்ச் 11-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.

    • கிரிக்கெட் விளையாட விண்ணப்பித்தது தெரிய வந்ததால் தந்தை திட்டினார்.
    • இருந்த போதிலும கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 22 வயது த்ருவ் ஜுரேல் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். இவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் அவரது தந்தை 800 ரூபாய் கடன் வாங்கி பேட் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    தனது கிரிக்கெட் விளையாட்டு குறித்து த்ருவ் ஜுரேல் கூறியதாவது:-

    நான் ராணுவ பள்ளியில் படித்தேன். அப்போது விடுமுறை காலத்தின்போது, ஆக்ராவில் உள்ள எக்லாவ்யா மைதானத்தின் கிரிக்கெட் முகாமில் கலந்து கொள்ள நினைத்தேன். அதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எனது தந்தையிடம் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    தந்தைக்கு தெரியவந்ததால் என்னை திட்டினார். என்றாலும் கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.

    மேலும், தந்தையிடம் கிரிக்கெட் பேக் (cricket kit) வேண்டும் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் தேவைப்படும் என்றேன். அப்போது என்னிடம் விளையாட வேண்டாம். விளையாட்டை நிறுத்து என்றார்.

    ஆனால், நான் அடம்பிடித்து, பாத்ரூம் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாயார், அவரது தங்கத் செயினை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்.

    எனது நண்பர்கள் என்னிடம், இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தெரிவித்தார்கள். நான் தேர்வானதை அவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் எந்த இந்திய அணிக்கு என்று கேட்டார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணிக்கு என்றேன். இதைக் கேட்டு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சி வசப்பட்டது.

    இவ்வாறு த்ருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார்.

    ×