என் மலர்
நீங்கள் தேடியது "Inexpensive"
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
- பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் அகமது நெய்னார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உசேன் வரவேற்றார்.
அபிராமம் மற்றும் நத்தம் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரபீக் நன்றி கூறினார்.
- ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு 130 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
முன்னதாக பள்ளி தமிழாசிரியர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரேவதி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளருமான சண்முகம், ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.