என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsENG"

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

    இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி, அனுபம் வாய்ந்த ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என இரண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் ரெஹான் அஹ்மத் ஆகியோரையும் தேர்வு செய்தது.

    இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். 20 வயதான சோயப் பஷீர்-க்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டினர் மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிற நாட்டினர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் கடினமான விசா நடைமுறை உள்ளது. குறைந்தது ஏழு நாட்கள் கழித்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும்.

    இந்த நடைமுறையில்தான் இங்கிலாந்து அணி தவறு செய்து விட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வர இங்கிலாந்து திட்டமிட்டு இருந்தது. அதனால் விசாவுக்கு விண்ணப்பம் செய்வதிலும் அந்த அணி தாமதம் செய்து இருக்கிறது. அதில் தான் சோயப் பஷீர் சிக்கிக் கொண்டார்.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விரக்தியில் உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை" எனக் கூறி இருக்கிறார்.

    • விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை.
    • ஹாரி புரூக் விலகியது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    ஐதராபாத்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்டில் விளையாடியது. டிசம்பர் 26 முதல் ஜனவரி 4 வரை நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிவடைந்தது.

    இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.

    இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை. இது பேட்டிங்கில் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். அவருக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற மாட்டார். எஸ். பரத் அல்லது புதுமுக வீரரான துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்கள். ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடுவார். சுப்மன் கில் 3-வது வரிசையில் களம் இறங்குவார்.

    சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடஜா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். வேகப்பந்து வீரர்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோரூட் 11,416 ரன் எடுத்துள்ளார். 30 சதமும், 60 அரை சதமும் இதில் அடங்கும். கேப்டன் பென் ஸ்க்ஸ்டோஸ், பேர்ஸ்டோவ், கிரவுலி, பெண் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். ஹாரி புரூக் விலகியது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது.மார்க்வுட் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். டாம் ஹார்ட்லீ, ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அவர் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருகிறார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களம் காணுவது அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் இவ்வாறு ஒரே வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தது.

    தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரில் ஒருவர் கூட இல்லாமல் இந்தியா டெஸ்ட் ஆடுவது 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

    இதனையடுத்து இந்திய அணி சுழற்பந்து வீச்சை உபயோகப்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணி 64.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

    அதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள் தான் குறைவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில் தான் போட்டியின் மகிமையே இருக்கிறது.

    இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ் பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை.

    போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தருணத்திற்காக நீங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    நீங்கள் பேஸ் பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி. உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
    • கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் 2-வது நாள் இன்று தொடங்கியது. முதல் ஓவரை ரூட் வீசினார். 2-வது பந்தை பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால் 4-வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேஎல் ராகுல் 0 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் நழுவவிட்டார்.

    கில் - ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். பொறுமையாக விளையாடி வந்த கில் பவுண்டரி விளாச நினைத்து கேட்ச் கொடுத்து 23 (66) ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். அவ்வபோது பவுண்டரிகளும் பறக்க விட்ட இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.

    இதனால் 2-ம் நாள் மதிய உணவு இடைவெளி வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் 34 ரன்னிலும் கேஎல் ராகுல் 55 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • இங்கிலாந்து எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி விலகினார்.
    • கோலி விளையாடததற்கு பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போடிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.

    முதல் டெஸ்ட் தொடக்குவதற்கு முன்பு அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி கர்பமாகி உள்ளதால் அவர் விளையாடவில்லை எனவும் ஒருசிலர் அவரது தாயிக்கு உடல் நலம் சரியில்லை எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வந்தந்திகள் பரவி வந்தது.

     

    இந்நிலையில் எங்கள் தாய் உடல் நலத்துடன் உள்ளதாக விராட் கோலியின் சகோதரர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    இது குறித்து விகாஸ் கோலி கூறியதாவது:-

    என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை. எனது தாய் நலமாக உள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை.
    • சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவர் இடத்தில் சோயிப் பஷீர் இடம் பெறலாம்.

    விசாகப்பட்டினம்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந் தேதி) தொடங்குகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. ஏற்கனவே விராட் கோலி முதல் 2 டெஸ்டில் விளை யாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அணி பலவீனத்துடன் காணப்படுகிறது.

    இந்திய அணியில் சர்பிராஸ்கான் அல்லது ரஜத்படிதார் டெஸ்டில் அறிமுகமாகலாம். ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார். மேலும் வேகப்பந்தில் மாற்றம் செய்யப்படலாம். ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில் இந்த டெஸ்ட்டில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கடந்த டெஸ்டில் அந்த அணியின் வெற்றிக்கு ஆலிபோப், டாம் ஹார்ட்லே முக்கிய பங்கு வகித்தனர்.

    சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவர் இடத்தில் சோயிப் பஷீர் இடம் பெறலாம்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 133-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 132 டெஸ்டில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி 'டிரா' ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடக்கிறது.
    • வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந் தேதி) தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பதிலாக ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ஜேக் லீச் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக சோயிப் பஷீர் இடம் பிடித்துள்ளார்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
    • விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

    இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.

    அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

     

    விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.

    • நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன்.
    • குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன்.

    விசாகப்பட்டினம்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராஜத் பட்டிதாருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல பேட்டிங் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன் என பட்டிதார் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை கற்று எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சிக்கிறேன்.

    உள்நாட்டு சுற்றுகளில் பல இந்திய வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் இருந்து ராகுல் சாருடன் உரையாடி வருகிறேன். நான் ரோகித் பாயுடன் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் பேட்டிங் பற்றி பேச நேர்ந்தது. வலைகளில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவை அனைத்தும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

    என்று படிதார் கூறினார்.

    • ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • முதல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது.

    லண்டன்:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியடைந்திருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது. ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்.

    மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை.

    என்று வாகன் தெரிவித்தார்.

    • முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர்.
    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.

    முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர். இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

    இவரை தவிர மற்றொரு வீரரான முகமது சமி காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது தகவல் வெளியாகி உள்ளது.

    ×